#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
தடாகம் எங்கும் தவமிருக்கும்
தாமரை மொட்டுகள்
தண்ணீரில் தன் முகம் பார்த்து
கர்வம் வந்துவிடக் கூடாதென
அரணாய் தாமரை இலைகள்
தண்ணீரோடு ஒட்டாமல்
காலைக் கதிரவன் தன் கரங்களை விரித்து
கமல மொட்டுக்களை நோக்கினான்
கூம்பிய மொட்டுகள் இதழ் விரித்து
சிரித்தது கவிதையாய்
அவன் அணைப்பில்


