ShareChat
click to see wallet page
search
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் #சுவையோ #சுவை ! #திருப்பாட்டு- #உன்னை #விட்டால் #வேற #ஆள் #இல்லையா ? சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய பாடல்களை திருப்பாட்டு என்று கூறுவர். பொதுவாக நால்வர் பாடிய பாடல்களை தேவாரம் என்று கூறினாலும், #மணிவாசகர் பாடியது #திருவாசகம் என்றும், #அப்பர் பாடியது #தேவாரம் என்றும், #சுந்தரமூர்த்தி நாயனார் பாடியது #திருப்பாட்டு என்றும், #திருஞானசம்பந்தர் அருளியது #திருக்கடைக்காப்பு என்றும் அழைக்கப்படும். ஒரு முறை #சுந்தரர் பாச்சிலாச்சிராமம் என்ற திருத் தலத்துக்குச் சென்றிருந்தார். அங்குள்ள சிவனடியார்களுக்கு உதவி செய்யும் பொருட்டு சிவனிடம் பொருள் வேண்டினார். #சிவன், அவருடன் விளையாட நினைத்து பொருள் தர தாமதித்தார். #சுந்தரருக்கு கோபம் வந்து விட்டது. "உன்னை விட்டால் வேற ஆள் இல்லையா" என்ற கோபம் தொனிக்கும் படி ஒரு பதிகம் பாடி அருளினார். இறைவன் பொற் கிழி கொடுத்தான் என்பது புராணக் கதை. "உனக்கே என் தலையும், நாவும், மனமும் வைத்தேன். உனக்கே அடிமை செய்தேன். அப்படி இருந்தும் நான் கேட்பதைத் தராமல் கையில் பாம்போடு, கோவணத்தை அணிந்து கொண்டு பித்தன் மாதிரி இருந்தால், உன்னை விட்டால் எனக்கு வேறு ஆள் இல்லையா என்ன" #பாடல் வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்ச மொன் றின்றி உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை உரைத்தக்கால் உவமனே யொக்கும் பைத்த பாம் பார்த்தோர் கோவணத் தோடு பாச்சிலாச் சிராமத் தெம்பரமர் பித்தரே யொத்தோர் நச்சில ராகில் இவரலா தில்லையோ பிரானார் #தேவாரம் ஏழாம் திருமுறையில் #திருப்பாச்சிலாச்சிராமத்தில்(திருவாசி) #சுந்தரர் அருளிச்செய்த #வைத்தனன் #தனக்கே என்று தொடங்கும் பாடல் #பொருள் வைத்தனன் தனக்கே = அவனுக்கு என்றே வைத்தேன் தலையும் = தலையும் என் நாவும் = என் நாவையும் நெஞ்சமும் = என் மனமும் வஞ்சமொன் றின்றி = ஒரு வஞ்சனையும் இல்லாமல் உய்த்தனன் தனக்கே = உரிமை பொருள் ஆக்கினேன் திருவடிக் கடிமை = அவன் திருவடிக்கே அடிமை செய்தேன் உரைத்தக்கால் = இதை நானே சொன்னால் உவமனே யொக்கும் = மக்கள் ஏதோ பெருமைக்கு சொல்கிறேன் என்று நினைப்பார்கள் பைத்தபாம் = படம் விரித்த பாம்பு பார்த்தோர் கோவணத் தோடு = பார்க்கும் படி ஒரு கோவணத்தை ஆடையாகக் கொண்டு பாச்சிலாச்சிராமத் = பாச்சிலாச்சிராமம் என்ற திருத்தலத்தில் தெம் பரமர் = எம் முன்னவார், உயர்ந்தவர், தலைவர் பித்தரே யொத்தோர் = சரியான பித்தனைப் போல் இருக்கிறார் நச்சில ராகில் = என் மேல் விருப்பம் இல்லாமல் இருந்தால் இவரலா தில்லையோ = இவர் அல்லாது இல்லையோ பிரானார் = வேறு கடவுள்கள் கடவுள் மேல் அத்தனை அன்பு. அன்பு உள்ள இடத்தில்தானே கோபிக்க முடியும்? அது என்ன நான் கேட்டு நீ தராமல் இருப்பது என்ற உரிமை. மற்றவர்கள் இறைவனிடம் வேண்டுவார்கள், கெஞ்சுவார்கள், தரமாட்டாயா என்று ஏங்கிக் கிடப்பார்கள். #சுந்தரர் அப்படி எல்லாம் இல்லை. ஒரு பிள்ளை எப்படி தன் தாயிடமோ அல்லது தந்தையிடமோ எப்படி உரிமையாகக் கேட்குமோ, ஒரு காதலன் தன் காதலியிடம் எப்படி உரிமையுடன் கேட்பானோ அப்படி கேட்கிறார். "நீயும், உன் டிரஸ்ம், சரியான பைத்தியக்காரன் போல இருக்கு. என்னமோ உன்னை விட்டால் வேற ஆளே இல்லைன்னு நினைப்பா" என்று செல்லமாக கொஞ்சுகிறார். இது இந்து மதத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்று. மற்ற மதங்களில் இறைவனைக் கண்டு பக்தர்கள் பயப்படுவார்கள். இங்கே, இறைவன் தோள் மேல் கை போட்டுப் பேசலாம். அவ்வளவு அன்யோன்யம். #திருச்சிற்றம்பலம் #எங்கோ_இருக்கிறேன் என்று #என்னையே #ஏமாற்றிக்கொண்டேன் ?? எம் ( என்னுடைய ) கோ ( தலைவனாகிய பிரபஞ்சத்தின் பேரசனோடு ) தான் எப்போதும் , எங்குமிருக்கின்றேன் என்று ஏனோ உணராத்திருக்கிறேன் ?? எம் இருப்பே !! எம் கோவோடு தானே .. எங்கோ என்று ஏமாறாது !! எம் கோ என்று மெய்யுணர்ந்து வாழ்வோமே ........ சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் #ஆன்மீகம் என்பது #அறுபது வயதிலா? #இருபது வயதிலா? இப்படி ஓர் கேள்வி .. வயது அற்றதே ஆன்மிகம் !! வயது என்பது அந்த ஆன்மா தற்போது கொண்டு இருக்கும் சட்டை உடையது !! அதை உடைத்து மெய்யை அறிவிக்கவே ஆன்ம நிலையை மீட்டு எடுக்கவே ஆன்மீகம் என்ற பெயரே அதற்க்கு !! வயது என்பது புதுசட்டையா !! பழைய சட்டையா ?? என்றே கருதலில் இருத்தும் !! ஆனால் சடையில் இல்லாவிட்டாலும் நீங்கள், நீங்கள் தானே என்ற ஆன்ம நிலை உணர சடைத்தன் தான் போடு இருக்கோம், சட்டை நாம் அல்ல என்று தெளிய எந்த வயசாக இருந்தால் தான் என்ன ?? செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் அதற்கு உண்டான தண்டனை கண்முன்னே தந்துவிட்டார் தெய்வம் 🙏திருச்சிற்றம்பலம்🙏 🙏திருமுறை.11 பதிகம் 9 பாடல் 39,40 கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி வாயிலே வைக்கு மளவில் மருந்தாகித் தீய பிறவிநோய் தீர்க்குமே தூயவே கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்து எம்பெருமான் ஓர் அஞ் செழுத்து. தூய்மையுடைய திருவேகம்பரே தேவியோடு நிலை பெற்றிருக்கும் கயிலைப் பெருமானே திரு ஐந்தெழுத்தை உபதேசித்த அளவில் அது மருந்தாகி கொடிய பிறவி நோயைத் தீர்க்கும் அஞ்செழுத்தும் கண்டீர் அருமறைகள் ஆவனவும் அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும்-நஞ்சவித்த காளத்தியார் யார்க்கும் காண்டற்கு அரிதாய்ப்போய் நீளத்தே நின்ற நெறி விடத்தின் வேகத்தைத் தணித்த திருக்காளத்தியில் எம்பெருமானைக் காணமுடியாத அளவு நீளத்தே நின்ற நெறி அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும் அஞ்செழுத்தே அருமறைகளாகும் என்பதை காணுங்கள் எத்தனை பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் திருச்சிற்றம்பலம் இடம் : தில்லை ( சிதம்பரம் ) அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசர் இறைவர் திருப்பெயர் : கனகசபை - சபாநாயகர், திருமூலட்டானம் - திருமூலநாதர் இறைவியார் திருப்பெயர் :கனகசபை - சிவகாமி, திருமூலட்டானம் – உமையம்மை அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே. அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர் சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன் பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே. அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர் எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர் சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம் திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே. அல்ல லென்செயும் அருவினை யென்செயும் தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும் தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க் கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே. ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம் நான்நி லாவி யிருப்பனென் னாதனைத் தேன்நி லாவிய சிற்றம் பலவனார் வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே. சிட்டர் வானவர் சென்று வரங்கொளும் சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச் சிட்டர் பாலணு கான்செறு காலனே. ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர் திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார் விருத்த னாரிளை யார்விட முண்டவெம் அருத்த னாரடி யாரை யறிவரே. விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு எண்நி றைந்த இருவர்க் கறிவொணாக் கண்நி றைந்த கடிபொழி லம்பலத் துள்நி றைந்துநின் றாடு மொருவனே. வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம் வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன் தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே. நாடி நாரணன் நான்முக னென்றிவர் தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத் தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே. மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன் சதுரன் சிற்றம் பலவன் திருமலை அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே. திருச்சிற்றம்பலம் உங்கள் #மகிழ்சியை திரும்பத் திரும்ப திருடும், உங்கள் ஆற்றலை வற்றடிக்கும், அல்லது உங்கள் ஆன்மாவை காயப்படுத்தும் எதிலிருந்தும் விலகி இருங்கள். நீங்கள் உணர்சி ரீதியாக காயப்பட்டிருக்கும் இடத்தில், உங்களை வலுக்கட்டாயமாக தங்க வைப்பதை நிறுத்தும்போது, உள்ளார்ந்த அமைதி சாத்தியமாகிறது. நீங்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கும் தருணத்தில்தான் குணமடையும் பயணம் தொடங்குகிறது. உங்கள் அமைதியை பாதுகாத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அமைதியான மனம் வாழ்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று. 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #தெய்வீக சிந்தனைகள்
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat