#🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🙏கோவில் #👏Inspirational videos #ஆன்மிகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 29, 2026
திருச்சிற்றம்பலம்
*எம்பிரான் மாணிக்கவாசகர் அருளிய எட்டாம் திருமுறை*
*திருவாசகம் - திருச்சதகம் - அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா)
இடையறா அன்பு அருளுக - பதிகம்*
*பாடல்* :
நாடகத்தால் உன்னடியார்
போல்நடித்து, நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான்,
மிகப்பெரிதும் விரைகின்றேன்;
ஆடகச்சீர் மணிக்குன்றே!
இடையறா அன்புனக்குஎன்
ஊடகத்தே நின்று, உருகத்
தந்தருள்;எம் உடையானே! - 8.005.10
*பொருள்* :
*இறைவா! நான் உண்மையான பக்தன் அல்ல; ஆனால், உன்னுடைய மெய்யடியாரைப் போலப் புறத்தே வேடமிட்டு, நாடகமாடி நடித்துக் கொண்டிருக்கிறேன்.அப்படிப் போலியாக நடித்தாலும், உன்னுடைய முக்தி உலகமாகிய வீட்டுலகிற்குள் எப்படியாவது நடுவிலே புகுந்துவிட வேண்டும் என்று மனதிற்குள் அளவுகடந்து அவசரப்படுகிறேன். சுத்தமான பொன்னால் ஆன, ஒளிவீசும் அழகிய ரத்தின மலையே! தகுதி இல்லாத என் மீதும் உனக்கு நீங்காத, இடைவிடாத பேரன்பு உண்டாகும்படிச் செய்து, என்னை ஆட்கொண்ட எஜமானனே! என் உடம்பின் உள்ளே இருக்கும் ஆன்மாவில் நீயே நின்று, என் நெஞ்சம் உருகிப் பணியும் உன்னத நிலையை எனக்கு அருள் செய்வாயாக!* என எம்பிரான் மாணிக்கவாசகர் இறைவனின் மேன்மையையும் தனது கீழ்மையையும் இப்பாடலில் கூறுகிறார்.
*திருச்சிற்றம்பலம்*


