SHEIK 🌺KSN🌺
நாம தூரமா போய்டோம்னு உணரும்போது, பாவங்கள்ல மூழ்கும்போது,
தொழுகைய விடும்போது... இதயம் இப்படிதான் கதறும்.
"எங்களை மன்னித்து, எங்கள் தவ்பாவை ஏற்றுக்கொள்வாயாக. நிச்சயமாக நீயே தவ்பாவை ஏற்பவன், நிகரற்ற அன்புடையவன்" —
அல்குர்ஆன்_அல்_பகரா 2:128.
"யார் தவ்பா செய்து, ஈமான் கொண்டு, நல்ல அமல் செய்கிறார்களோ, அவர்களின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றிவிடுவான்" — அல்குர்ஆன்_அல்_ஃபுர்கான் 25:70.
அமைதியான கடல், மெல்லிய வெளிச்சம்.
நாம் எவ்ளோ தூரம் போனாலும், அல்லாஹ் கிட்ட திரும்பி வர ஒரு பாதை எப்போதும் இருக்கு.
அல்லாஹ் நம்மை விட்டு ஒரு போதும் தூரமாகல. நாம்தான் அவனை விட்டு தூரமானோம்.
என் இதயத்தை கடினமாக்கிடாதே.
தொழுகையை விட்டுடாம பாதுகாப்பாயாக.
உன் நேசத்தை என் உள்ளத்தில் நிரப்புவாயாக.
என்னை உனக்கு விருப்பமான அடியானாக ஆக்குவாயாக. ஆமீன்.!
தவறு செய்துட்டோம்னு வருத்தம் இருந்தா, அதுவே அல்லாஹ் நம்மை நேசிக்குறதுக்கு அடையாளம்.
இப்போவே சஜ்தாவுல விழுந்து கேளுங்க. அவன் காத்துட்டு இருக்கான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️