ShareChat
click to see wallet page
search
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் நமக்கு கிடைக்கும் அனைத்திற்கும் ஏதோ ஒரு விலையை கொடுத்தாக வேண்டும். இறைவனின் அன்பும் கூட மாமருந்து தான். நாம் பிறரிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அன்பை பகிர்ந்தால் மட்டுமே கிடைக்கும். ஆகவே பிரபஞ்சத்தில் இருந்து நீங்கள் எடுத்துக் கொள்வதைப் போல கொடுப்பதற்கும் மனம் இருந்தால் பிரபஞ்சம் உங்களுக்காக கொடுப்பதும் மென்மேலும் அதிகமாகும். செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் வாழ்க்கையில் சொகுசு சந்தோஷப்படுத்தும் என காத்திருந்தால் வாழ்க்கை முழுக்க காத்திருக்க வேண்டியதுதான். ஏன்னா மனசுக்கு போதும்னு கிடையாது இன்னொரு கார், இன்னொரு வீடு, இன்னொரு போன் என்று போய்க்கிட்டே இருக்கும். ஆனா பாறை மேல உட்கார்ந்தும் ஆனந்தமா இருக்க தெரிஞ்சவனுக்கு, உலகத்துல எங்க போனாலும் வீடு மாதிரிதான். அவனுக்கு வெளியில இருந்து சந்தோஷம் தேவையில்லை. அவர்களே சந்தோஷமா தான் இருப்பாங்க வாழ்க்கைனா என்னானு தெரியுமா! ? ஆண்டு அனுபவிக்க வேண்டிய வயசுல கஷ்டத்தையும்... முடியாத காலத்துல எல்லா வசதியையும் கொடுக்கும்.. என்றும் #இறைவன் #பாதம் #பணிந்திருங்கள். #பக்தியும்..! #ஆலய #வழிபாடும்..!! #பரமாத்மாவாகிய #கடவுளின் மீது ஏற்படும் #நாட்டமே #பக்தி எனப்படுகிறது. இல்வாழ்வில் உள்ளவர்களின் மனதை புலன் மயக்கங்களில் இருந்து விடுவித்து மேன்மையடையச் செய்வதே பக்தியின் நோக்கமாகும். பண்டைய காலங்களில் ப்ரம்மச்சரியம், கிரஹஸ்தம் ஆகிய இரண்டு நிலைகளிலும் பக்தியானது நம்பிக்கையோடு கூடிய ஆரம்ப நிலைப் பயிற்சியாகத்தான் விளங்கியது. வானப்பிரஸ்தம் என்ற ஆசிரமத்தில் நுழையும் போதுதான் அது தீவிரமடைகிறது. அப்போது கிரியையும் வளர்கிறது. அதாவது மலர் பறித்தல், மாலை கட்டுதல், பூஜை முறைகளைக் கையாளுதல், இறை அடியார்களுக்கு தொண்டு செய்தல் போன்ற கிரியைகள். இத்தகைய சரியை, கிரியை வழிகளில் சென்று பாமரர்களும் பயனடையும் பொருட்டு ஆலயங்கள் அமைக்கப்பட்டன. பிற்காலங்களில் பாமரர்கள் கோவிலுக்குள்ளேயே செல்ல முடியாத நிலை உருவாகியது என்பது வேதனையான விஷயம். ஆலயம் என்பது ஆன்மாவை பதியாகிய இறைவனோடு லயமாக்குகிற புனிதமான இடம் என்பது பொருள். கோ என்றால் அரசன். அதாவது உலகுக்கே அரசனாகிய இறைவன் வாழும் வீடு, அதுவே கோயில். எனவேதான் உலகிலும், உடலிலும் உள்ள தத்துவங்களை விளக்கும் விதமாக ஆலயங்களும், அதிலமைந்துள்ள மூர்த்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எனவேதான் நம் முன்னோர்கள் ஆலயங்களை அமைப்பதற்கென்று சில ஆகமங்களை உண்டாக்கி வைத்தார்கள். அத்தகைய ஆலயங்களில் சென்று வழிபடுவதற்கும் கூட சில விதிமுறைகள் காணப்படுவது எதற்காகவென்றால், ஆலய வழிபாட்டின் மூலம் மனமானது லயப்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இன்றைய நிலையோ வேறு விதமாக இருக்கிறது. ஏதோ கோவிலுக்கு போக வேண்டுமே என்ற நிர்பந்தம் இருப்பதாகக் கற்பித்துக் கொண்டு போகிறார்கள். பல ஊர் கதைகளைப் பேசிக் கொண்டு வலம் வருகிறார்கள். உட்காராமல் போனால் சனீஸ்வர பகவானும் அவர்களுடனேயே வீட்டுக்கு வந்து விடுவார் என்று சொல்லி கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டு போகிறார்கள். இதனால் யாதொரு பயனுமில்லை. உட்காருவது என்றால் தியானத்தில் அமர வேண்டும் என்பதே கருத்து. மன ஒருமைப்பாடும், ஆன்ம நேயமும், எல்லாம் இறையாற்றலின் சொரூபமே என்ற பரந்த நோக்கும் வளர வேண்டும் என்தற்காகவே ஆலய வழிபாடு அமைந்துள்ளது. மனமானது சிதறலடையாது இறைவனின் பால் செலுத்தப்பட வேண்டும் என்பதே நோக்கம். அதுவே பயிற்சி. மனம், மொழி, மெய் ஆகிய திரிகரண சுத்தியுடன்தான் ஆலயங்களுக்குள் போக வேண்டும் என்பது கோட்பாடு. இறை சிந்தனையல்லாது வேறு எந்த உலக விவகாரங்களும் மனதில் இருக்கக் கூடாது என்பது விதி. நான் என்ற அஹங்கார எண்ணத்தை கொடிமரத்திற்கு முன் உள்ள பலிபீடத்தில் பலியிட்டு விழுந்து வணங்கி விட்டே உள்ளே செல்ல வேண்டும். கூச்சலும், கோஷங்களும் உண்மையான வழிபாடு ஆகா. அமைதியும், சாந்தமும் கொண்ட மனதோடுதான் ஆலய வழிபாடு மேற்கொள்ள வேண்டும். பல மகான்களும், ஞானிகளும் ஆழ்ந்து எண்ணிய ஆழமான, உயர்ந்த எண்ணங்கள் நிரம்பிய இடம் ஆலயமாகும். எனவே வழிபாடு முடிந்தவுடன் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு தியானிப்பதன் மூலம் அத்தகைய உயர்ந்த எண்ணங்களும், நோக்கங்களும் தியானிப்பவர்கள் உள்ளங்களிலும் பிரதிபலிக்கும். இதுவே ஆலய வழிபாடு செய்பவர்கள் பெறும் பெரிய பேறாகும். இத்தகைய மனப்பான்மையுடன் மக்கள் சென்று வழிபடவழிபட ஆலயத்தின் சக்தியானது இன்னும் அதிகமாகும். ஆலயத்திலிருந்து சக்தியைப் பெறுவதோடு ஆலயத்தின் சக்தியையும் பெருக்கும் சேவையை நாம் செய்கிறோம். ஆலய வழிபாட்டின் ஒப்பற்ற பயன் இதுவேயாகும். #அன்புடனும், #ஒருமனதுடனும் ₹சேவிப்பவர்களை #ஆண்டவன் #நல்வழிப்படுத்துவதோடு #முடிவில் #தன்னோடு #ஐக்கியப்படுத்திக் #கொள்கிறார். #திருச்சிற்றம்பலம் சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் #பந்தம், #பற்றை #விட்டு #விலக..! #சிவசிவ ஸ்ரீ #ருத்ரத்தின் #இறுதியில், #மஹா #ம்ருத்யுஞ்சய #மந்த்ரம் வரும். மிகப் பிரபலமானது. “த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம். உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்க்ஷீய மாம்ருதாத்.” இதில் ‘உர்வாருகமிவ பந்தனாத் முக்க்ஷீய’ என்ற வரிகளின் அர்த்தம், ‘வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து விடுபடுவது போல, என் பந்தங்களிலிருந்து நான் விடுபடவேண்டும்’ என்பதாக அமையும். வெகு நாட்களாக ஒரு சந்தேகம். எந்தப் பழமாயிருந்தாலும், பழுத்தவுடன், ‘பட்’டென்று தன் கொடி, செடி அல்லது மரத்திலிருந்து அறுந்து விழுந்து விடும்தானே! இதில் வெள்ளரிப்பழத்தை மட்டும் ஏன் இந்த மந்திரத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது என்று. பல வேத விற்பன்னர்களிடம் கேட்டும் திருப்தியான பதில் கிடைக்கவில்லை. பின் ஒருமுறை, மஹா பெரியவா இதற்கு ஒரு அற்புதமான விளக்கம் அளித்திருந்ததைப் படிக்க நேர்ந்தது. அதாவது, மற்ற பழங்கள் போல் அல்லாமல், வெள்ளரிப் பழம் கொடியில் பூத்துக் காய்த்துப் பழுக்கும். வெள்ளரிக்கொடி, தரையோடு தரையாய்ப் படரும். அதனால், வெள்ளரிப் பழமும், தரைத் தளத்திலேயே பழுத்துக்கிடக்கும். அது பழுத்தவுடன், அதைச் சுற்றியுள்ள கொடியின் கிளைகள், இலைகள் போன்றவை தன்னால் (தானாகவே) அந்தப் பழத்தை விட்டு விலகுமாம். அதாவது, பழம் கொடியிலிருந்து உதிர்வதில்லை. கொடிதான் பழத்தை விட்டு விலகுகிறது. அதுபோல, ஞானிகளுக்கு, அவர்கள் பந்தம், பற்றை விட்டு விலக வேண்டு மென்பதில்லை. சரியான தருணத்தில், ‘இவர் பழுத்து விட்டார்’ எனத் தெரிந்தால், பந்தம், பற்று போன்றவை அவரை விட்டு தாமாகவே எப்படி வெள்ளரிக் கொடி தன் பழத்தை விட்டு விலகுகிறதோ, அது போல விலகி விடுமாம். அற்புதமான விளக்கம். நமது மந்திரங்களின் ஆழமான கருத்தும் புரிந்துகொள்ள நேர்ந்தது. #திருச்சிற்றம்பலம் பொதுவாக குறை கூறுபவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். 1) நம் வாழ்க்கை தரத்திற்கு உயர முடியாதவர்கள். 2) நம்மிடம் இருப்பது அவர்களிடம் இல்லாமல் இருப்பது. 3) நம்மை போலவே இருக்க முயற்சித்து, முடியாததால். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #தெய்வீக சிந்தனைகள்
🙏🏼ஓம் நமசிவாய - நல்லதே நடக்கும் சிவ குடும்பத்தின் அருள் ஆசி உங்களுக்குப் பரி பூரணமாகக் கிடைக்கட்டும் நல்லதே நடக்கும் சிவ குடும்பத்தின் அருள் ஆசி உங்களுக்குப் பரி பூரணமாகக் கிடைக்கட்டும் - ShareChat