ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K views 2 months ago AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:13* ஆநம்ரஸ்ய புரத்ருஹ: சிரஸி தே பாதப்ஜபாத: சிவே ஜீயாத்யேன பபூவ பங்கஜவதீ மௌலிஸ்ரவந்தீ க்ஷணம் கிஞ்சோதஞ்சிதபாலபல்லவ வதீ ஜாதா ஜடாவல்லரீ லாக்ஷாபாதவசேன ஸாந்தியஸுஷமாஸாந்திரா ச சாந்திரீகலா சிவே! திரிபுரங்களை எரித்த ஸ்ரீபரமேஸ்வரன் (பிரணய கலகத்தின் போது) தலை வணங்கும்போது உன் ஸ்ரீபாத கமலங்கள் அவருடைய தலையின் மீது வீழ்த்தப்பட்டன. அது நன்றே. ஏனெனில் அப்போது ஸ்ரீபரமேஸ்வரனுடைய சிரஸின் மீது இருக்கும் கங்கையில் (செந்) தாமரை மலர் புஷ்பித்ததைப் போன்று ஆயிற்று. மேலும் சிரஸின் மீதுள்ள ஜடையில் உன் ஸ்ரீபாதங்களுடைய விரல்கள் சிறிய மொட்டுடன் கூடிய குருத்துக்களைப் போன்று சோபையைக் கொடுக்கின்றன. மற்றும் சிரஸின் மீதுள்ள சந்திர கலையோ உன் ஸ்ரீபாதங்களின் செம்பஞ்சுக் குழம்பின் செந்நிறத்துடன் சேர்ந்து மிக அழகான சந்தியாகாலத்து செந்நிறச் சந்திரன் போன்று தோற்றமளிக்கிறது. மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 13ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
15 shares

More like this