ShareChat
click to see wallet page
search
#அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 08.06.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் -------------- வல்ல யுகத்தில் வளரும் மனுவளமும் எல்லாமே சொல்லி எற்றவை குண்டமுதல் அந்நாட்டைச் சொல் ஒன்றுள் ளரசாளப் பொன்னான நாரா யணர்ம கேந்திரனும் நல்ல வைகுண்டம் நற்பிறவி யாய்வளர்ந்து வல்ல கலியுகத்தில் வாய்த்ததெச்ச ணாபுவியில் புதுமை மிகச்செய்து பொல்லாத வம்பர்கையால் . விளக்கம் ---------------- அந்த அழகு யுகத்தில் வாழுகின்ற மனிதனின் நிலைமை பற்றியும் அத்தருமயுகத்தை ஒருசொல்லின் கீழ் அரசாள்வதற்குச் ஒரு ந்றபிறப்பு தேர்ந்தெடுத்தது பற்றியும் அவன் தவத்தைச் சோதிப்பதற்கு சென்ற நாராயணர் தெய்வேந்திரன் ஆகியோர் பற்றியும் வைகுண்டம் பிறந்து வளர்ந்து சக்தி வாயந்த கலி யுகத்தில் எல்லாம் வாயக்கப் பெற்ற தெச்சணாபூமியில் அற்புதங்கள் செய்வார் என்றும், . அகிலம் ------------- அடிகல் லெறிகள் அவர்பட் டம்புவியில் குடிதாழ்ந்த பேர்க்காய்க் கோப மதையடக்கி நல்லோர்க்காய்ப் பாடுபட்டு நல்லஉப தேசமதாய்ப் பஞ்சகரு ணாதிகளைப் பம்மலாய்த் தானடத்திக் கொஞ்சநா ளுங்கழித்து குதித்துதித் தேவளர்ந்து ஆடவராய்ச் சமைந்து ஆண்பெண்போ லேயிருந்து தேவ அறிவார்க்குத் திரவியம்போ லேயிருந்து பச்சைக் குழந்தை பருவமுன் னாகியவர் மெச்சக் கொடியாட்கு மேவும்பரு வம்போலும் சுத்தக் கிழவரைப்போல் சூரப்பி ராயமுமாய் . விளக்கம் ----------------- அவ்வைகுண்டர் வம்பர்களின் கைகளினால் அடிகளும் கல் எறிகளும் பட்டுத் துன்பமுற்றுப் பூமியில் வாழுவார் என்றும் தாழ்ந்த குடி மக்களுக்காகத் தமது கோபத்தை அடக்கித் துன்பப்படுவார் என்றும் சொன்னார். அவர் ஐந்து பூதங்களின் வீரியத்தைத் தமது கட்டப்பாட்டுக்குள் அடக்கி, நல்வழியில் நடத்திச் சிறிதுநாள் கழித்து மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து வளர்வார். ஆடவராகிய அவர் ஆணைப் போலவும், பெண்ணைப் போலவும் இருப்பார். அறிவைத் தேடி அறிய விரும்புகிறவருக்குப் பெரிய ஞானத் திரவியம் போல் இருப்பார். பச்சைக் குழந்தை முதல் வயது முதிர்ந்தவர்வரை மெச்சும்படியாகவும் பார்ப்பதற்கு அழகு பொருந்திய பருவமுடைய ஆணைப் போலும் அறிவில் வயதான கிழவரைப் போலும் சூட்சமமாக இருப்பார் என்றும் . அகிலம் -------------- மெத்தப் புலம்பி விழலும்பிரா யம்போலும் நாலு பிராயம் நாளதுக்குள் ளேயெடுத்துக் கோலு கையேந்திக் குன்னும்பிரா யம்போலும் பார்க்கப் பிராயமுமாய்ப் படுக்கக் கிழவனுமாய்த் தார்க்கத் திறவனுமாய்ச் சந்திக்கிசைந் தவனுமாய்க் காக்கக் கருத்தனுமாய்க் கர்த்தனின் கர்த்தனுமாய் ஏக்கத் திருத்தனுமாய் இவர்சமைந் திவ்வுகத்தில் . விளக்கம் ----------------- புலம்பித் திரிகின்ற பிராயம் போன்றும் காலத்தை விரையம் செய்கின்ற பிராயம் போன்றும் ஞானப்பூமி ஆகிய சுபேட்சை, விசாரணை, தனுமாநசி சத்துவாபத்தி ஆகிய பூதங்களில் உள்ள நான்கு பிறப்புகளையும் ஒரே நாளைக்குள் எடுத்து அறிவில் சிறந்த ஞானக் கிழவன் போன்றும், தர்க்கம் புரிந்து எதிர்க்க முடியாத பலம் பெற்றவனாகவும், எல்லாத் திசையிலுமுள்ள மக்கள் ஏற்றுக் கொள்பவராகவும், எல்லா மக்களையும் காக்கும் கருத்து உள்ளவராகவும், எல்லாவற்றுக்கும் மூலப் பொருளுக்கும் மூலப்பொருளாகவும், ஒப்பில்லாதவராகவும், வைகுண்டர் இக்கலியுகத்தில் உருவாவார் என்றும் . அகிலம் ------------- தர்மத்தால் கலியைத் தன்னந்தன்னால் கரைத்துக் கர்மத்தை யீடழித்துக் காந்தக்கோ லுமெடுத்து நேரோரைக் காத்து நிசமாக வேயெழுப்பி ஏராரைக் கொன்று ஏழ்நரகத்தும் பூத்தி உகத்துக் குகம்வழக்கு எல்லா மொருதலத்தில் தொகுத்து நடுத்தீர்ப்புச் செய்து மிகத்தெளித்து . விளக்கம் ---------------- தருமத்தின் உதவியால் கலியனை அவனாலேயே அழியச் செய்து, தீய வினைகளை எல்லாம் அழித்து ஏழைபோல் உருவம் எடுத்து, நேர்மை ஆனவர்களைக் காத்து, மெய்ப்பொருள் உள்ளவர்களாக விழிப்புறச் செய்து, தம் கருத்துக்களை ஏற்காதவரை அழித்து ஏழு நரகங்களிலும் தள்ளி, ஒவ்வொரு யுகத்தில் உள்ள வழக்குகளை ஒரே யுகத்தில் சேர்த்து எடுத்துத் தெளிவாக ஆராய்ந்து விரைவாக நடுத்தீர்ப்பு செய்வார் என்றும் . அகிலம் -------------- ஆகாத்த பேரை எல்லாம் நரகமதில் வாகாகத் தள்ளி வாசல்தனைப் பூட்டிச் சித்தத்துக் கேற்ற செடத்தோரைத் தானெழுப்பிப் பத்தரைமாத் துற்றப் பைம்பொன்னிறப் பொற்பதியில் சாகா வரங்கள் சனங்களுக் கேகொடுத்து வாகாக நல்ல வரிசை மிகக்கொடுத்து ஆண்பெண் ணுடனே அதிகவாழ் வுங்கொடுத்துக் காணக் காணக்காட்சிக் கனமாய் மிகக்கொடுத்துச் . விளக்கம் ----------------- தமக்கு ஆகாதவரை நரகத்தில் மிகவும் எளிதாகத் தள்ளி நரகத்தின் வாசலைப் பூட்டிடுவார் என்றும், ஐந்து புலனடக்கித் தம்மை ஒரே நினைவோடு நினைத்து சடத்தன்மை பெற்றவரும், தம் மனதிற்கு விருப்பம் உள்ளவரும் ஆகியவர்களை ஆத்மீக விழிப்புறச் செய்து, பத்தரை மாற்றுத் தங்கம் போன்ற தருமபதியில் எப்பொழுதும் வாழ்வதற்குரிய சாகாவரங்களை அவர்களுக்குக் கொடுப்பார் என்றும், அத்தகையோருக்குத் தமது சீர்வரிசை பரிசுகளைக் கொடுத்து. ஆண்களுடனும், பெண்களுடனும் கூடி வாழ்வதற்கு இன்பமான வாழ்வும் கொடுத்து காணக் காணச் சலிக்காத அழகான காட்சிகளையும் கொடுத்து. . அகிலம் ======== செல்ல வைகுண்டர் சீமையைம்பத் தாறதையும் அல்ல லகற்றி அரசாள்வா ரீசுரரே மும்மூர்த்தி யெல்லாம் ஒருமூர்த்தி யாயிருக்கும் எம்மூர்த்தி யெல்லாம் இயல்மூர்த்தி போலிருக்கும் வைகுண்டப் பெம்மான் வாய்த்தசெந் தூர்க்கடலில் மைகொண்ட நாதன் வந்து பிறப்பதுதான் வளர்ந்துதவம் செய்வதுவும் வாய்த்தபுவி தெச்சணமே . விளக்கம் ----------------- எல்லாருக்கும் விருப்பமான வைகுண்டர் ஐம்பத்தாறு தேசங்களையும் துன்பங்கள் அகற்றி அரசாள்வார் ஈசுரரே, இதைக் கேட்பீரராக என்றும், மேலும் மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகவும், எல்லா மூர்த்திகளுக்கும் உயர்வான மூர்த்தி போலவும் இருக்கின்ற வைகுண்ட பெருமாள் திருச்செந்தூர்க் கடலில் பிறந்து மெய்குண்ட நாதனாகிய வைகுண்டர் ஆத்மீக வளர்ச்சியுற்றுத் தவம் செய்வதும் எல்லாப் பேறும் வாய்க்கப் பெறுவதும் தெச்சணாபூமியாகும். . தொடரும்... அய்யா உண்டு.
அய்யா வைகுண்டர் {1008} - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நாலுவே தமதிலும் நான்வருவேன் கண்டாயே தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே மயங்கா தேமகனே மாதவங்கள் பெற்றவனே அவரவர்கள் மனதில் ஆன படியிருந்து எவரெவரை யும்பார்த்து இருப்பேனா னுன்னிடமே ! அய்யா ! 08.06.2026 D Muthu Prakash] வீரத்தனமாய் இருங்கோ ! போல் விளக்கின் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நாலுவே தமதிலும் நான்வருவேன் கண்டாயே தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே மயங்கா தேமகனே மாதவங்கள் பெற்றவனே அவரவர்கள் மனதில் ஆன படியிருந்து எவரெவரை யும்பார்த்து இருப்பேனா னுன்னிடமே ! அய்யா ! 08.06.2026 D Muthu Prakash] வீரத்தனமாய் இருங்கோ ! போல் விளக்கின் ஒளி - ShareChat