ShareChat
click to see wallet page
search
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று ஜூன் 29 சென்னையில் முதன்முறையாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட தினம் (2015). சென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை சென்னை ஆலந்தூர், கோயம்பேடு இடையே ஜூன் 29, 2015 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கிவைக்கப்பட்டது. இதன் மூலம் சென்னை இந்தியாவில் மெட்ரோ சேவையை பெற்ற ஆறாவது நகரமாகியது. சென்னை மெட்ரோவின் முதல் ஓட்டுநர் என்ற பெருமையை ப்ரீத்தி என்ற பெண் ஓட்டுநர் பெற்றார். இந்த முதற்கட்ட மெட்ரோ ரயிலின் அனைத்து நிலையங்களும் உயர்நிலை நிலையங்களாகும். பின்னர் இந்த சேவை சென்னை விமான நிலையம் வரை நீட்டிக்கப்பட்டது.