Naam tamilar katchi
தாராபுரம் சட்டமன்ற தொகுதி - கொண்டரசாம்பாளையம் பேரூராட்சி.
பேரூராட்சி பகுதியில் நீண்ட நாட்களாக முறையற்ற முறையில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்தது. அதை முறையாக தரம் பிரித்து அகற்றாமல், இன்று (21-07-2026) பேரூராட்சி நிர்வாகம் JCB இயந்திரம் கொண்டு குழி தோண்டி அதிலேயே கொட்டி மூடி மறைக்க திட்டமிட்டது.
இது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-க்கு எதிரானது, நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதிக்கும் செயல்.
இதனை அறிந்து உடனடியாக களத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சி -மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சஞ்சய்காந்தி, சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர் திரு.சசிக்குமார், தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர் திரு.ரத்தினசாமி ஆகியோர் அந்த முறைகேடான செயலை தடுத்து நிறுத்தினர்.
பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பையை மூடி மறைக்கும் வேலையை கைவிட்டு, முறையான குப்பை மேலாண்மை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
நாம் தமிழர் கட்சி,
தாராபுரம் தொகுதி. #🗞️இன்றைய தேர்தல் களம்🟠