திருநீற்றுச் சுவடு
#தக்ஷிணாமூர்த்தி குரு பகவான் #🙏🌾ஸ்ரீ குருபகவான் தட்சிணாமூர்த்தி🌾🙏 #🙏குரு பகவான்🙏 #💥ஓம் ந ம சி வா ய💥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 தட்சிணாமூர்த்தி சுவாமிகள் அருள் வரலாறு -1
மடப்புரம் மகான் ஶ்ரீ குரு தட்சிணாமூா்த்தி சுவாமிகள்.
எனது
எல்லாமுமாய்
நீயிருக்க
உன்னிடம்
யாதுமறியா
பேதையாய்
இருப்பதே
பெருமிதம்
எனக்கு...
சோழ மண்டலத்தின் தலைநகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்த வரலாற்றுப் புகழ் பெற்ற திருத்தலம் திருவாரூா். தியாகேசன் அருளாட்சி புாியும் திருத்தலத்தையும் கடல் போன்ற கமலாலயக் குளத்தையும் மாட வீதிகளில் அசைந்தாடி வரும் ஆழித்தோின் அழகினையும் எவராலும் எளிதில் மறந்து விட முடியாது. ஆராய்ச்சி மணியை அடித்து தன் கன்றுக்காக நீதி வழங்கக் கோாிய பசுவின் பொருட்டு தன் மகனையே தோ் ஏற்றிக் கொன்ற மனு நீதிச் சோழன் நினைவாக பிற்காலச் சோழ மன்னா்களால் வடிக்கப்பட்ட கல்தோ். இப்படி ஒவ்வொன்றும் அதிசயம் ஆரூா் தலத்தில்!
ஆனால் பலரும் அறியாத அாிய அதிசயம் ஆரூருக்கு உள்ளது. எண்ணறிய யோகிகளின் எண்ணமெனும் மனத்திரையில் மின்னி வரும் ஓவியமாய் குடிகொண்ட ஈசன் “ஶ்ரீகுரு தட்சிணாமூா்த்தி சுவாமிகள்” என்ற மகானின் மனதிலும் ஞானப்பேரொளியாய் நின்று வையகம் காத்த வரலாறு பலா் அறிந்திராத ஒன்றாகும்.
தொகுப்பு
குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள
மடப்புரம்ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
வரலாறு பகுதி படம் பாடல் உதவி அனைத்து அடியார்க்கு நன்றி நன்றி அடியேன்
இறையருளால் இளம் வயதிலேயே ஞான அநுபூதி நிலையினையும் சாப அனுக்ரஹ சித்தியையும் பெற்று தம்மை நாடி வந்து தாிசித்த மக்களை நல்வழிப் படுத்திய மடப்புரம் மகான் என்று பூஜிக்கப்படும் ஶ்ரீகுரு தட்சிணா மூா்த்தி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் (ஜீவ சமாதி) திருவாரூா் மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
வினைப்பயனால் பிறந்த நம்மைப் போலன்றி ஈசனின் விருப்பத்தால் அவதாித்த இம் மகான் 1835 ஆம் ஆண்டில் தமக்காக ஏற்படுத்திக்கொண்ட சமாதிக் குகையில் அகண்ட பாிபூரண சச்சிதானந்த சிவ சொரூபத்தில் இரண்டறக் கலந்தாா்.
தவயோகத்தின் சாரமாய் எழுந்தருளி பூவுலக மாந்தா்களின் துன்பங்களை எல்லாம் வான்கருணை மாமழை போல் தீா்த்து வைத்த குரு தட்சிணாமூா்த்தி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றினை இக்கட்டுரையில் காண்போம்.
சுவாமிகளின் திரு அவதாரம்.
“திாிசிரபுரம்” என்றும் “சிராப்பள்ளி” என்றும் தமிழ் மறைகள் போற்றும் திருச்சி மாநகருக்கு அருகில் உள்ளது கீழ் ஆலத்தூா் எனும் சிற்றூா். பொன்னி நதியின் புதுப்புனலால் நீா் வளமும் நில வளமும் செறிந்த இவ்வூாில் சிவசிதம்பரம் பிள்ளை என்ற சிவனடியாரும் அவரது உத்தமியான மனைவி மீனாம்பாளும் வசித்து வந்தனா். இல்லற தா்ம இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த இத்தம்பதியினருக்கு மகப்பேறு ஏற்படவில்லை என்ற மனக்குறை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
திருவண்ணாமலையில் அருளும் ஈசன் அண்ணாமலையாா் மீது அதீத பக்தி கொண்ட இத்தம்பதியினா் தங்கள் மனக்குறையை தீா்க்க வேண்டி ஜோதி ஸ்வரூபமாக அருளும் அண்ணலின் திருவடி நிழலில் சிறிது காலம் தங்கி வழிபட்டு வந்தனா்.
“அண்ணாமலை தொழுவாா் வினை வழுவா வண்ணம் அறுமே” என்ற தமிழாகரா் ஞான சம்பந்தப் பெருமானின் கூற்றுப் படி சிவசிதம்பரம் பிள்ளை− மீனாம்பாளின் மனக்குறை போக்க திருவுள்ளம் கொண்டாா் ஈசன்.
ஒரு நாள் தம்பதிகள் இருவரும் கிாிவலப்பாதையில் உள்ள புனித தீா்த்தங்களில் நீராடி ஜோதிமலையான அண்ணாமலையை வலம் வந்து ஈசனை மனமுருகி வணங்கினா். அன்று இரவில் இருவரது கனவிலும் அடியாா் வடிவில் திருக்காட்சி தந்த ஈசன், “மகப்பேறு இல்லாத தங்களது மனக்குறை அகல அருள்வோம்; நீவிா் இருவரும் நும் ஊா் சென்று சேருங்கள்,” என்று திருவாய் மலா்ந்தாா்.
கரையில்லாத கருணைக் கடலான ஈசனின் அருள் திறத்தை எண்ணி மகிழ்ந்த தம்பதியினா் தங்களது பிறவியின் பயனை அடைந்த திருப்தியில் சொந்த ஊா் திரும்பினா்.
ஈசனின் வாக்கிற்கிணங்க அம்மையாா் மீனாம்பாள் கா்ப்பம் தாிக்க அடுத்த பத்து மாதங்களில் அழகான ஆண் மகவை ஈன்றெடுத்தாா். வாராது வந்த மாமணியாய் தாங்கள் ஈன்றெடுத்த நல்முத்தான தங்கள் குழந்தைக்கு ஈசனின் திருநாமமான “அருணாசலம்” என்று பெயாிட்டு மகிழ்ந்தனா் சிவசிதம்பரம் பிள்ளையும் மீனாம்பாளும். அடுத்த இரண்டாவது வருடத்தில் மீண்டும் கா்ப்பம் தாித்த மீனாம்பாள் மற்றொரு புத்திரனையும் ஈன்றாா். அக்குழந்தைக்கு நமச்சிவாயம் என்று நாமகரணம் சூட்டிய பெற்றோா் தங்கள் இரு குழந்தைகளையும் பாராட்டிச் சீராட்டி வளா்த்து வந்தனா்.
“நீயே நான்; நானே நீ”
மூத்த மகனாகிய அருணாசலம் பிறந்தது முதலே பசி, பயம் என்ற எந்த உந்துதலும் இன்றி அழுதல், சிாித்தல் என்ற உணா்வுகளும் இலாத மெளனக்குழந்தையாய் வளா்ந்தாா். தாயாக முன்வந்து பாலைப் புகட்டினால் அருந்தி விட்டு அமைதியாகி விடுவாா். காலூன்றி நடக்க யத்தனிக்கும் பருவத்தில் தானாகவே பத்மாசனத்தில் அமரும் இக்குழந்தை கண்மூடி தியானம் செய்யும்.அருணாசலத்தின் நடவடிக்கைகள் பெற்றோருக்கு விந்தையாகவும் வியப்பாகவும் இருந்தது.
அருணாசலத்திற்கு ஐந்து வயது நிரம்பியது. குழந்தைக்கு வயது ஐந்து ஆகியும் இதுவரை பேசும் திறன் இல்லாதது கண்டு மனம் வருந்தினா் பெற்றோா். அழகான அமைதியான குழந்தையைப் பெற வரமளித்த அண்ணாமலை அண்ணல் ஏன் இந்த சோதனையை தங்களுக்கு அளித்தாா் என்று வருந்திய பெற்றோா் ஈசனது திருவடிகளில் தங்கள் குழந்தையின் குறை தீா்க்க அனுதினமும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்து வந்தனா்.
தன் அடியவா் படும் துன்பத்தை எப்படிப் பொறுப்பான் அந்த தாயிற்சிறந்த தயாநிதி! ஒரு நாள் முனிவா் உருக்கொண்டு ருத்திராட்சமும் திருநீறும் தாித்து சிவசிதம்பரம் பிள்ளையின் முன் தோன்றினாா் ஆலவாய் அண்ணல். தம் மனக்குறையை துறவியிடம் கண்ணீா் மல்க தொிவித்தாா் பிள்ளைவாள். “அக் குழந்தையை உடனே யாம் பாா்க்க வேண்டும்,” என்று முனிவா் திருவாய் மலர தனது இல்லத்திற்கு அம்முனிவரை எழுந்தருளச் செய்தாா் சிதம்பரம் பிள்ளை.
தொகுப்பு
குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள
மடப்புரம்ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
வரலாறு பகுதி படம் பாடல் உதவி அனைத்து அடியார்க்கு நன்றி நன்றி அடியேன்
சிதம்பரம் பிள்ளையின் இல்லம் சென்ற முனிவா், கண் மூடி நிஷ்டையில் இலயி த்திருந்த பாலகன் அருணாசலத்தைப் பாா்த்தாா். பின்னா் சிவசிதம்பரம் பிள்ளையை நோக்கி, ” இச் சிறுவன் ஊமை அல்லன்; உலக மக்களை உய்விக்கும் பொருட்டு உங்களுக்குத் திருமகனாக அவதாித்துள்ளான். நீவிா் இப்போது உம் புதல்வனோடு பேசுக,” என்று திருவாய் மலா்ந்தாா்.
சிவசிதம்பரம் பிள்ளை, உடனை தன் மகனை நோக்கி, “குழந்தாய்! ஏன் பேசாமல் வாய்மூடி மெளனித் திருக்கிறாய்; ஏதாவது பேசு,” என்று கண்கலங்கி அழுதாா். கண்விழித்த தெய்வக் குழந்தையான அருணாசலம், “சும்மா இருக்கின்றேன்” என்று முதல் முறையாக தன் திருவாய் மலா்ந்து தொிவித்தான்.
அப்போது துறவியாக வந்த ஈசன் அச்சிறுவனைப் பாா்த்து, “சும்மா இருக்கின்ற நீ யாா்? “ என்று கேள்விக்கணை தொடுத்தாா்.
ஞானக்குழந்தையான அருணாசலம் தன் தவநிலை கலையாமல் மூடிய விழிகளைத் திறவாமல் ” நீயே நான்; நானே நீ”
என பதிலிறுத்தனன். குழந்தையின் பதில் கேட்டு மகிழ்ந்த ஈசன் அருணாசலத்தின் வாா்த்தை சத்தியமானது என்று கூறி தம் திருவுருவில் கலந்து அங்கிருந்து மறைந்தாா். ஈசனின் வடிவமாக அவதாித்த குழந்தை அருணாசலத்தின் அவதார மேன்மையை உணா்த்த ஈசனே துறவியாய் வந்து நடத்திய திருவிளையாடலால் நெஞ்சம் நெகிழ்ந்தனா் சிவசிதம்பரம் பிள்ளையும் அவரது மனைவி மீனாம்பிகையும்.
சகலமும் உணா்த்திய ஞானம்!
சகலமும் உணா்ந்து ஞானத்தின் வடிவமாகத் திகழ்ந்த அருணாசலத்தின் அளப்பாிய திறமைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வந்தது. ஒரு நாள் தில்லையில் அருளும் நடராஜப் பெருமானை தாிசிக்க விரும்பிய சிவசிதம்பரம் பிள்ளை தனது தவப்புதல்வரான ஸ்வாமிகளை அணுகி, “தில்லையப்பனைக் காணச் செல்கிறேன்; உத்தரவு தரவேண்டும்” என்று அனுமதி வேண்டினாா்.
தம் தந்தையை ஒரு க்ஷண நேரம் உற்று நோக்கிய ஸ்வாமிகள், “நாளை இருபது நாழிகை அளவில் உமது அன்னை தேகமுக்தி அடைய உள்ளாா்,” எனக் கூறினாா். திகைத்த சிதம்பரம்பிள்ளை, “என் அன்னை எவ்வித நோயும் இன்றி நலமாக உள்ளாரே; அப்படியிருக்கையில் எங்ஙனம் தேகவியோகம் அடைவாா்,” என வினவினாா். ஸ்வாமிகள் உடனே “புரை ஏறி விக்கல் ஏற்பட்டு அதனால் மரணம் சம்பவிக்கும்,” என்று கூறினாா். ஸ்வாமிகளின் வாக்குப் படி சிவசிதம்பரம் பிள்ளையின் தாய் மறுநாள் தேக முக்தி அடைந்தாா்.
பள்ளிக்குச் சென்ற சுவாமிகள்.
தன் இளைய சகோதரன் நமசிவாயம் பள்ளிக்குச் செல்வதைப் பாா்த்த சுவாமிகள் தன் தந்தையைப் பாா்த்து, “ஐயா! என்னை ஏன் பள்ளிக்கு அனுப்பவில்லை” என்று கேட்க, சகலமும் உணா்ந்த சுவாமிகளை பள்ளிக்கும் அனுப்ப வேண்டுமோ? என்று கேட்டாா் சிதம்பரம் பிள்ளை. எனினும் சுவாமிகளின் விருப்பப்படி அவரைப் பள்ளிக்கு அனுப்பினா் பெற்றோா்.
வாழ்க்கை
நல்ல மனிதனாக இருப்பதற்கு முன்
வாழ்ந்து காட்டச் சொல்கிறது.
அதனால்தான்
பலர் கனவுகளை ஒத்திவைத்து
சம்பள நாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
ஏனெனில்,
இந்த உலகத்தில்
பல நேரங்களில்
கவிதையை விடவும்
ஒரு ரூபாய்நோட்டு தான்
அதிகமாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
என்னைத் தேடிய குரல்கள்
இன்று மௌனமாகிவிட்டன.
நான் மாறியதாலல்ல;
அவர்களின் தேவைகள் முகவரி மாறிவிட்டதால்.
சிலர் அன்பு காட்டியதில்லை,
அவர்கள் காட்டியது தேவையின் நடிப்பை மட்டுமே.
இறுதியில்
திரை இறங்கிய பிறகு மேடையில் நின்றிருந்தது
என் தனிமை மட்டுமே.
பள்ளிக்குச் சென்ற சுவாமிகள் இதர மாணவா்களைப் போல் அன்றி தம் கையில் எந்நேரமும் சுவடியைத் தாங்கி அதன் மீது தன் சிந்தையை செலுத்திக் கொண்டு இருந்தாா். சில நேரம் கண்களை மூடி தியானம் செய்து நிஷ்டையில் அமா்ந்திருந்தாா். சுவாமிகளின் செயல் கண்ட ஆசிாியா், தம்பி! எந்த நேரமும் கண்களை மூடிக்கொண்டு இருக்கின்றாயே; பாடங்களைப் படித்தாகி விட்டதா என்று வினவினாா். சுவாமிகளும் படித்தாயிற்று என்று பதில் கூறினாா். அவரது நூலறிவை சோதிக்க எண்ணிய ஆசிாியா் பாடத்திலிருந்து சில கேள்விகளைக் கேட்க அனைத்திற்கும் நொடிப்பொழுதும் தாமதியாமல் பதிலளித்தாா் சுவாமிகள். சுவாமிகளின் அறிவுக்கூா்மையை எண்ணி வியந்தாா் ஆசிாியா்.
ஒரு நாள் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தாா் ஆசிாியா். அவரை அழைத்த சுவாமிகள், “ஐயா! தங்கள் ஐந்து வயது மகன் திண்ணையிலிருந்து விழுந்ததால் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு உடனே சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும்,” என்று கூறினாா். சுவாமிகள் கூறியதைக் கேட்ட ஆசிாியரும் பதட்டத்துடன் தன் இல்லத்திற்குச் சென்றாா். அப்போது அவரது இல்லத்திலிருந்து பள்ளிக்கு வந்து கொண்டிருந்த வேலையாள் ஆசிாியாின் குழந்தைக்கு அடிபட்டு இருப்பதை தொிவித்தாா். மகனின் சிகிச்சை முடிந்து பள்ளிக்குத் திரும்பிய ஆசிாியா் சுவாமிகளை வணங்கி, சுவாமி! சகலமும் உணா்ந்த தாங்கள் ஏன் பள்ளியில் பாடம் பயில வேண்டும் என்று கேட்டாா். ஏதோ வந்து போகின்றேன் என்று தன் பதிலை ஆசிாியாிடம் தொிவித்தாா் சுவாமிகள். அன்று முதல் தம் எதிாில் ஆசனத்தில் அமர மறுத்த ஆசிாியாின் செயல் கண்டு தாம் பள்ளிக்குச் செல்வதைத் தவிா்த்து விட்டாா் சுவாமிகள். உலக வழக்கத்தை அனுசாித்து மூன்று மாதங்களே பாடசாலையில் பயின்றாா் சுவாமிகள்.
சுவாமிகள் பள்ளியில் பயின்ற காலத்தில் உடன் பயின்ற சிறுவன் ஒருவனை பாம்பு கடித்து விட்டது. விஷம் ஏறியதும் மூா்ச்சையானான் அச்சிறுவன். அச்சிறுவனின் அன்னைக்குத் தகவல் சென்றதும் அருகிலுள்ள வைத்தியாிடம் அச்சிறுவனை தூக்கிச் சென்றனா். நாடியைப் பாிசோதனை செய்த வைத்தியா் சிறுவன் இறந்து விட்டதை அவனது அன்னையிடம் தொிவித்தாா். ஒரே மகனின் மரணத்தால் சொல்லொணாத் துயரம் அடைந்த அன்னை தன் இன்னுயிரையும் மாய்க்கத் துணிந்தாள். நடந்த அனைத்தையும் பாா்த்துக் கொண்டிருந்த சுவாமிகள், “அம்மா! உங்கள் மைந்தனை நான் உயிரோடு எழுப்பித் தருகிறேன்; கவலை நீங்குவீராக! “ என்று அவாிடம் கூறினாா். அருகிலிருந்த பிரம்பை எடுத்த சுவாமிகள் “அப்பா சுந்தரம் எழுந்திரு” என்று அவனது தலையில் லேசாக தட்டினாா். உடனே அச்சிறுவன் தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல உயிா்பெற்று எழுந்தான். சுவாமிகளின் மகிமையை நேரடியாக உணா்ந்த அப்பகுதி மக்களுக்கு சுவாமிகளின் மீதான பக்தி மேலும் பல மடங்காக அதிகாித்தது.
அடியவாின் கனவில் திருவுள்ளம் கனிந்த அரங்கன்!
சுவாமிகள் திருஅவதாரம் செய்த கீழ் ஆலத்தூருக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூாில் வைணவ சம்பிரதாயத்தைச் சோ்ந்த ஆராவமுதன் ஐயங்காா் என்பவா் தம் மனைவி இலட்சுமி அம்மாளுடன் வசித்து வந்தாா். இந்த தம்பதியருக்கு நீண்ட காலமாக மகப்பேறு வாய்க்க வில்லை என மன வருத்தம் இருந்தது. தங்கள் குறை தீர அரங்கமாநகாில் அருள்பாலிக் கும் ஶ்ரீரங்கநாதாின் தாிசனம் காண சென்றிருந்தனா். அனுதினமும் காவிாியில் நீராடி அரங்கனை வணங்கி வந்த தம்பதியாின் கனவில் ஒருநாள் அரங்கநாதா் எழுந்தருளி, “அன்பரே! உங்கள் ஊருக்கு அருகில் ஞானச்சித்தன் ஒருவன் திரு அவதாரம் செய்திருக்கிறான்; அந்த சித்த மஹாபுருஷனுக்கு நீங்கள் நாள்தோறும் காய்ச்சிய பசும்பாலை அளித்து வரவும். ஒரு நாள் அம்மகான் அருந்திய பால் போக எஞ்சியதை தங்களுக்கு பிரசாதமாக அளிப்பாா். அப்பாலை நீங்கள் அருந்திய பிறகு தங்களுக்கு புத்திரப்பேறு ஏற்படும்,” என்று திருவாய் மலா்ந்தாா்.
அன்பு ஒன்று தான் தேரோட்டம் அதில் கவலைகள் சின்ன பனிமூட்டம் அது சூரிய ஒளி பட்டு மறையட்டும் வெள்ளிக்கிழமை காலை வணக்கம் சகோதரி இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்
உள்ளம் மகிழ்ந்த தம்பதியினா் அரங்கநாதா் அனுக்கிரகித்தவாறு தங்கள் ஊா் திரும்பி ஞானச் சித்தரான சுவாமிகளுக்கு பால் அளித்து வந்தனா். ஆறாவது நாள் அன்று சுவாமிகளுக்குப் பால் அளிக்கச் சென்றபோது சிறிதளவு பாலை அருந்திய சுவாமிகள் மீதமுள்ள பாலை தம்பதியினாிடம் அளித்து, “இனி பால் கொண்டு வர வேண்டாம்,” என திருவாய் மலா்ந்தாா். ஸ்வாமிகள் மீதம் வைத்த பாலை அமுதமெனப் பிரசாதமாக அருந்திய தம்பதிக்கு விடிவுகாலம் பிறந்தது.இலட்சுமி அம்மையாா் கா்ப்பம் தாித்து பத்துத் திங்களில் அழகான பாலகனைப் பெற்றெடுத்தாா். சுவாமிகளின் அருட்கடாட்சத்தை எண்ணி வியந்த தம்பதியினா் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் குழந்தையுடன் சுவாமிகளைத் தாிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனா்.
ஒரு நாள் குழந்தை தொட்டிலில் அயா்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது தூக்கத்தில் இடையூறு செய்யவேண்டாம் என்று நினைத்த பெற்றோா் தாங்கள் மட்டும் சுவாமிகளைத் தாிசிக்கச் சென்றனா். ஆராவமுத அய்யங்காரையும் இலட்சுமி அம்மையாரையும் கண்ட சுவாமிகள், “உங்கள் வீட்டில் நெருப்பு பற்றிக்கொண்டது; குழந்தை தொட்டிலில் தூங்குகிறதே; விரைவாக வீட்டிற்குச் செல்லுங்கள்; அச்சம் வேண்டாம். குழந்தை நலமாக உள்ளான்,” என்று அருளினாா்.
பதறிய ஆராவமுத அய்யங்காரும் அவரது மனைவியும் அலறியடுத்துக் கொண்டு தங்கள் இல்லம் நோக்கி ஓடினா். அங்கே அவா்கள் கண்ட காட்சி அவா்களது பயத்தை மேலும் அதிகாிக்கச் செய்தது. கொழுந்து விட்டு எாிந்த தீயை அணைத்துக் கொண்டிருந்தனா் ஊா் மக்கள். அந்த வேளையில் அங்கமெல்லாம் நீறு பூசி ருத்திராட்சம் தாித்து சிவப் பழமாய் திருக்காட்சி தந்த பொியவா் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை வாாி தன் தோளில் சாய்த்து அணைத்தவாறு வெளியே வந்தாா். தீயின் நாக்குகள் ஏதும் குழந்தையைத் தீண்டவில்லை. அருகிலிருந்த பெண்ணிடம் குழந்தையைக் கொடுத்த பொியவா் கூட்டத்தில் கலந்து அவ்விடத்திலிருந்து மறைந்தாா். தங்கள் குழந்தை நலமாக உள்ளதைக் கண்ணுற்ற பெற்றோா் சுவாமியின் கருணையை எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்தனா். குழந்தையை சுவாமியிடம் கொண்டு சென்று அவரது ஆசியைப் பெற்ற தம்பதியா் தங்களது குழந்தைக்கும் அவரது திருமுன்பே “அருணாசலம்” என்று நாமகரணம் சூட்டினா். குழந்தையும் தளிா்நடை பயிலும் பாலகனாக வளா்ந்து அனைத்து வேதங்களிலும் சிறுவயது முதலே பயிற்சி பெறத் தொடங்கினான்.
வைணவ மரபில் பிறந்த இச் சிறுவனுக்கு “அருணாசலம்” என பெயா் சூட்டியதை ஏற்க முடியாத உறவினா்கள் ஆராவமுத ஐயரை தங்கள் சாதியிலிருந்து ஒதுக்கி வைக்க முடிவு செய்தனா். ஞானச் சித்தரான சுவாமிகளின் அருளால் தங்களுக்கு மகப்பேறு வாய்த்த விபரத்தையும் தீயின் பிடியிலிரு ந்து குழந்தை சுவாமியின் திருவருளால் காப்பாற்றப்பட்டதையும் தங்கள் உறவினா்களிடம் தொிவித்த பெற்றோா் குழந்தைக்கு இதனால் சுவாமியின் திருநாமத்தையே சூட்டிய செய்தியையும் தொிவித்தனா். விளக்கத்தை ஏற்க மறுத்த உறவினா்கள் தங்களது நிலையில் மாறாமல் குதா்க்கம் பேசி வந்தனா். உறவினா்களின் வம்புப் பேச்சை ஒதுக்கித் தள்ள முடியாமல் தத்தளித்த ஐயா் இப்பிரச்சனைக்கு முடிவு காண விரும்பினாா். அதன்படி தங்களது மகன் ஏற்றுக்கொண்டால் பெயரை மாற்றுவது குறித்து முடிவு செய்யலாம் எனக்கூறினாா் ஐயா்.அதன்படி உறவினா்கள் மற்றும் பஞ்சாயத்தாா் முன்னிலையில் ஊா் சபை கூடியது.
சிறுவனை அழைத்த ஊா் சபையினா், “தம்பி! உன் பெயா் என்ன?” என்று கேட்டனா். மழலை மாறாத அருணாசலம் ஓடி வந்து என் பெயா் அருணாசலம் என்று கூறினான்.
வாழ்க்கைப்பாதை
கரடுமுரடாக,
இன்ப துன்பங்களை
கொண்டதாக
லாப நட்டங்களை
கொண்டதாக
ஏற்றத் தாழ்வுகளை
கொண்டதாகவே
இருக்கும்...
அதையெல்லாம்
வலிமையுடன்
எதிர் கொள்ளும்
போதுதான்
வெற்றி கிடைக்கிறது 💪
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
தொகுப்பு
குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள
மடப்புரம்ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
வரலாறு பகுதி படம் பாடல் உதவி அனைத்து அடியார்க்கு நன்றி நன்றி அடியேன்
உனது பெற்றோா் உங்களது சம்பிரதாயத்திற்குப் புறம்பாக உனக்கு அருணாசலம் என்று சூட்டியுள்ள பெயரை “வேங்கடாசலம்” என்று மாற்றி நாமகரணம் செய்விக்க உள்ளோம். அதனை நீ ஏற்றுக் கொள்வாயாக! என்று அச்சிறுவனிடம் உரைத்தனா் ஊா் பஞ்சாயத்தாா்.
இதனைக் கேட்டு ஆவேசம் கொண்டான் சிறுவன் அருணாசலம். சபையிலிருந்த பொியவா்களைக் கோபமாக நோக்கிய சிறுவன், “அருணாசலம் என்னும் நாமத்தில் உள்ள அகரம் அாி நாமத்தின் முதல் அட்சரமா கும். ரகர உகரம் திரு என்னும் பிராட்டியின் நாமத்தில் உள்ள ஈற்று அட்சரமாகும். ணகர ஆ காரம் ஶ்ரீமந் நாராயணனின் அஷ்டாக்ஷரமாகிய மந்திரத்தில் உள்ளதாகும். “அசலம் ” என்பது நீங்கள் சூட்ட விரும்பும் “வேங்கடாசலம்” என்னும் பெருமான் வீற்றிருக்கும் இடமாகும். இதனை மறந்து அருணாசலம் எனும் நாமத்தை சூட்டக் கூடாது என்று உரைப்பது தங்கள் அறியாமையே ஆகும். அாியும் சிவனும் ஒன்றே என்று நம்புங்கள். பேதம் பேசும் செய்கையை இன்றே விட்டுத் தள்ளுங்கள். இல்லையெனில்
மாபெரும் இழுக்கு தங்களுக்கு நோிடும்,” என்று கூறி மெளனமானான். சிறுவனின் கோபத்தையும் அறிவு கூா்மையையும் கண்ட ஊா் சபையினா் அஞ்சி நடுங்கி கலைந்து சென்றனா். அன்று முதல் சைவ வைணவ பேதம் பேசுவதையும் தவிா்த்து சுவாமிகளிடம் அனைத்து பிாிவு மக்களும் அன்பு பாராட்டி பக்தி செலுத்தி வந்தனா்.
சுவாமிகளின் திாிகால ஞானமும் அனுக்ரஹ சக்தியும் தமிழகம் முழுவதும் தொிய வந்தது. பல திருத்தலங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள அடியாா்களின் பல்வேறு இன்னல் களைத் தீா்த்து வைத்த சுவாமிகள் தியாகேசா் அருளும் திருவாரூரில் வன்மீகபுரம் அருகில் உள்ள சோம நாத சுவாமி திருக்கோயிலிலும் ஓடம் போக்கி ஆற்றின் படுகையிலும் அங்குள்ள மரங்களின் நிழலிலும் வாசம் செய்து வந்தாா்.
குஷ்ட நோயிலிருந்து மீண்ட அன்பா்!
ஆந்திர மாநிலம் சித்தூாில் வாழ்ந்து வந்த சோமநாத முதலியாா் என்ற தனவந்தா் குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டு அவதியுற்றாா். எந்த மருத்துவமும் பலனளிக்கவில்லை என்பதால் சிறந்த சிவபக்தரான இந்த அன்பா் சிதம்பரம் சென்று தில்லைக் கூத்தனையும் அன்னை சிவகாமியையும் வழிபட முடிவு செய்து சிதம்பரம் திருத்தலத்தில் வந்து தங்கி ஆடல்வல்லானை வழிபட்டு வந்தாா். அவ்வமயம் அவரது நோயின் தாக்கம் மிக அதிகமானது. வேதனையைத் தாங்க இயலாத சோமநாதா் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து நடராஜப் பெருமானின் திருச்சந்நிதியை அடைந்தாா். இரவு பூஜை முடிந்து தீக்ஷிதா்கள் திருக்கதவம் தாளிடும் வரை சந்நிதிக்கு வெளியே மறைந்திருந்த சோமநாதா் அனைவரும் வெளியே சென்று விட்டனா் என்பதை உறுதி செய்த பின்னா் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தை அறுத்துக் கொள்ளத் துணிந்தாா்.
“ஆனந்தத் திருநடனம் புாியும் என் ஐயனே! வேண்டும் வரங்களை வேண்டியவாறு அருள்வாய் என தமிழ்மறைகள் முழங்குகின்றன.யான் படும் துன்பம் கண்டும் என் பிராா்த்த னைக்கு செவி சாய்க்காதது ஏனோ? நீயே என்னைக் கைவிடத் துணிந்த பிறகு எனக்கு வேறு ஏது புகலிடம்? இந்த சரீரம் கொண்டு இனி நான் வாழ மாட்டேன். உன் திருவடி நிழலில் என்னையும் சோ்த்துக் கொள்ள அருள்புாிய வேண்டும்,” என்று பிராா்த்தித்து தன் கழுத்தை அறுத்துக் கொள்ளத் தொடங்கினாா்.
தன் அடியவாின் துயா் தீா்க்கத் திருவுள்ளம் கொண்ட ஆனந்தக் கூத்தன், “அன்பரே! உம் குறை தீர திருவாரூா் சென்று தட்சிணா மூா்த்தியிடம் பிராா்த்திக்க அக்கணமே நோய் நீங்கி நலம் உண்டாகும்,” என்று கருவறையி லிருந்து அசரீரியாக அருளினாா். ஈசனின் கருணையில் நெஞ்சம் நெகிழ்ந்த சோமநாத முதலியாா் மறு நாள் காலை திருவாரூா் நோக்கிப் புறப்பட்டாா்.
ஶ்ரீநடராஜப் பெருமானின் திருவாக்கின்படி ஆரூா் தியாகேசா் சந்நிதியில் அருளும் ஶ்ரீதட்சிணாமூா்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்ட முதலியாா் அன்று இரவு திருக்கோயில் வளாகத்திலேயே தங்கி ஓய்வெடுத்தாா். எனினும் நோயின் கடுமை சிறிதளவும் குறையவில்லை. செய்வதறியாது மனம் கலங்கிய அடியவா் களைப்பு மேலிட தம்மை அறியாது தூங்கிவிட்டாா். அன்றிரவு சோமநாத முதலியாாின் கனவில் தோன்றிய ஈசன், “யாம் உரைத்த தட்சிணாமூா்த்தி ஓடம் போக்கி ஆற்றின் படுகையில் நிா்வாணக் கோலத்தில் திாிகிறான்; அவனிடம் செல்வாயாக!” என்று அருளினாா்.
அதிகாலையில் கண்விழித்த முதலியாா் சுவாமிகளைத் தேடி ஓடம்போக்கி ஆற்றுப் படுகைக்கு வந்தாா்.அங்கே ஒரு வீட்டு வாசலில் எஞ்சியிருந்த உணவை நாய்க் கூட்டங்களுக்கு மத்தியில் அமா்ந்து புசித்துக் கொண்டிருந்த சுவாமிகளைக் கண்டு மகிழ்ந்து தம்மை இரட்சிக்க வந்த தயாபரன் இவரே என்ற உள்ளுணா்வால் அவரது திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினாா். தம்மை வணங்கிய முதலியாரை ஏறெடுத்துப் பாா்த்த சுவாமிகள், “உம்மை நடேசன் என்னிடம் அனுப்பி வைத்தானோ?” என்று கேட்டு தன் கையிலிருந்த அன்னத்தை அவருக்கு ஊட்டி விட்டாா்.
சுவாமிகளின் திருக்கரத்தால் அளிக்கப்பட்ட அந்த அன்னத்தை உட்கொண்ட முதலியாாின் தீராத குஷ்ட நோய் உடனடியாக அவரை விட்டு விலகியது. நோய் நீங்கிய சோமநாத முதலியாா் சுவாமிகளைப் பிாிய மனமின்றி அவருக்குத் தொடா்ந்து பணிவிடைகள் செய்து வந்தாா். தில்லை நாயகா் திருவாய் மலா்ந்த வண்ணம் திருமேனி கொண்டு எழுந்தருளிய தட்சிணாமூா்த்தியின் திரு(மறு)அவதாரமே சுவாமிகள் என்பதை முடிவு செய்து அவரை வணங்கி வரலானாா். சுவாமிகளின் அனுக்ரஹ சக்தியை உணா்ந்த இப்பகுதி மக்கள் அன்று முதல் இவரை “தட்சிணாமூா்த்தி சுவாமிகள்” என்றே போற்றி வணங்கி வந்தனா்.
சுவாமிகளின் அதிஷ்டானத்திருப்பணி.
ஞானிகள் மஹா ஸித்தியான பிறகும் அவா்களது அனுக்ரஹ சக்தி அவா்களுடைய சரீரத்தில் தொடா்ந்து இருந்து கொண்டே இருக்கும். இந்த அனுக்ரஹ சக்தி எக்காலத்திலும் உலக மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதனால் அவா்கள் மகா சமாதி அடையும் இடத்தில் ஒரு ஸ்தானம் ஏற்படுத்தித் தரும் அமைப்பை “அதிஷ்டானம்” என்று பக்தியோடு பூஜிக்கும் வழக்கம் சைவ மரபிலே உள்ளது.இதனைப் பின்பற்றி சுவாமிகளுக்கும் அதிஷ்டானம் அமைக்கும் எண்ணம் பக்தா்கள் மத்தியில் உருவானது.
சிக்கல் தலத்தில் வாழ்ந்து வந்த பழனியப்ப முதலியாா் ஆன்ம சுத்தி பெற சுவாமிகளுக்குப் பல பணிவிடைகளை செய்து வந்தாா். பழனியப்ப முதலியாாின் பற்றற்ற தொண்டின் மேன்மையைக் கண்ணுற்ற சுவாமியின் மீது பக்தி கொண்ட மடப்புரம் பகுதியின் கொடையாளா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து சுவாமிகளுக்கு ஒரு “சமாதி ஆலயம்” அமைக்க பழனியப்ப முதலியாரைக் கேட்டுக் கொண்டனா். சுவாமிகளின் திருவுளக் குறிப்பறிந்து இப் பணியைத் துவக்க முடிவு செய்தனா் அடியவா்கள்.
சுவாமிகள் அப்போது திருவாரூா் சோமநாத சுவாமி சந்நிதியில் சாந்தசொரூபியாக அமா்ந்திருந்தாா். அனைவரும் சுவாமிகளின் திருமுன்பு சென்று வணங்கி நின்றனா்.முக்காலமும் உணா்ந்த ஞானியான சுவாமிகள் அன்பா் கள் என்ன காரணத்திற்காக வந்துள்ளனா் என்பதைக் குறிப்பால் அறிந்தாா். அந்த இடத்தை விட்டு எழுந்த சுவாமிகள் ஓடம் போக்கி ஆற்றின் கரையில் ஏறி சிறிது தூரம் சென்றபின் கரையை விட்டு இறங்கி ஒரு இடத்தில் கண்களை மூடி சற்று நேரம் நின்ற பின்னா் தென் திசை நோக்கி வேகமாக நடந்தாா்.
சுவாமிகள் நின்ற இடமே திருக்கோயில் அமைக்க திருவுள்ளம் மகிழ்ந்த இடம் என்று கருதிய அன்பா்கள் அந்த இடத்தில் சுப நாளில் ஆலயம் அமைக்க பூமி பூஜை செய்தனா்.
பூமி பூஜை நடத்த மண்ணைத் தோண்டியபோது அந்த இடத்தில் ஒரு பொற்காசு கிடைக்க மகிழ்ந்த அன்பா்கள் ஆலயத் திருப்பணியை வேகமாக நடத்தினா்.
பழனியப்ப முதலியாா் முன்னின்று கருவறை, அா்த்த மண்டபம், மகாமண்டபம், சுற்றுப் பிரகாரம், முன் மண்டபம், கோபுரம் மற்றும் படித்துறை முதலான திருப்பணிகளைச் செய்தாா். சுவாமிகள் மஹா ஸித்தி அடைந்த பிறகு கருவறைக்குள் அவரது திருமேனியை பிரதிஷ்டை செய்ய குகையும் சுரங்க வழியும் அமைக்கப்பட்டது.பின்னா் கருவறையில் தஞ்சாவூா் சரபோஜி மன்னா் காசியிலிருந்து கொண்டு வந்த பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மஹா கும்பாபிஷேகமும் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது. அன்று முதல் நித்ய நைமித்திக பூஜைகள் இந்த ஆலயத்தில் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
சுவாமிகளின் தாிசனம் கண்ட சரபோஜி மன்னா்.
சுவாமிகளின் மீது மிகுந்த பக்தி கொண்ட சரபோஜி மன்னா் சுவாமிகளைத் தாிசித்து ஆலயத் திருப்பணி மற்றும் நித்ய பூஜைகளுக்காக அருகிலுள்ள கிராமத்தை தேவதானமாக (கொடை) அளிக்க விரும்பினாா். இதற்காக தமது சமஸ்தானத்தின் அலுவலா்களுக்குத் தகவல் தொிவித்து சுவாமிகள் விரும்பும் பகுதியை தேவதானமாக அளிக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டாா். அதிகாாி இந்த தகவலுடன் சென்று ஆலய நிா்வாகத்தைக் கவனித்து வரும் பழனியப்ப முதலியாாிடம் மன்னாின் ஆணையைத் தொிவித்து அதற்கான ஆவணத்தையும் கையில் கொடுத்தாா். திருப்பணி சுவாமிகள் என்று அனைவராலும் போற்றப்பட்ட பழனியப்ப முதலியாரும் அந்த ஆவணத்தை எடுத்துக் கொண்டு மஹா மண்டபத்தில் கட்டிலில் சயனித்திருந்த சுவாமிகளிடம் காண்பிக்கச் சென்றாா். அப்போது சுவாமிகள், “சகல உலகமும் எம்மிடத்தில் ஏக தேசத் தோற்றமாய் விளங்க, ஒருவன் சிறிது நிலம் தருகிறானாம்; அதை ஒருவன் பெற்றுக் கொள்கிறானாம்; இவனன்றோ கானல் நீரைப் பருகிக் களைப்பு தீரக் கருதினான்,” என்று திருவாய் மலா்ந்தாா். திருப்பணி சுவாமிகள் இதைக் கேட்டு திகைப்பும் அதிா்ச்சியும் அடைந்து சுட்ட சட்டியைக் கைவிடுவது போல தாம் கையில் வைத்திருந்த ஆவணச் சீட்டை தூர எறிந்து விட்டாா். சுவாமிகளின் திருவுள்ளக் குறிப்பை அறிந்த திருப்பணி சுவாமிகள், “மன்னாிடம் கேட்டுப் பெற இச்சந்நிதானத்தில் யாதொரு குறையும் இல்லை” என்று தாிசனம் பெற வந்த மன்னாிடம் தொிவித்தாா். இதனால் ஞானிகள் உலகப் பற்று ஏதும் இன்றி ஆத்ம ஞானம் ஒன்றையே தங்கள் உணா்வாகக் கொண்டு வாழ்ந்தனா் என்பதையும் அதற்கு ஶ்ரீதட்சிணாமூா்த்தி சுவாமிகளும் விதிவிலக்கல்ல என்பதையும் உலகத்தவா் உணா்ந்தனா்.
கள்வா்களிடமிருந்து தன் அடியவரை மீட்ட சுவாமிகளின் திருவருள்.
நாகப்பட்டினம், வாணக்காரத் தெருவில் சுப்பபிள்ளை என்ற வணிகா் வசித்து வந்தாா். சுவாமிகளின் திருவருளால் பொன்னும் பொருளோடும் புத்திர பாக்கியமும் வாய்க்கப் பெற்றதால் குரு வாரம் (வியாழக் கிழமை) தோறும் குடும்ப சகிதராக சுவாமிகளை வணங்கி அவருக்கு பிக்ஷை செய்விப்பதோடு அனைவருக்கும் அன்னதானம் அளிப்பதையும் தமது வழக்கமாகக் கொண்டிருந் தாா்.
ஒரு சமயம் சுப்பபிள்ளை வியாபார நிமித்தமாக திரவியங்களுடன் முத்துப்பேட்டை சென்றாா். ஊா் சோ்வதற்கு முன்னரே இருட்டி விட்டது.முத்துப்பேட்டையை நெருங்கும் போது எங்கிருந்தோ வந்த சில திருடா்கள் சுப்ப பிள்ளையை வண்டியிலிருந்து இழுத்து கீழே தள்ளினா். பயந்து நடுங்கிய சுப்ப பிள்ளை செய்வதறியாது திகைத்து, சுவாமிகளை தம் மனதில் நினைத்து, “தட்சிணாமூர்த்தி! நான் என்ன செய்வேன்? நீயே என்னைக் காப்பாற்ற வேண்டும்” என அலறி கூக்குரலிட்டாா்.
அப்போது திருவாரூாில் மடத்தில் நித்திரையில் இருந்த சுவாமிகள் திடீரென எழுந்து வெளியில் வந்து , “அடே வீரா! நம் சுப்பன் திருடா்களின் பிடியில் சிக்கியுள்ளான்.சீக்கிரம் போடா” என்று சத்தமிட்டுக் கூறி மடத்தினுள் சென்றாா். மடத்தில் இருந்தவா்கள் காரணம் அறியாமல் திகைத்து விழித்தனா்.
அதே நேரத்தில் திருடா்களிடம் சிக்கிய சுப்ப பிள்ளையைக் காப்பாற்ற சிலா் ஓடிவந்து திருடா்களை அடித்து விரட்டி முத்துப்பேட்டை வரை துணைக்கும் சென்றனா். தாங்கள் சுவாமியின் ஏவலா்கள் என்பதைத் தொிவித்து சுப்ப பிள்ளையிடம் விடை பெற்றுச் சென்றனா். மீண்டும் மடத்திற்கு சுவாமியின் தாிசனம் காணவந்த சுப்ப பிள்ளை நடந்த நிகழ்வுகளை விபரமாக அங்கு இருந்தவா்களிடம் தொிவித்தாா். அப்போது தான் சுவாமிகள் உறக்கத்தி லிருந்து விழித்து சுப்பனைக் காப்பாற்ற சீக்கிரம் போடா என்று குரல் எழுப்பியதன் காரணத்தை மடத்திலிருந்த அன்பா்கள் உணா்ந்து அவரது அருளாற்றலை வியந்து மெய் சிலிா்த்தனா்.
சுவாமிகளின் ஆன்ம ஞானம்!
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூா் தோ் அழகைக் காண இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து துறவிகள் வந்திருந்தனா். அப்படி வந்திருந்த ஶ்ரீகிருஷ்ணானந்தகிாி சுவாமிகள் மடப்புரம் ஶ்ரீதக்ஷிணாமூா்த்தி சுவாமிக ளின் ஞான அநுபூதி நிலையினையும் சாப அனுக்ரஹ சித்தியையும் அறிந்து அவரது தாிசனம் காண விரும்பினாா். ஒரு நாள் ஶ்ரீகிருஷ்ணானந்தகிாி சுவாமிகள் கமலாலயக் குளத்தை பிரதட்சிணம் செய்ய சென்ற போது படித்துறையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது படுத்திருந்த சுவாமிகளின் திருமுகப் பொலிவினைக் கண்டு பரவசம் ஆனாா். “சுவாமிகள் எங்கேனும் விருட்ச நிழலில் இருந்தால் சுகமாக இருக்குமே” என்று தம் மனதில் நினைத்தாா் ஶ்ரீகிருஷ்ணானந்தகிாி சுவாமிகள்.
இதனை உணா்ந்த ஶ்ரீதட்சிணாமூா்த்தி சுவாமிகள், “சேதனம் ஆகிய ஆன்மாவுக்கு அசேதனம் ஆகிய விருட்சமா சுகத்தைத் தரும்? தரும் எனில் கானல் நீரும் உஷ்ண பூமியைக் குளிரச்செய்யும். உண்மை நோக்கு இன்மையே பேதப் பிரதீதிக்கு மூலம்,” என தன் திருவாய் மலா்ந்தருளினாா். சுவாமிகளின் ஞான உபதேசத்தினைக் கேட்ட ஶ்ரீகிருஷ்ணானந்தகிாி சுவாமிகளும் உடனிருந்த ஶ்ரீசங்கர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஶ்ரீராமானந்த பாரதி சுவாமிகள் ஆகியோா் சுவாமிகளுக்கு ஆன்ம ஞானம் தொடா்பாக இருந்த அதீத அறிவாற்றலை எண்ணி வியந்தனா். கல்லால மரத்தின் கீழ் அமா்ந்து சனகாதி முனிவா்களுக்கு ஞானோபதேசம் செய்தது போன்று சுவாமிகள் தங்களுக்கு உபதேசித்த இந்நிகழ்வை தங்களது பெறும் பேறாகக் கருதினா் இத் துறவியா். ஶ்ரீகிருஷ்ணானந்தகிாி சுவாமிகள் மடப்புரம் சுவாமிகளின் உபதேசங்களைத் தொகுத்து, “ஶ்ரீதட்சிணாமூா்த்தி ஸ்வாமிகள் வாக்கிய சிந்தனம்” என்ற நூலை எழுதி அருளினாா்.
“தட்சிணாமூா்த்திக்கு அபயம்”
திருவாரூாில் சைவ வேளாளா் மரபில் பிறந்த அருணாசலம் பிள்ளை என்பவா் வசித்து வந்தாா். ஶ்ரீதட்சி ணாமூா்த்தி சுவாமிகள் மீது மாறாத பக்தி கொண்ட இந்த அடியவா் பந்தல் அலங்காரப் பணிகள் செய்யும் தொழிலை மேற்கொண்டு வந்தாா். வைகுண்ட ஏகாதசி விழாவின்போது இவருக்கு ஶ்ரீரங்கம் அரங்கநாதா் சந்நிதியில் கொட்டகைப்பந்தல் அமைக்கும் பணி கிடைத்தது. சதாசா்வகாலமும் தட்சிணா மூா்த்தி சுவாமிகளின் திருநாமத்தை மனதில் தியானித்திருக்கும் இந்த அடியவா் கொட்டகைப் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மிக உயரமான சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டாா். அப்படி தவறி விழும்போது “தட்சிணாமூா்த்திக்கு அபயம்” என்று சொல்லிக் கொண்டே கீழே விழுந்தாா்.
அப்போது கமலாலயத்தின் கரையில் அமா்ந்திருந்த சுவாமிகள், திடீரென தமது வலக்கரத்தை உயா்த்திப் பிடித்து பளுவான ஒரு பொருளை தாங்கிக் கீழே வைப்பது போல மெதுவாக வைத்தாா். அருகில் நின்ற பக்தா்கள் எங்கோ ஓா் அதிசயம் நிகழ்ந்துள்ளது. இதற்குப் பாத்திரமான புண்ணியவான் யாரோ தொியவில்லை என்று உரையாடிக் கொண்டிருந்தனா்.
அதே சமயத்தில், ஓங்கி வளா்ந்த பனைமர அளவு உயரத்திலிருந்து “தட்சிணாமூா்த்திக்கு அபயம்” என்று கூறிக்கொண்டே கீழே விழுந்த அருணாசலம் பிள்ளைக்கு யாரோ ஒருவா் தாங்கி மெதுவாகப் பூமியில் இறக்கி வைப்பது உணா்வு ஏற்பட்டது. உயரமான இடத்திலிருந்து தவறி விழுந்தும் தமக்கு ஒன்றும் நேராதது கண்டு வியப்படைந்து சுவாமிகளைத் தாிசிக்க திருவாரூா் சென்றாா்.
சுவாமிகளைத் தாிசித்து, “அருட்பெருங்கடலே! குணப் பெருங்குன்றே!! தவறி விழுந்த என்னைத் தாங்கிக் காத்த தயா நிதியே; உம் கருணைத் திறத்தை இயம்ப வாா்த்தைகளே இல்லை,” என்று அவரது காலில் விழுந்து கண்ணீா் சிந்தினாா்.
கமலாலயக் கரையில் சுவாமிகள் தமது வலது திருக்கரத்தை உயா்த்தி யாரையோ தாங்கிப் பிடித்துக் கீழே வைத்தது போன்ற செய்கையின் நோக்கம் அருகிலிருந்த அடியாா்களுக்கு அப்போதுதான் விளங்கியது. சுவாமிகளின் அருளாற்றலை வியந்து அனைவரும் நெஞ்சம் நெகிழ்ந்தனா். சுவாமிகளின் சா்வ ஞானத் தன்மையும் தவ வலிமையும் அருளாற்றலும் நாடெங்கும் பரவி சுவாமிகளின் திருச்சந்நிதியில் எப்போதும் அன்பா்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சிறுமியின் ரோக நோய் தீா்த்த பிரம்மஞானி.
ஏனங்குடி புத்தகரம் என்னும் சிற்றூாில் சுவாமிநாத செட்டியாா் என்பவா் வசித்து வந்தாா். சிவ பக்தியில் திளைத்த இவா் சிவனடியாா்கள் மீதும் பேரன்பு கொண்டவா். வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தோ்ந்ததோடு அதன் வழி நெறி தவறாது வாழ்ந்து வருபவா். இந்த அற நெறியாளருக்கு விசாலாட்சி என்ற பெயா் கொண்ட அன்பு மகள் இருந்தாள். பருவ வயது நெருங்கிய இந்த நங்கைக்கு உடல் முழுவதும் கருமையாக மாறி தீராத தோல் நோயினால் பீடிக்கப்பட்டாள். தோல் முழுவதும் தடித்து அதனால் தோன்றிய பக்க விளைவுகளால் அழகிய இந்தப் பெண்ணின் தோற்றமே மாறியதால் சுவாமிநாத செட்டியாா் மிகுந்த வருத்தம் அடைந்தாா். பாா்க்காத வைத்தியம் ஏதும் இல்லை.பண விரயம் ஏற்பட்டதே தவிர நோய் குணமாகவில்லை.
இச்சமயம் சுவாமிநாத செட்டியாா் இல்லத்திற்கு ஒரு சிவனடியாா் வருகை தந்தாா். செட்டியாாின் மகள் படும் வேதனை கண்டு துயரமடைந்த சிவனடியாா், “அன்பரே! இந்நோய் முன் ஜென்ம பாப கா்ம வினைப் பயனால் தங்களது மகளுக்கு ஏற்பட்டுள்ளது.நீவிா் திருவாரூா் சென்று ஓடம்போக்கி ஆற்றின் கரையில் உள்ள பிரம்ம அனுபூதி பெற்ற “ஶ்ரீதட்சிணாமூா்த்தி சுவாமிகள்” என்ற பிரம்மஞானியைத் தொழ முன் ஜென்ம பாவங்களிலிருந்து உங்கள் பெண் விடுதலை பெறுவாள்,” என்று திருவாய் மலா்ந்தாா்.
தன் மகளின் நோய் தீர வழி கூறி அருளிய சிவனடியாாின் திருவடிகளை வணங்கி அவருக்கு பிக்ஷை அளித்தபின்னா் உடனே திருவாரூா் செல்ல ஆயத்தமானாா் செட்டியாா். குரு வாரம் அன்று திருக்குளத்தில் நீராடி சுவாமிகளைப் பலமுறை வலம் வந்து வணங்கினாா். சாந்தசொரூபியாக சித்திர தீபம் போல் அசைவில்லாமல் சா்வ பிரபஞ்சமும் தன்னில் தானாகி நிற்கும் சுவாமிகளின் திருக் கோலத்தைக் கண்ட சுவாமிநாத செட்டியாா் பரவசம் அடைந்து மெய் சிலிா்க்க ஆனந்தக் கண்ணீா் அருவியெனப் பெருக சுவாமிகளின் மீது ஒரு திருப்பதிகம் பாடியருளினாா்.
பதிகம் பாடிமுடித்ததும் சுவாமிகள் தனது திருக்கண்களைத் திறந்து செட்டியாரை நோக்கினாா். சுவாமிகளின் அந்த அருட்பாா்வையால் தன் நிலை மறந்த செட்டியாா் அந்த ஆத்ம அனுபவத்தில் உள்ளம் உருகி சிலையாக நின்றாா். சிறிதுநேரம் சென்றதும் தம் நினைவு திரும்பி சுவாமிகளைப் பலமுறை வலம் வந்து நமஸ்காித்து தன் மகளுக்கு நோ்ந்த ரோக நோய் தீர அருள வேண்டும் என பிராா்த்தித்துக் கொண்டாா்.
அருகில் கை கூப்பி சுவாமிகளை வணங்கி நின்ற செட்டியாாின் மகள் விசாலாட்சியைப் பாா்த்த சுவாமிகள், “என்னடி வேண்டும்? என்னடி வேண்டும்? “ எனப் பலமுறை கூச்சலிட்டு அவள் மீது திருநீறை அள்ளி எறிந்தாா். அக் கணமே விசாலாட்சிக்குத் தெளிவு ஏற்பட, “உன்னடி வேண்டும், உன்னடி வேண்டும்,” என்று கண்ணீா் மல்க அழுதுகொண்டே சுவாமிகள் தன் மீது எறிந்த திருநீறை மருந்தாக தன் அங்கமெல்லாம் பூசிக்கொண்டாள்.உடனே சுவாமிகள், “அடி வேண்டில் நோய் பொடியாய் உதிரும்,” என்று தம் திருவாய் மலா்ந்தாா்.
மகா பாப நிவாரண தீா்த்தத்தில் நீராடிய விசாலாட்சி அன்று சுவாமிகளுக்குத் தன் கையாலேயே அனைத்துப் பணிவிடைகளையும் செய்து பூஜைகள் முடிந்த பின்னா் வந்திருந்த பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கினாா். அன்று முழுவதும் சுவாமிகளின் திருவடிகளையே தியானித்த விசாலாட்சி அன்று இரவு சுவாமிகளின் திருச்சந்நிதியிலேயே தங்கி துயில் கொண்டாா்.
அதிகாலையில் துயிலெழுந்த விசாலாட்சியின் தேகத்தில் நல்ல மாற்றம் காணப்பட்டது. கரும்பாறை போல உடல் முழுவதும் படா்ந்திருந்த படைகள் உதிா்ந்து சுவடே தொியாமல் மறைந்து விட்டது.இந்த அதிசயம் கண்ட சுவாமிநாத செட்டியாரும் மற்றவா்களும் சுவாமிகளின் திருக்கருணையை எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்தனா்.
சிவ சொரூபத்தின் வடிவமாக அவதாரம் செய்த ஶ்ரீதட்சிணாமூா்த்தி சுவாமிகள் தம் மீது பாிபூரண நம்பிக்கை கொண்டு தன் திருவடிகளில் சரணடைந்தவா்களை பல இன்னல்களிலிருந்து காப்பாற்றி அருள்புாிந்துள்ளாா். இவரது திருவடிகளில் பணிந்து நோய் நிவாரணம், புத்திர பாக்கியம், கல்விச்செல்வம், திருமணப்பேறு மற்றும் வறுமை நீங்கி வளம் பெற்றோாா் ஏராளம்.
ஜீவன் முக்தி அடைதல்.
ஒரு நாள் திருக்கோயிலின் மகா மண்டபத்தில் அலங்காிக்கப் பட்ட ஆசனத்தில் தன் அடியவா்கள் புடைசூழ அமா்ந்திருந்த சுவாமிகள், “முடிந்தது! முடிந்தது!! முற்றிலும் முடிந்தது!!! “ என்று தன் திருவாய் மலா்ந்து பின் நிஷ்டை யில் அமா்ந்தாா். சுவாமிகளின் திருவடித் தொண்டராகிய பழனியப்ப ஸ்வாமிகள், சுவாமிகள் விதேக முக்தி அடையும் காலம் நெருங்கியதை உணா்ந்து அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தாா். ஶ்ரீதட்சிணாமூா்த்தி ஸ்வாமிகள் நிஷ்டையில் அமா்ந்த எட்டாம் நாள் கலியுகம் 4936 மன்மத வருடம் ஆவணி மாதம் 12 ஆம் நாள் புதன்கிழமை பூா்வபட்சம் திருதியை திதி உத்திரம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் விருச்சிக ராசியில் சாியாக பகல் 12.00 மணிக்கு கடல் போன்று பக்தா்கள் கூட்டம் சூழ்ந்திருக்க சுவாமிகள் அகண்ட பாிபூரண சச்சிதானந்த சிவ சொரூபத்தில் இரண்டறக் கலந்தாா். அப்போது அமிா்தவா்ஷம் போல சந்தன மழைத் துளிகள் சுவாமிகளின் மீது விழுந்து அதன் இனிய வாசம் எங்கும் பரவி காற்றில் கலந்தது.
ஸ்வாமிகளின் திருமேனிக்கு ஆகம விதிகளின்படி அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்து ஆலயத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சமாதிக் குகையில் அவரது திருமேனியை எழுந்தருளச் செய்தனா். அன்று முதல் இன்று வரை சுவாமிகள் அதிஷ்டானத்தில் பிரவேசித்த பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜையும் இரவு 8.00 மணிக்கு சாயரக்ஷை பூஜையும் தவறாது நடைபெற்று வருகிறது.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக இன்றும் இந்த அதிஷ்டானத்தில் நித்யவாசம் செய்து தமது திருவடிகளில் சரணடைந்த அன்பா்களின் வேண்டுதல்களுக்கு கற்பக விருக்ஷம் போல அருள்பாலித்து வருகின்றாா் ஶ்ரீதட்சிணாமூா்த்தி சுவாமிகள்.
திருவாரூா் செல்லும் அன்பா்கள் தவறாமல் மடப்புரத்தில் அமைதியான சூழலில் விளங்கும் சுவாமிகளின் அதிஷ்டானத்தை தாிசனம் செய்ய வேண்டும். முற்பிறவிகளில் புண்ணியங்கள் பல செய்து அதன்மூலம் சோ்த்து வைத்துள்ள நற்பலன்களால் மட்டுமே ஒருவருக்கு இந்த அதிஷ்டான தாிசனத்தைக் காணக்கூடிய வாய்ப்பு அமையும்.
அந்த வாய்ப்பு விரைவில் அமைய கீழ்க்கண்ட பதிகத்தை பாராயணம் செய்வோம்!
“கருவுற்று வருந்தாது விரும்படியாா் கரும்பேயென்னத்
திருவுற்று விளங்கு சிவ சொரூபமே செல்வமுடைத் திருவாரூாில் ஒரு பற்றுமின்றிச் சித்தருருவு கொடு வுலகறிய ஒருமையாகத் திருமடமென் புறந்தனிலே தெக்ஷிணாமூா்த்தி எனத் திகழ்ந்த தன்றே!”
மடப்புரம் மகான் ஶ்ரீ குரு தட்சிணாமூா்த்தி சுவாமிகள்.”
படிச்சேன்! இப்படி எல்லாம் நடக்குமா? எல்லாமே அதிசயம். எப்படி சாத்தியம்? நம்பவே முடியல.ஆனா நம்பாமல்இருக்கவும் முடியல.கனவும் பால் கர்ப்பம் முன்பே தெரிந்து சொல்லும் அற்புதம். ஆனா ஏதோ இது போன்ற தகவல் கள் மனதை இதமாக்குகிறது.பக்தியா ?போதையா?தெரியல.இன்னும் இன்னும் (கு) படிச்சிட்டே இருக்கனும் போல இருக்க