ShareChat
click to see wallet page
search
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம்  முதலாம் திருமுறை 75வது  திருத்தலம் திருவெங்குரு அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர் பவழமல்லி பிரம தீர்த்தம் பாடல் எண் : 1 காலை நன்மாமலர் கொண்டு அடிபரவி கைதொழும் மாணியை கறுத்த வெங்காலன் ஓலமதிடமுன் உயிரொடு மாள உதைத்தவன் உமையவள் விருப்பம் பெருமான் மாலை வந்து அணுக வோதம் வந்து உலவி மறி திரைசங்கொடு பவளமும் உந்தி வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே பொழிப்புரை: வைகறைப் பொழுதில், சிறந்தனவாகிய நல்ல மலர்களைப் பறித்துவந்து சாத்தித் தன் திருவடிகளைப் பரவி, கைகளால் தொழும் மார்க்கண்டேயன் உயிரைக் கவரச் சினந்துவந்த கொடிய காலனை ஓலமிட்டு அலறித் தனக்கு முன்னே உயிரோடு மாளுமாறு உதைத்தருளியவனும், உமையம்மைக்கு விருப்பமானவனும் ஆகிய எம்பெருமான், மாலைக் காலம் வரக் கடல் வெள்ள நீர் வந்து உலவிச் சூழ்ந்து வரும் அலைகளால் சங்கு, பவளம் ஆகியவற்றை உந்திவந்து கரையிற் சேர்க்கும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழியில் மேவி வீற்றிருந்தருள்கின்றான். குறிப்புரை: நாள்தோறும் மலர்கொண்டு அடிபரவும் மார்க் கண்டற்காகக் காலனைக் காய்ந்த பரமன் வெங்குரு என்னும் சீகாழியில் வீற்றிருக்கிறார் என்கின்றது. மாணி - பிரமசாரியாகிய மார்க்கண்டர். கறுத்த - கோபித்த. மாலைக்காலம் வந்ததும் கடல் ஓதம் பெருகி, சங்கையும் பவளத்தையும் உந்திக் கடல்சாரும் சோலைகள் சூழ்ந்த காழி என நெய்தல்வளம் கூறப்பெற்றது. #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
🙏ஆன்மீகம் - ShareChat