Murugan
592 views • 8 days ago
இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தவும் 2028-ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #📺வைரல் தகவல்🤩 #⚡ஷேர்சாட் அப்டேட் #🎙️அரசியல் தர்பார் தயாரிக்கும் அனைத்துப் புதிய வாகனங்களிலும் 'வாகனங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு' (V2V - Vehicle-to-Vehicle) தொழில்நுட்ப முறையைக் கட்டாயமாக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வரைவு அறிக்கை மூலம் முன்மொழிந்துள்ளது. இருசக்கர, முச்சக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு வாகனங்களுக்கும் பொருந்தும் இத்தொழில்நுட்பம், வாகனங்கள் தங்களின் வேகம், இருப்பிடம், செல்லும் திசை மற்றும் திடீர் பிரேக் பயன்பாடு போன்ற விவரங்களை ரேடியோ அலைவரிசை மூலம் நிகழ்நேரத்தில் (Real-time) அருகிலுள்ள பிற வாகனங்களுக்குப் பகிர்ந்துகொள்ள உதவும். AIS-230 என்ற புதிய தொழிற்நுட்பத் தரநிலையின் கீழ் இயங்கும் இக்கருவிகள் மூலம் வளைவுகள், பனிமூட்டம் அல்லது தவறான திசையில் வரும் வாகனங்களால் ஏற்படும் மோதல்கள் தவிர்க்கப்பட்டு, ஓட்டுநர்களுக்கு முன்னெச்சரிக்கை எச்சரிக்கைகள் உடனுக்குடன் கிடைக்கும் என்பதால், இது இந்தியச் சாலைப் போக்குவரத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சிகர மாற்றமாகக் கருதப்படுகிறது.
8 likes
9 shares