#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், அரும்பாக்கம் மதுரா
கன்னிகாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன
மஹா கும்பாபிஷேக விழா, வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ ஜடா முனீஸ்வரருக்கு முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 108 மூலிகை கொண்ட பொருட்களை யாகத்தில் செலுத்தினர், பின்னர் மங்கல இசை முழங்க கலசம் புறப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் முன்னாள் கேவிகுப்பம் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி ஏற்பட்டனை ஆலய நிர்வாகிகள், மற்றும் கன்னிகாபுரம் ஊர் பொதுமக்கள், என இந்தநிகழ்ச்சி ஏற்பட்டின செய்திருந்தனர்.


