MUTHUPANDIAN RAMKUMAR
#புதன் கிழமை பக்தி ஸ்பெஷல்
பிரத்யங்கிரா தேவி மிகவும் விசேஷமானவள். சிங்கமுகத்துடன் கடும் உக்கிரமாகவும்,ஆயுதங்களுடனும் தரிசனம் தருகின்றாள்
பிரகலாதனின் துன்பத்தைப் போக்குவதற்காக மகாவிஷ்ணு மிகவும் உக்கிரமாக உக்கிரமூர்த்தியாக நரசிம்மராக வெளிப்பட்டு இரணியனை வதம் செய்கின்றார்.அதன் பின்னரும் அவரது உக்கிரம் குறையாமல் அந்த கோபத்தில் இருந்து வெளிவர முடியாமல் இருக்கிறார்.
அப்போது தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிடுகிறார்கள்.சிவபெருமான் பாதி சிங்கமாகவும் பாதி பறவையாகவும் இணைந்த சரபேஸ்வரராக மாறுகிறார்.
சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணிலிருந்து அம்பிகை பிரத்தியங்கிராதேவியாக ஆயிரம் சிங்க முகங்கள்,இரண்டாயிரம் கைகளுடன் வெளிப்பட்டாள்.
பிரத்தியங்கிராதேவியும்,அம்பிகை சூலினியும் சரபேஸ்வரரின் இரண்டு இறக்கைகளில் ஐக்கியமாகிக் கொள்கிறார்கள்.பின்னர் சரபேஸ்வரர் நரசிம்மரின் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு நரசிம்மரை தனது இறக்கைகளால் அன்புடன் அரவணைத்து கொள்கிறார்.அச்சமயம் நரசிம்மரின் கோபம் தணிகிறது
கும்பகோணம் திருநாகேஸ்வரம் அருகில் உள்ள அய்யாவாடி அருகில், பிரத்தியங்கிராதேவிக்கு என தனிக்கோயிலே உள்ளது.
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள மொரட்டாண்டிஎன்னும் ஊரில் உள்ள பிரத்யங்கிரா தேவி கோவில்
பிரத்யங்கிரா தேவிக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு.அபராஜிதா என்றால் 'யாராலும் வெல்ல முடியாதவள் என்று பொருள்..
பிரத்யங்கிராதேவி யந்திர மந்திர தந்திரங்களுக்கு அதிபதியான அதர்வண பத்ரகாளி ஆவாள் இவளது மந்திரத்தை“அங்கிரஸ்” “பிரத்யங்கிரஸ்” என்ற இரு ரிஷிகள் சேர்ந்து உருவாக்கியதால் அவர்களது பெயராலேயே ”பிரத்யங்கிரா” என அழைக்கப்படுகிறாள்.இவள் அனுமாரை காவலாகக் கொள்பவள்
ராவணனின் மகன் இந்திரஜித்,ராமரையும்,லக்ஷ்மணனையும் தன் படை பலத்தால் போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்தான் எனவே பிரத்யங்கிராதேவிக்கு உகந்த நிகும்பலா வேள்வியை தேய்பிறை அஷ்டமி தினத்தின் நடுநிசியில் மிக ரகசியமாக நடத்துகிறான்.
.இந்திரஜித் இந்த யாகத்தை பூர்த்தி செய்து விட்டால் அவனை வெல்ல யாராலும் முடியாது என விபீஷணனின் உதவியால் அறிந்த .லக்ஷ்மணன் முதலில் யாகத்தையும் பின் இந்திரஜித்தையும் அழித்தார்.
இந்த யாகம் செய்த இடமாக கருதப்படும் புதுச்சேரி மாவட்டத்தில் மொரட்டாண்டி என்னும் ஊரில் பிரத்யங்கிரா தேவிக்கு 72 அடி உயர மிக பிரம்மாண்டமான உருவத்துடன் கூடிய கோவில் அமைந்துள்ளது. .