#மின்சாரம் அவசியம் "மின்துறை ரூ.2.5 லட்சம் கோடி கடனில் உள்ளது. இதே நிலை 5 ஆண்டுகள் நீடித்தால் மின்ஊழியர்களுக்கு வேலை பறிபோய்விடும்" - மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்
ரைட்டு...
இந்த கடன் எப்படி வந்தது என்பதை
சொல்லி இருக்கலாம்.. எந்தெந்த கார்ப்பரேட் கம்பெனிக்கு
இலவசமாக மின்சாரம் போய்க் கொண்டிருக்கிறது என்பதை சொல்லி இருக்கலாம்..
எந்தெந்த கம்பெனிகள்
மின்சாரத்தை பெற்றுக்கொண்டு
பணம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கலாம்..
இவைகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வைத்திருக்கலாம்.
இவைகளை எப்படி திரும்பப் பெறப் போகிறோம் என்று தைரியமாக பேசியிருக்கலாம்.
மின்வாரத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் 70000 காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து பேசி இருக்கலாம்.
நிர்வாக திறன் குறித்து பேசி இருக்கலாம்.
இதுதான்
நேர்மையான மாற்றம் காண விரும்பியே ஒரு அரசு செய்ய வேண்டியது.
அதை விடுத்து
தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பவது தான் கடைசி
என்று பேசுவது தான்
நிர்மல் குமாரின் நிஜமுகம்.
ஒன்றும் அவசரம் இல்லை அமைச்சர்..
நிதானமாக யோசியுங்கள்.
உங்களுக்கு இன்னும் ஆண்டுகள் நிறைய இருக்கிறது.
தெளிவான யோசனையை சொல்லுங்கள்
நிஜமான மாற்றத்தை சொல்லுங்கள்.


