ShareChat
click to see wallet page
search
அசுர குலத்தை அழிக்க... பிரம்மதேவனின் சக்தியான பிராம்மி, மகேஸ்வரனின் சக்தியான மாகேஸ்வரி, குமரனின் வடிவின ளான கௌமாரி, விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவி, நரசிம்மத்தின் அம்சமாக நாரசிம்ஹி, இந்திரனின் சக்தியம்சமான இந்திராணி ஆகியோருடன், திருமாலின் வராஹ வடிவை ஏற்றவளாய் #வாராஹியும் எழுந்தருளினாள். இந்த ஏழு பெண் தெய்வங்களும் அசுரப்படையை சம்ஹாரம் செய்தனர் என்று நீள்கிறது, தேவி மஹாத்மியம் சொல்லும் திருக்கதை. இந்த தேவியர் எழுவரையும் முறைப்படி வழிபட, அனைத்து நலன்களும் கிடைக்கும், நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பர். பிராம்மியை வழிபட்டால் ஞானம் பெருகும்; சரும நோய்கள் குணமாகும். மாகேஸ்வரியை வழிபட்டால், சர்வமங்களம் உண்டாகும். கௌமாரியை வழிபட்டால், ரத்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். வைஷ்ணவியை வழிபட்டால், விஷ ஜந்துக்களால் தொல்லைகள் ஏற்படாது. இந்திராணியை வழிபட்டால், தாம்பத்தியம் இனிக்கும். சாமுண்டியை வழிபட்டால் சகல தீவினைகளும் அகலும். ஸ்ரீவாராஹியை வழிபட்டால் எதிரிகள் பயம் நீங்கும்; மனதில் தைரியம் பிறக்கும். விவசாயம் செழிக்கவும் இந்தத் தேவியை வழிபடுவர். பஞ்சமி திதி நாட்கள் ஸ்ரீவாராஹிதேவிக்கு மிக உகந்தவை. இந்த நாட்களில், ஆலயங்களில் சப்தமாதர்கள் சந்நிதியில் அருளும் ஸ்ரீவாராஹிக்கு பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தேன் ஆகியவற்றைப் படைத்து வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம். அனுதினமும் பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமயசங்கேதா, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மகாசேனா, ஆக்ஞா சக்ரேச்வரி, அரிக்னீ ஆகிய 12 திருநாமங்களுடன் போற்றிக் கூறி, தியானித்து வழிபட்டால், சகல வரங்களையும் #தந்தருள்_வாள், #வராஹிதேவி. #🙏ஸ்ரீ வாராகி அம்மன் 🙏 #வாராகி அம்மன் விளக்கில் முகம்
🙏ஸ்ரீ வாராகி அம்மன் 🙏 - ShareChat