ShareChat
click to see wallet page
search
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தவெக ஆட்சி அமைக்க கவர்னர் அனுமதி மறுப்பு தமிழ்நாட்டில் பாஜக. ஆர்எஸ்எஸ் திட்டம் பலிக்காது நெல்லை ஆர்ப்பாட்டத்தில் ராபர்ட் புரூஸ் எம்பி பேச்சு நெல்லை.மே.08- தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்க அனுமதி மறுக்கும் கவர்னரின் செயலை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராபர்ட் புரூஸ்.எம்பி . தமிழ்நாட்டில் பாஜக.ஆர்எஸ்எஸ் திட்டம் பலிக்காது என்று தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக வுக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் தவெக ஆட்சி அமைப்பதற்கு அனுமதி மறுக்கும் தமிழக கவர்னர் அர்லேகரை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் சந்திப்பு இரயில் நிலையம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ராமேஸ்வரன் தலைமை வகித்தார்.முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்.முன்னாள் எம்பி ராமசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது - தேர்தலில் எந்த கட்சிக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் இருக்கிறதோ அந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது சட்டப்படி ஆளுநரின் உரிமை‌.சட்டப்பேரவையில் தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.கவர்னர் மாளிகையில் அல்ல. ஆனால் தமிழக கவர்னர் அர்லேகர். உள் நோக்கத்துடன் தவெக ஆட்சி அமைக்க அனுமதி மறுத்து வருகிறார்.பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இணைந்து இந்த சதி திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இந்தியாவில் 10 மாநிலங்களில் இதுபோல் மெஜாரிட்டி இல்லாத கட்சிகள் பாஜக ஆர்எஸ்எஸ் அனுமதியுடன் ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அவர்களின் திட்டம் ஒருபோதும் எடுபடாது. பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்புகள் ஒருபோதும் தமிழ்நாட்டில் நுழைய முடியாது.எனவே தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க கவர்னர் அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றார் ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் தமிழ்செல்வன். நாங்குநேரி பொறுப்பாளர் சசிகுமார்.விவசாய அணி மாநில செயலாளர் விவேக் முருகன். காங்கிரஸ் மாவட்ட செயலாளர் மருதூர் மணிமாறன். வள்ளியூர் வட்டார தலைவர் அருள்தாஸ்.நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் -வர்த்தக பிரிவு மாநில பொதுச் குழு உறுப்பினர் வெங்கடேஷ் தன்ராஜ். வக்கீல்கள் மரிய குழந்தை.சிவசுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் போது கோரிக்கைளை வலியுறுத்தி காங்கிரசார் கோஷமிட்டனர்.
செய்திகள் - GICE STATOM IELI CITY 2028 தனிழநாடு சபபான்ற கநதசிள் தனபபபநம் பபாக மறப சஈமகா ஈபாது ஈற நோக்கந்ரபன் ` நபிபக ஈiனs எழடம் ` { ನ 6  மாமாப்பு் ஈபாதிட்கு ஈதராா கஈரா்பரம் ஈக்சிப மFகத NATIONAL ENGINEERING COLLEGE _  5914544 Mllai ~ @ು KRNAGAR KOVILPATTI ஆர்ப்பாட்டம்  கண்டன அாபெரும் Nu 01 00 ೩೧d'o) +7 Wnie Fm ஈஎச L 5 00 ~೦೬೦ ಐ೦8೯ 190 யனர் 051 n M 0713 [  Eulo =_ 092567890 GICE STATOM IELI CITY 2028 தனிழநாடு சபபான்ற கநதசிள் தனபபபநம் பபாக மறப சஈமகா ஈபாது ஈற நோக்கந்ரபன் ` நபிபக ஈiனs எழடம் ` { ನ 6  மாமாப்பு் ஈபாதிட்கு ஈதராா கஈரா்பரம் ஈக்சிப மFகத NATIONAL ENGINEERING COLLEGE _  5914544 Mllai ~ @ು KRNAGAR KOVILPATTI ஆர்ப்பாட்டம்  கண்டன அாபெரும் Nu 01 00 ೩೧d'o) +7 Wnie Fm ஈஎச L 5 00 ~೦೬೦ ಐ೦8೯ 190 யனர் 051 n M 0713 [  Eulo =_ 092567890 - ShareChat