அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது,
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் *"உட்கார்ந்து தொழுபவருக்கு, (நின்று தொழுபவரின்) தொழுகையில் பாதி (நன்மை)யே உண்டு!"* என்று கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் உட்கார்ந்து தொழுது கொண்டிருப்பதைக் கண்டேன்.
அப்போது நான் அவர்களது தலைமீது எனது கையை வைத்தேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள், *"அப்துல்லாஹ் பின் அம்ர்! உமக்கு என்ன (நேர்ந்தது)?"* என்று கேட்டார்கள்.
நான், *"அல்லாஹ்வின் தூதரே! உட்கார்ந்து தொழுபவருக்கு, (நின்று தொழுபவரின்) தொழுகையில் பாதி (நன்மை)யே உண்டு எனத் தாங்கள் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது; ஆனால் தாங்களே உட்கார்ந்து தொழுது கொண்டிருக்கிறீர்களே?"* என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள், *"ஆம்; ஆயினும் நான் உங்களில் ஒருவரைப் போன்றவன் அல்ல!"* என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்,
அத்தியாயம் : பயணிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்.)
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ هِلاَلِ بْنِ يَسَافٍ عَنْ أَبِي يَحْيَى
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو
قَالَ حُدِّثْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: *((صَلاَةُ الرَّجُلِ قَاعِدًا نِصْفُ الصَّلاَةِ)).*
قَالَ فَأَتَيْتُهُ فَوَجَدْتُهُ يُصَلِّي جَالِسًا فَوَضَعْتُ يَدِي عَلَى رَأْسِهِ
فَقَالَ *مَا لَكَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو* قُلْتُ حُدِّثْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَّكَ قُلْتَ: *((صَلاَةُ الرَّجُلِ قَاعِدًا عَلَى نِصْفِ الصَّلاَةِ)).* وَأَنْتَ تُصَلِّي قَاعِدًا قَالَ: *((أَجَلْ وَلَكِنِّي لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ)).*
صحيح مسلم
كتاب صلاة المسافرين وقصرها
حكم :صَحِيح (الألباني)



