#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
பல வருடங்களாக சிசு மரணத்தை மறைத்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்த பெண் மருத்துவர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா தஞ்சாக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் மருத்துவர், அப்பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற சிசு மரணங்களை முழுவதுமாக மறைத்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாக அப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் மிகவும் முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் நீலாதேவி மீது அப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நம்மை தலைசுற்ற வைக்கும் வண்ணமாகவும், இவர் ஏதும் மன நலம் சார்ந்த பிரச்சனையில் உள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதிலும் குறிப்பாக இப்பெண் மருத்துவர் தேவைப்பட்டாலும் படாவிட்டாலும் குளுக்கோஸ் போடுவது, பொதுமக்களின் நோட்டுகளை தூக்கி எறிந்து அவமானப்படுத்தி வெளியே போ என்று கத்துவது, தேசிய தர உறுதி தரநிலைகள் சான்றிதழ் பெற சுகாதார நிலையத்தை சீர்திருத்தம் மேற்கொண்ட மற்றொரு ஆண் மருத்துவர் மீது தங்கும் விடுதி சுவரை இடித்ததாக பொய் புகார் பொதுப் பணித்துறை அதிகாரியிடம் கொடுத்தது மற்றும் பணியாளர் எழுதியதுபோல் எழுதி இன்வர்டர் பேட்டரியை காணவில்லை என்று புகார் கொடுத்தது, அதே போல் மற்றொரு புகார் தயார் செய்து உள்ளாட்சிப் பிரதிநிதியை கட்டாயப்படுத்தி கையொப்பம் பெற்று அனுப்பியது, வெளி நோயாளிகள் சிகிச்சை அறையை தவிர்த்து, பொது அறையில் நோயாளிகள், குறிப்பாக பெண்கள் மருத்துவரிடம் மறைமுகமாக கூற வேண்டிய அறிகுறிகளை அனைவர் முன்னிலையில் கூற வைத்துவிட்டு, வெளி நோயாளிகள் சிகிச்சை அறையில் டிரைவருடன் சேர்ந்து உணவு அருந்துவதற்கு மட்டும் பயண்படுத்துவது, தான் சொல்வதை கேட்காத பணியாளர்களை பொதுமக்கள் முன்னிலையில் வசைபாடி அவமானப்படுத்துவது, சிசுவை பறிகொடுத்து கண்ணீரில் தத்தளிக்கும் பணியாளரிடம், "எனக்கு செய்த துரோகத்தால் தான் நீ பிள்ளையை பறிகொடுத்துவிட்டாய்", என்று சபிப்பது, வருகைப் பதிவேடை பூட்டி வைத்துவிட்டு, பின்னர் பல நாட்களுக்கும் சேர்த்து வருகை பதிவை செய்து கொள்வது, உயர் அதிகாரிகளை மதிக்காமல், எனக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் சொந்தக்காரர் இருக்கிறார் என்று மிரட்டி, பொய் பழிகளை சுமத்தி புகார் அளிப்பது, நேயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், வீண் விவாதங்களையும் கிசுகிசுகளையும் பரப்புவது, மகளிர் சுகாதார தன்னார்வலரை பணி செய்ய விடாமல் தடுப்பது என்று இவர் மீதான குற்றச்சாட்டுகளின் லிஸ்ட் பெரிதாக போய்கொண்டே இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு சிசுவின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிந்து, பிற்காலத்தில் அம்மாதிரியான மரணங்கள் நிகழாமல் தடுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க முடியாமல் செய்து சிசு மரணத்தை மறைத்து சமுதாயச் சீர்கேட்டை ஏற்படுத்தும் இப்பெண் மருத்துவரை என்னவென்று சொல்வது என அப்பகுதி கிராம பொதுமக்கள் கண்ணீருடன் வேதனை தெரிவித்தனர்.
எனவே பெண் மருத்துவர், டிரைவர், கிராம சுகாதார செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மீதுதான குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய மற்றும் துரித கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், தஞ்சாக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேறு ஏதேனும் பெரும் அசம்பாவிதங்கள் நடந்து விடாமல் தடுக்க, சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை துரித நடவடிக்கை மேற்கொள்ளுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


