🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

493K Posts • 2454M views
SHEIK 🌺KSN🌺
2K views 7 days ago
"அவர் தான் முதல்ல சொல்லட்டும்"னு நினைக்காம, நாம முதல்ல அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லுறதுதான் சிறந்தது. அதுல தான் அல்லாஹ்வின் நெருக்கம் இருக்கு. நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் சொர்க்கம் போகனும்னா ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பு செலுத்துங்க. அதுக்கு நான் ஒரு வழி சொல்லவா? உங்களுக்குள்ள ஸலாமை பரப்புங்க" — (ஹதீஸ் முஸ்லிம்) இரண்டு முஸ்லிம்கள் கை கொடுத்து ஸலாம் சொல்லும்போது, அவர்கள் பிரிவதற்குள் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. _ அபூதாவூத் 5212. இரண்டு பேரும் சிரிச்ச முகத்தோட, ஒருத்தர் நெஞ்சுல கை வச்சு, இன்னொருத்தர் கை கொடுத்து வரவேற்கிறாங்க. இதுதான் இஸ்லாம் காட்டுற சகோதரத்துவம். இன்னைக்கு வீட்ல, கடைல, ஆபீஸ்ல யாரை பார்தாலும் முதல்ல நாமளே ஸலாம் சொல்லுவோம். "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு" அதுக்கு "வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு"னு பதில் சொல்லுவோம். அல்லாஹ் நம்மை அவனுக்கு நெருக்கமானவர்களில் ஆக்கட்டும். ஆமீன்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
55 likes
38 shares