#ithuvum kadanthu pogum அரசர் உலோக வேலை செய்பவரிடம் உத்தரவிட்டார்.*_
_*'நான் மகிழ்ச்சியில் திளைக்கும்போது என் மனதைப் பக்குவப்படுத்தக் கூடியதாயும்,*_ _*சோர்வடையும் போது*_
_*என் வருத்தத்தைப்*_ _*போக்கும்படியாகவும் ஒரு முத்திரையை*_
_*எனக்குத் தயாரித்துக் கொடு' என்று.*_
_முத்திரை செய்வது பொற்கொல்லருக்கு எளிதாகவே இருந்தது. ஆனால் அதில் பொருத்தமான முத்திரை மொழியைத் தேர்வு செய்து பொறிப்பதுதான் அவருக்குக் கடினமாய் தெரிந்தது. அந்த வகையில் தமக்கு உதவும்படி ஒரு ஞானியை வேண்டினார் அவர்._
_*அந்த ஞானியும் அரசரின்*_
_*தேவைக்கேற்ற*_ _*வாசகத்தைத் தேர்வு*_ _*செய்தார். அவர் தேர்வு*_ _*செய்த வாசகம்,*_ _*'இதுவும் கடந்து செல்லும்'*_
_*என்பதாகும்.*_
_தான் வெற்றி பெறும் போதெல்லாம் அரசர் முத்திரை வாசகத்தைப் படித்து கர்வப்படாமல் இருப்பார்._
_'இதுவும் கடந்து செல்லும்!'_
_தான் நம்பிக்கையிழக்கும்_ _நிலையில் அந்த_ _முத்திரையைப் பார்ப்பார்,_ _நம்பிக்கை பெறுவார்._


