ShareChat
click to see wallet page
search
#திருவாசகம்_எனும்_தேன்🙏 #ஓம்_நமசிவாய_வாழ்க 🙏 🙏வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் வேண்டேன் பிறப்பு இறப்புச் சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறை தாள் பூண்டேன் புறம் போகேன் இனிப் புறம் போகல் ஒட்டேனே . #மாணிக்கவாசகர் 🙏 நிலை பெற்ற திருப்பெருந்துறை சிவனைச் சென்று சேர்ந்தேன் . அவன் திருவடியே துணையாகக் கொண்டேன் . அந்தத் திருவடியை விட்டுப் புறம் போக மாட்டேன் . என்னுள் அமர்ந்த இறைவனையும் எழுந்து புறம் போக விடேன் . எனக்குப் புகழ் வேண்டாம் . பொருள் வேண்டாம் . மண்ணுலக விண்ணுலக ஆட்சியும் வேண்டாம் . பிறப்பு இறப்பு இவையும் வேண்டாம் . சிவத்தை விரும்பாத புறச் சமயமும் வேண்டாம் . சிவத்தை வணங்காதார் இணக்கமும் வேண்டாம் . புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே , என்றும் வழுவாது இருக்க நீ வரம் தர வேண்டும் . நான் ஒருவேளை பிறக்க நேரிடில் , கருவுற்ற நாள் முதலாகவே உன் திருவடி காண்பதற்கு என் உள்ளம் உருக வேண்டும் . கருவாய்க் கிடக்கும் போதும் உன் கழலே நினைந்து உன்றன் நாமம் பயில வேண்டும் . உனது அருளால் திருவாய் பொலியச் சிவாய நம என்று நீறணிந்து உன் திருவடி சேரப் பணிக்க வேண்டும் . திருப்பெருந்துறையில் அன்று நீ பஞ்சாக்கிர மந்திரத்தை உபதேசித்தாய் . நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் , நமச்சிவாயவே நன்னெறி காட்டும் , என்பதால் என் நா நமச்சிவாயத்தை மறவாது சொன்னது . எனவே என் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை , என் முந்தை வினை முழுதும் ஓய உரைப்பேன் . என் சிந்தை விட்டுச் சிவன் எங்கும் புறம் போக விடேன் . சிவனை விடுத்து நானும் புறம் போக மாட்டேன் . திருந்து வார்பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தம் மேவிய சீர் இருந்தவாறு எண்ணி ஏசறா நினைந்திட்டு , என்னுடை எம்பிரான் என்றென்று , அருந்தவா உனை நினைந்தே ஆதரித்து அழைத்தேன் . அலைகடல் அதனுளே நின்று , கயிலை புகு நெறி இது காண் , பொருந்த வா என்று அருளிய பெருமானே ! இனி உன்னை விட்டுப் புறம் போக மாட்டேன் . பேதம் இல்லது ஓர் கற்பு அளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே ! ஏதிலார் எனை ஏதமே முன்பு பேச , நீ எனை என் செய்தாய் . சாதல் சாதல் பொல்லாமை அற்ற தனிச் சரண் சரணாம் எனக் , காதலால் உனை ஓதக் கழுக்குன்றில் உனைக் காட்டிச் சென்றாய் . இந்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே காரணமாய் , அந்தரமே திரிந்து போய் அரு நரகில் வீழ்வேனைச் , சிந்தைதனைத் தெளிவித்து , சிவம் ஆக்கி எனை ஆண்டு அந்தம் இலா ஆனந்தம் அள்ளித் தந்த அம்பலவா , உனை விட்டுப் புறம் போகேன் . வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு , உனைச் சிறிதும் உணராது உலவுகின்ற வேளையிலே , எனைப் பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பு அறுத்த இணையிலியை , கணப் பொழுதும் நான் மறந்து இவ்வுலகில் இருப்பேனோ ! அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலவா , உனைத் தினமும் நான் தொழுவேன் , ஒரு போதும் உனைப் பிரியேன் . உருத்தெரியா காலத்தே என் உள் புகுந்து என் உளம் மன்னி , கருத்து இருத்தி கருணையினால் ஆண்டு கொண்ட , திருத்துருத்தி மேயானை , தித்திக்கும் சிவபதத்தை , நான் இனிப் புறம் போகல் ஒட்டேன் என்கிறார் . #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏நமசிவாய ஓம்✨ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
00:26