ShareChat
click to see wallet page
search
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial நெட்டூர் தாக்குதல்.. மனிதம் எங்கே??? சமூக நீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரான சாதிய தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான கொலைச் சம்பவங்கள் #Genz தலைமுறைகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.இந்த தலைமுறையாவது சாதிய தீண்டாமை அகற்றுமா என்னும் கேள்வி தீயாய் எரிகிறது!!! மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படை மனித உரிமைக் கொள்கைக்கு எதிராக நடைபெறும் இத்தகைய செயல்கள் நாகரிக சமூகத்திற்கு அவமானமாகும். சாதி வேறுபாட்டை முன்னிறுத்தி மனிதர்களை ஒதுக்குவதும், அவர்களின் உரிமைகளை மறுப்பதும், உயிரைப் பறிக்கும் வன்முறைகளில் இன்றைய #GENZ தலைமுறை ஈடுபடுவதும்,ரீல்ஸ் எடுத்து புளகாங்கிதம் அடைவதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை. அரசும், சட்ட அமலாக்க அமைப்புகளும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குரல்கள் பெரிய அளவில் எழுந்தாலும் சாதிய பாகுபாடு இல்லாத சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வுகளை பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முதலில் இணைந்து வழிநடத்த வேண்டிய அவசியமாகும். சாதி, மதம், மொழி உள்ளிட்ட எந்த வேறுபாடுகளையும் கடந்து மனிதநேயம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சாதிய தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான கொலைகளை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறோம். "மனிதம் உயரட்டும்; சாதிய பாகுபாடுகள் ஒழியட்டும்." #Makkalneedhimaiam #KamalHaasan_MP #GENZ
மக்கள்நீதிமய்யம் - மக்கள் IlIIIIL நீதி @Moiumofticioll மய்யம் நெட்டுர் NETTUR சாதி பெயர் சொல்லி Maial தாக்குதல் சமூக நீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரான சாதிய தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான GonZ தலைமுறைகளிலும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. இந்த தலைமுறையாவது சாதிய தீண்பாமை அகற்றுமா என்னும் கேள்வி தீயாய் எரிகிறது !!! மக்கள் IlIIIIL நீதி @Moiumofticioll மய்யம் நெட்டுர் NETTUR சாதி பெயர் சொல்லி Maial தாக்குதல் சமூக நீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரான சாதிய தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான GonZ தலைமுறைகளிலும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. இந்த தலைமுறையாவது சாதிய தீண்பாமை அகற்றுமா என்னும் கேள்வி தீயாய் எரிகிறது !!! - ShareChat