S.ANTHONY✝️YESUMARY
*இறைமக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்கவேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்:*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
*(14.07.2026 - செவ்வாய்)*
*⚜️துயர்நிறை மறையுண்மைகள்⚜️*
*🌿🌹1. கெத்சமணித் தோட்டத்தில் ஆண்டவர் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்
*"இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்."* என கூறப்பட்டுள்ளது.
நமது கடின உள்ளத்தை மாற்றி ஆண்டவரின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹2. ஆண்டவர் இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
*"உங்களிடம் விசுவாசம் இல்லாவிடில், நீங்கள் நிலைபெற்றிருக்க மாட்டீர்கள்."* என ஆண்டவர் கூறுகிறார்.
ஆண்டவரின் பிள்ளைகளாக நாம் எந்நாளும் நிலைபெற்றிருக்கத் தேவையான விசுவாசத்தை நாம் எப்பொழுதும் கைக்கொள்ள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹3. ஆண்டவர் இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,*
ஜூலை மாதம் ஆண்டவர் இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஆண்டவர் இயேசுவின் திருஇரத்தம் நமது அனைவரின் பாவங்களையும் சுத்திகரிக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹4. ஆண்டவர் இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,*
இந்த ஆண்டு இறைவன் நமக்கு நல்ல பருவ மழையைத் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹5. ஆண்டவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,*
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய்க் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🙏🏻ஆமென்.🙏🏻* #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு