ShareChat
click to see wallet page
search
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 சாயர்புரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் தூத்துக்குடி, ஏப்.. 21 - தமிழக மக்கள் மீது அரசியலை விட ஆழமான நட்பு உள்ளது என தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இளம் தலைவர் ராகுல் காந்தி பேசினார். சாயர்புரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவரும் காங். முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி.பங்கேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை (தூத்துக்குடி) கீதாஜீவன், (திருச்செந்தூர்) அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் (ஸ்ரீவைகுண்டம்) ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், (விளாத்திகுளம்) மார்க்கண்டேயன்,(ஒட்டப்பிடாரம் ) ராமஜெயம், (கோவில்பட்டி) கருணாநிதி ஆகியோர்களை ஆதரித்து பேசியதாவது இந்த தேர்தல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக-காங்.கூட்டணிக்கும் அதிமுக-பாஜக கூட்டணிக்கும் இடையேயான கொள்கை போட்டி ஆர்.எஸ்.எஸ்.என்பது திராவிடத்துக்கும் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான இயக்கம் இந்தியா என்பது ஒரே மக்கள், ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்று அவர்கள் நம்புகின்றனர் அத்தனைவைகளையும் தங்கள் மீது மண்டியிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் தமிழ்நாட்டில் திமுகவுக்கு என்று நீண்ட வரலாறு உண்டு திராவிடம் தமிழக மக்களுக்கு சேவை செய்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தமிழர்களில் கொள்கைகளை பாதுகாத்த சிறந்த தலைவர்கள் அக்கட்சியில் இருந்தனர் இப்போது இருக்கின்ற அதிமுக சரியில்லை இறந்துவிட்டது தற்போது இருக்கின்ற அதிமுக வெற்று அதிமுக தான்.அதனை பாஜக பயன்படுத்தி தமிழகத்தில் நுழைய முயற்சி செய்கிறது தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் அதிமுக தலைவர்கள் பாஜக விடம் சரணடைந்து விட்டனர்.அதிமுக இப்போது அமித்ஷா, மோடி கட்டுப்பாட்டிலுள்ளது பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் முழுமையாக கட்டுப்படுத்தி வைத்துள்ளார் இந்தியா அமெரிக்கா ஒப்பந்தத்தின் மூலம் நாட்டின் வேளாண்மை, தொழில்துறை, இந்திய தரவுகள் போன்றவைகளை அமெரிக்காவிடம் விற்றுவிட்டனர். டிரம்பிடம்தான் இருப்பது போன்று தமிழ்நாடு முதலமைச்சர் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார். மோடியை முதலமைச்சர் ஒரு போதும் எழுந்து நின்று சார் என்று அழைக்கமாட்டோம் ஆனால் இதுவே அதிமுகவை சேர்ந்தவர் முதலமைச்சரானால் என்ன சொல்லுங்கள் சார் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என கேட்பார். நாட்டின் சமூகநீதி மேம்பாட்டுக்கு தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. அனைத்து சமுகத்தினரையும் எல்லா சாதியினரையும் முன்னேற்றுவதில் நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது. தமிழ்நாட்டில் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர் . காமராஜர் பொதுக்கல்விக்கு வித்திட்டவர் அதே வழியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்தோம். அதனை பாஜக அரசு சீர்குலைத்துள்ளது சமூகநீதி குறித்து இந்த தேர்தலில் பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளோம்.எனக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள உறவு ஆழமானது. இந்த உறவு எனது பாட்டி, அப்பா மீது தொடங்கி தற்போது என் மீதும் என் சகோதரி மீதும் தொடர்கிறது. இது அரசியல் உறவை விட ஆழமானது. டெல்லியில் உங்களது போர்வீரன் நான் தமிழக மக்களின் நலன் தமிழ்மொழியை பாதுகாக்க நான் போராடுவேன் என ராகுல் காந்தி பேசினார். கூட்டத்தில் அகில இந்திய காங்.பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழ்நாடு காங்.பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், தமிழ்நாடு காங். முன்னாள் தலைவர் தங்கபாலு, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வடக்கு மாவட்ட காங்.தலைவர் பெருமாள்சாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்திகள் - ShareChat