தமிழர்களே தமிழர்களே புரிந்து கொண்டீர்களா ,தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகள் மக்களுக்கு நலத்திட்டங்கள் ,இலவசங்கள் , மகளிர் உரிமை தொகை ஆயிரம் ,பொங்கலுக்கு 3000 ,கொரோனா காலகட்டத்தில் 5000,, வண்ண தொலைக்காட்சி பெட்டி மிக்ஸி கிரைண்டர் ,லேப்டாப் ,சைக்கிள், இப்படி பல நலத்திட்டங்களை வழங்கிய போது அதை கொச்சைப்படுத்தியவர்கள் தான் பாஜகவினர் ,அதிலும் கடுமையாக விமர்சனம் செய்தவர் நமது மதிப்புக்குரிய பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களும் மதிப்புக்குரிய அமித்ஷா ஜி அவர்களும்.
ஆனால் இன்று இந்தியா முழுவதும் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கொள்கையை விட்டு எதை விமர்சனம் செய்தார்களோ அதையே இலவசங்களும் பணமாகவும் மகாராஷ்டிரா மாநிலம் ராஜஸ்தான் அரியானா பீகார் போன்ற இடங்களில் அறிவித்த பிறகு இப்பொழுது மேற்கு வங்கத்தில் அறிவித்துள்ளார்கள், ஏன் தமிழகத்திலும் தேர்தல் அறிக்கையில் ரூபாய் 10,000 என்று அறிவித்துள்ளார்கள் மூன்று சமையல் எரிவாயு உருளை என்று அறிவித்துள்ளார்கள்.
திமுக அதிமுக இரண்டும் ஊழல் கட்சி என்று சொன்னவர்கள் தான் தேர்தல் பத்திரம் மூலமாக பல ஆயிரம் கோடியை ஈட்டி உள்ளார்கள் இதை என்னவென்று சொல்வது. இதை ஊழல் என்று சொல்வதா அல்லது ஊழலுக்கு மாற்று பெயராக உள்ள நன்கொடை அன்பளிப்பு பரிசு வளர்ச்சி நிதி என்று சொல்வதா?
ஆகவே மக்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் ,பகுத்தறிவுடன் வாழ வேண்டும் ,தமிழ் மண்ணை காக்க வேண்டும், தமிழன் தவறான பாதையில் செல்பவன் அல்ல, தமிழனுக்கு அன்பு பாசம் ஈவு இரக்கம் நற்குணங்கள் அனைத்தும் கொண்டவன். வந்தாரை வாழ வைக்க வேண்டும், வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக என்று வாழ்பவன் தான் தமிழன். மற்ற மொழி மாநிலத்தில் உள்ளவர்களும் நல்லவர்கள் தான் ஆனால் அந்தந்த மாநிலத்தின் மண்ணுக்கென்று ஒரு குணம் உண்டு. தமிழ் மண் பிறரை வாழவைக்கும் மண்.
தமிழனுக்கான அரசியல் அது பொதுவுடமை, சமூக நீதி ,அனைத்தும் அனைவருக்கும் ,சமத்துவம், பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும், என்று வாழ்பவன் தான் தமிழன், தமிழனை வளர்த்திய சித்தாந்தம் எதுவோ அதைத் தொடர்ந்து பின்பற்றினால் தமிழனின் வாழ்க்கை இனிப்பாக இருக்கும். புதிதாக ஊடுருவ நினைக்கும் சித்தாந்தங்களை தமிழர்கள் ஒதுக்கி வைக்க வேண்டும்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
சுப்ரமணியன் ந #👨மோடி அரசாங்கம்


