#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரிப்பு
தூத்துக்குடி, ஏப்.20
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் 51வது வார்டு இந்திராநகர், திரு.வி.க.நகர் ஆகிய பகுதிகளில் வீடுவீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
முன்னதாக நெல்லை மண்டல அதிமுக தகவல் தொழிற்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் சி. மந்திரமூர்த்தி சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தார். பெண்களும் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வர வேற்றனர்.
நிகழ்வில் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் உடன் சென்றனர்.


