#📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இனி திமுக தனித்து நின்று வெல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இனிமேல் ஒரு திமுக ஓட்டு கூடக் காங்கிரஸுக்குப் போகக் கூடாது என்பதே என் விருப்பம்.
இது நான் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்வதல்ல. நன்கு யோசித்துத்தான் சொல்கிறேன்.
தமிழகத்தின் இன்றைய கேவலமான நிலைக்கு, கூட்டணிக்குள் பிரச்சினையை ஏற்படுத்திய காங்கிரஸ் மிக முக்கியக் காரணம்.
காங்கிரஸ்காரர்களின் தகுதியற்ற பேராசையும், அதற்குப்பின் நிகழ்ந்த நிகழ்வுகளும் தான் திருமாவையும் அவர் கட்சியில் பலவீனப்படுத்தி, தலித் வாக்குகளைப் பெருமளவில் தவெகவை நோக்கித் தள்ளியது. கூட்டணியை பலவீனப்படுத்தியது.
திமுகவுடன் கொள்கை அளவில் இணக்கமானவர்கள், ஓரளவுக்காவது அறத்தைப் பேணுபவர்கள், கம்யூனிஸ்ட்டுகளும், விசிகவும் மட்டுமே. அவர்களுடனான கூட்டணி தான் இயற்கையான கூட்டணி. காங்கிரஸுடனான கூட்டணி அல்ல.
இவர்களைத் தவிர, அரசியல் காரணங்களுக்காக கூட்டணி சேரத்தான் வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் யாருடன் வேண்டுமானாலும் - ஏன் தவெகவுடன் கூடக் - கூட்டணி சேருங்கள், ஆனால், காங்கிரஸுடன் மட்டும் கூட்டணி சேர்ந்து விடாதீர்கள்.
திமுக போன்ற மிகச் சிறந்த நண்பனைப் பெற காங்கிரஸுக்குத் தகுதியே இல்லை. மீண்டும் ஒருமுறை அவர்களுடன் இணையாதீர்கள்.
ஒன்றிய ஆட்சிக்கு முடிந்தால் மூன்றாம் அணியை நிறுவப்பாருங்கள். இல்லை என்றால், மத்தியில் பாஜகவைத் துரத்த உங்கள் ஆதரவுடன் தான் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை வந்து கூட்டு சேர வேண்டி இருந்தால் பரவாயில்லை. சேர்ந்து கொள்ளுங்கள். அந்த ஆதரவுக்குப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். 'நீட்'டை நீக்கி விடுங்கள். தமிழகத்துக்குப் பலன் கொண்டு வாருங்கள். ஆனால், இப்போது காங்கிரஸ் நிகழ்த்திய துரோகத்தின் ரணம் ஆறாது. ஆறவும் கூடாது. அதை மறந்தீர்கள் என்றால், அறிவற்றவர்கள் ஆகிவிடுவீர்கள்.
அதனால், இங்கே, தமிழ் நாட்டில் ஒரு திமுக வாக்கு கூட காங்கிரஸுக்கு விழக்கூடாது என்று நினைக்கிறேன். அவர்கள் எதிரணியில் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது. இந்த வெண்ணை வெட்டிச் சிப்பாய்களைத் தேவைக்கு அதிகமாகவே தூக்கிச் சுமந்து விட்டீர்கள்.
போதும். இவர்களால் தமிழ்நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை. இன்றுவரை இங்கே இவர்கள் அழிவைத்தான் தொடர்ந்து நிகழ்த்தி இருக்கிறார்கள்.


