#thiruppathigam. திருப்பதிகம்🌷...!
*🌷நான்காம் திருமுறை 11 வது திருப்பதிகம்🌷...!*
*🌷அருளிச்செய்தவர்: திருநாவுக்கரசு சுவாமிகள்...🌷*
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶
*பாடல் :05...!*
வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.
*விளக்கம்:*
விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணியாகும். நான்மறை ஆறங்கம் ஓதுதல் அந்தணர்களுக்குச் சிறந்த அணியாகும். பிறைக்குச் சிவபெருமானுடைய அழகிய சடை சிறந்த அணியாகும். எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணி திருவைந்தெழுத்தேயாகும்.
*தொடரும்...*
🟪🟫🟪🟫🟪🟫🟪🟫🟪🟫🟪🟪🟫🟪🟫🟪🟫🟪🟫🟪🟫🟪


