꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
ShareChat
click to see wallet page
@kalaiselvan6196
kalaiselvan6196
꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
@kalaiselvan6196
கலைக்களஞ்சியம் ✍️
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று ஜூன் 29 1949 - இன ஒதுக்கல்(அபார்த்தெய்ட் அல்லது அபார்த்தீட்) முறையின் முதல் சட்டமான கலப்பின திருமணங்கள் தடைச்சட்டம் தென்ஆஃப்ரிக்கப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது(ஜூலை 1இல் அரச ஒப்புதல்பெற்று, ஜூலை 8இல் நடைமுறைப்படுத்தப்பட்டது). அபார்த்தீட் என்ற ஆஃப்ரிக்கான்ஸ் மொழிச் சொல்லுக்கு பிரித்து வைத்தல் என்று பொருள். 25 லட்சம் ஆண்டுகளுக்குமுன்பே மனிதனின் மூதாதைகள் வாழ்ந்த பகுதியான ஆஃப்ரிக்கா, மனித இனம் பரிணாமம் பெற்ற இடங்களுள் ஒன்று. ஒன்றேகால் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே (முழுமையடைந்த)மனிதன் வாழ்நத இப்பகுதிக்குள் 1488இல் போர்ச்சுகீசியரான பார்த்தலேமு டயஸ் கால்பதித்தார். 1652இல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நுழைந்து, ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதிலிருந்தே அதிகாரப்பூர்வமற்ற இன ஒதுக்கல் தொடங்கிவிட்டது. கேப் நகர-கிராமப் பகுதிகளுக்கிடையே பயணிக்கும் கருப்பினத்தவர் அனுமதி அட்டை வைத்திருக்கவேண்டும் என்று 1760இல் இயற்றப்பட்ட சட்டத்தின்மூலம் டச்சுப் பேரரசின் சட்டமாக்கப்பட்ட இன ஒதுக்கல் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தொடங்கிவிட்டது. 1795இல் கேப் குடியேற்றத்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர். 1802இல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி டச்சுக்காரர்கள் மீண்டும் பெற்றாலும், 1806இல் மீண்டும் ஆங்கிலேயர் கைப்பற்றினர். 1833இல் இங்கிலாந்துப் பேரரசு முழுவதிலும் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும், ஆஃப்ரிக்காவில் வேறு பெயர்களில் அடிமை முறையைத் தொடரும் அவசரச்சட்டங்கள் இயற்றப்பட்டன. கருப்பினத்தவரின் வாக்குரிமையைக் குறைத்த சட்டம், இந்தியர் வாக்குரிமையைப் பறித்த சட்டம், ஆஃப்ரிக்கர்களின் நில உரிமையைக் குறைத்த சட்டம் உள்ளிட்டவை 1890களில் இயற்றப்பட்டன. 1910இல் தென்ஆஃப்ரிக்க ஒன்றியம் உருவாக்கப்பட்டபின், வெள்ளையருக்கு மட்டும் வாக்குரிமை, வெள்ளையர் தவிர்த்த மற்றவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர பிற இடங்களில் நிலம் வாங்குவதற்குத் தடை உள்ளிட்ட பல சட்டங்கள் இயற்றப்பட்டன. 'தேசியக் கட்சி' 1948இல் நடைபெற்ற தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றி இயற்றிய, மக்களை வெள்ளையர், கருப்பினத்தவர், (வெள்ளையல்லாத!)நிறத்தவர், இந்தியர், ஆசியர் என்று பல்வேறு பிரிவுகளாகப் பிரிப்பு, கருப்பினத்தவரின் குடியுரிமை பறிப்பு முதலான இன ஒதுக்கல் சட்டங்கள் 1991வரை நடைமுறையிலிருந்தன.
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று ஜூன் 29 1613 - ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கான, க்ளோப் தியேட்டர், தீவிபத்தில் தரைமட்டமானது. சேம்பர்லின் பிரபுவின் உதவியுடன் 1594இல் லார்ட் சேம்பர்லின்'ஸ் மென் என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின்னாளில் கிங்'ஸ் மென் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடக நிறுவனத்திற்காகத்தான், பெரும்பாலான நாடகங்களை ஷேக்ஸ்பியர் எழுதினார். இந்த நிறுவனத்தின் சார்பில், ஷேக்ஸ்பியரும் 8இல் ஒரு பங்கு அளித்து, 1599இல் க்ளோப் தியேட்டர் கட்டப்பட்டது. 1576இல் தி தியேட்டர் என்ற பெயரில் அமைக்கப்பட்டதுதான் வண்டனின் முதல் நிரந்தர நாடக அரங்கு. நிலத்துக்கு, உரிமையாளரிடம் 21 வருட குத்தகை ஒப்பந்தம் செய்து இந்த அரங்கு உருவாக்கப்பட்டிருந்தாலும், குத்தகை முடிந்தபோது, அரங்குக்கு அவர் சொந்தம் கொண்டாடினார். 1598இன் கிறிஸ்துமசை அவர் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, நாடக நிறுவனத்தினர் மரத்தாலான அந்த முழுக் கட்டிடத்தையும் பிரித்துக் கொண்டுவந்துவிட்டனர். அந்த மரத்தைக் கொண்டுதான் க்ளோப் தியோட்டர் உருவாக்கப்பட்டது. மூன்று அடுக்குகளில், மூவாயிரம் பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கான இதில், பார்வையாளர் பகுதிக்கு கீற்றுக் கூரை அமைக்கப்பட்டிருந்தது. ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவையும், திறந்தவெளி அரங்கு என்பதால் வாண வேடிக்கைகளும்கூட நாடகங்களில் இடம்பெறும். அவ்வாறு ஒரு நாடகத்தில் குண்டு இல்லாமல் வெறும் வெடிமருந்தைக்கொண்டு பீரங்கி வெடிக்கும் காட்சியை நிகழ்த்தியபோது, கீற்றுக் கூரையில் தீப்பற்றி, அரங்கு முழுமையாக அழிந்தாலும், உயிர்ச்சேதம் இல்லையென்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டில் திரும்பக் கட்டப்பட்டாலும், திருச்சபையைச் சீர்திருத்திய ப்யூரிட்டன்கள் காலத்தில் அனைத்து அரங்குகளுடன் சேர்த்து 1642இல் இதுவும் மூடப்பட்டு, 1644இல் இடிக்கப்பட்டது. லண்டனிலேயே 1906இல் தொடங்கப்பட்ட ஹிக்'ஸ் தியேட்டர், 1909இல் க்ளோப் தியேட்டர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அப்பெயரில் 85 ஆண்டுகளுக்கு இயங்கியது. 1994இல் அது கீல்குட் தியேட்டர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஷேக்ஸ்பியரின் நினைவாக, இயன்றவரை பழைய க்ளோப் தியேட்டரின் வடிவத்திலேயே 'ஷேக்ஸ்பியரின் க்ளோப்' அரங்கு, 1997இல் கட்டப்பட்டது. ஷேக்ஸ்பியர் காலம் போலவே, மரத்தால் கட்டப்பட்டு, ஒளி விளக்குகள், ஒலிபெருக்கிகள் உள்ளிட்டவையின்றி, நாடகங்களை நடத்தும் இதுதான் லண்டனில் உள்ள ஒரே கீற்றுக்கூரைக் கட்டிடம்! இந்த, ஷேக்ஸ்பியரின் அரங்கைக் காண, ஆண்டுக்கு 2 லட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர்.
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று ஜூன் 29 1976 - சேஷெல்ஸ் இங்கிலாந்திடமிருந்து விடுதலையடைந்தது. உண்மையில், ஐரோப்பியக் குடியேற்றங்கள் உருவாகதற்குமுன், தொல்குடியினர் என்று யாருமே வாழந்திராத நாடு, இந்த சேஷெல்ஸ்(இதுதான் சரியான உச்சரிப்பு)! வாஸ்கோ ட-காமா, இந்தியாவுக்கு நான்காவது முறையாகப் பயணித்தபோது, 1503இல் இத்தீவுகளைக் கண்டதே, இத்தீவுகளைப் பற்றிய முதல் பதிவு. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்ப்பெனியின் கப்பலொன்றில் வந்தவர்கள், 1609இல் இங்கு தரையிறங்கியதே முதலில் பதிவு செய்யப்பட்ட மனித வருகை. அதன்பின், ஆஃப்ரிக்க, ஆசிய வணிகத்தில், இடையில் தங்கிச் செல்லுமிடமாகப் பயன்படுத்தப்பட்டதுடன், இத்தீவுகளில் பல, கடற்கொள்ளையர்கள் பதுங்குமிடமாகவும் பயன்பட்டன. ஆலிவர் லவாசியர் என்ற ஃப்ரெஞ்ச்சுக் கடற்கொள்ளையர், உலக வரலாற்றின் மிகப்பெரிய புதையல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும், சுமார் 100 கோடி (இங்கிலாந்து)பவுண்டுகள் (இன்று பல்லாயிரம் கோடி ரூபாய்களாக இருக்கும்!) மதிப்புள்ள, கொள்ளைச் செல்வத்தை, இத்தீவுகளில் ஒன்றில் புதைத்திருப்பதாக நம்பப்படுகிறது! 1756இல் ஃப்ரான்சால் கைப்பற்றப்பட்டு, குடியேற்றமாக்கப்பட்ட சேஷெல்சில், கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்ய, ஏராளமான ஆஃப்ரிக்கர்கள் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டனர். ஃப்ரெஞ்ச்சுப் புரட்சியை முறியடிக்க நடைபெற்ற முதல் கூட்டணிப் போரின்போது, இங்கிலாந்து, சேஷெல்சைக் கைப்பற்றியது. சேஷெல்சை ஆட்சிபுரிந்த ஃப்ரெஞ்ச்சுக்காரர்கள், இங்கிலாந்துப் படைகளுடன் மோதலில் ஈடுபடாமல் சுமுகமாகவே அதிகாரத்தை ஒப்படைத்து, தங்கள் நிலங்களைப் பாதுகாத்துக்கொண்டனர். ஆங்கிலேயர்களும் ஆஃப்ரிக்கர்களையும், மடகாஸ்கரின் மடகாசி மக்களையும் அடிமைகளாக 'இறக்குமதி' செய்தனர். முதலில் ஃப்ரெஞ்ச் ஆட்சியிருந்ததால், ஃப்ரெஞ்ச் மொழியுடன் ஆஃப்ரிக்க மொழிகள் கலந்து சேஷெல்வா கிரியோல் என்ற புதிய மொழி உருவானது. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் கலந்து உருவாகும் முழுமையான (இலக்கணத்துடன்கூடிய) புதிய மொழி ஆங்கிலத்தில் கிரியோல் என்றழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் குடியேற்றங்களைக் கைவிட்ட நடவடிக்கைகளின்போது, சேஷெல்சுக்கும் விடுதலை கிடைத்தது. இன்றும் ஃப்ரெஞ்ச், ஆங்கிலம், சேஷெல்வா கிரியோல் ஆகியவைதான் ஆட்சி மொழிகளாக உள்ளன. 115இல் வெறும் 33 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள். உலகிலேயே கடல் நடுவிலுள்ள தீவுகளில் க்ரானைட் காணப்படுவது இங்கு மட்டும்தான். தாவர இனங்களிலேயே மிகப்பெரிய விதைகொண்டதாகக் குறிப்பிடப்படும், காய் முற்ற இருபதாண்டுகள் ஆகக்கூடிய, சுமார் 30 கிலோவரை எடைகொண்ட கடல் தேங்காய் இங்கு மட்டுமே வளர்கிறது. தேங்காய்த் திருடன் என்றழைக்கப்படும் மிகப்பெரிய நண்டு(கால்களை நீட்டினால் மூன்றடி!) உட்பட பல அபூர்வ உயிரினங்களின் தாயகமாக சேஷெல்ஸ் விளங்குகிறது. உயர் வருவாயப் பொருளாதாரங்களாக உலக வங்கியால் வகைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு ஆஃப்ரிக்க நாடுகளில் சேஷெல்சும் ஒன்று. மற்றொன்று மொரீஷியஸ்!
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று ஜூன்.29 . எழுத்தாளர் அனுராதா ரமணன் பிறந்த தினம் இன்று. பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன. அனுராதா தமிழ் நாட்டிலிலுள்ள தஞ்சாவூரில் பிறந்தவர். நடிகரான அவரது தாத்தா ஆர்.பாலசுப்பிர மணியத்தின் தூண்டுதலால் இவர் எழுத்தாளரானார். இவர் கணவர் பெயர் ரமணன் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு. அனுராதாவுக்குக் கலைகளில் நல்ல ஈடுபாடு இருந்தது. கலைக் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடிக்கும் முன்னரே திருமணம் ஆயிற்று. அவருடைய திருமணம் ஒரு கசப்பான அனுபவமாகவே இருந்தது என்பதை அவரே எழுதியிருக்கிறார். இருபத்துமூன்று வயதிலேயே இரு பெண் குழந்தைகளுடன் பிறந்தகம் வந்தார். விட்ட படிப்பைத் தொடர்ந்தார். தனி மனுஷியாகத் தன் பெண்களை வளர்க்க முற்பட்டார் ஆரம்பத்தில் ஓவியராகவும் வடிவமைப்பவராகவும்தான் அவர் பத்திரிகை உலகில் நுழைந்தார். Indian Housewife, Grahani aur Grahasti மற்றும் மங்கையர் மலருக்கு வடிவமைப்பவராக இருந்தார். ஒருமுறை மங்கை பத்திரிகைக்குத் தன் ஓவியங்களுடன் போனபோது தன் டயரியை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். அதில் அவர் எழுதியிருந்த குறிப்புகளைக் கண்ட ஆசிரியர் அவரைக் கதை எழுதுமாறு கூறவே மிகுந்த தயக்கத்துடன் எழுதிய கதைதான் கனவு மலர்கள் கருகும்போது. அதைத் தன் பெயரில் எழுதத் தயங்கி சாம்பவி என்னும் பெயரில் எழுதினார். அதன் பிறகு தினமணி கதிரில் நான்கு சுவர்களுக்கு நடுவில் எழுதினார். ஓவியரான அவர் 1977இல் எழுத்தாளராக உருவெடுத்தார். முப்பத்திரண்டு ஆண்டுகளில் அவர் எழுதிக் குவித்தார் எனலாம். கிட்டத்தட்ட 800 நாவல்களும் 1230 சிறுகதைகளும் எழுதியிருக்கிறார் என்று அனுமானிக்கப்படுகிறது. ஆனந்த விகடனில் பரிசு பெற்ற இவரது சிறை என்னும் கதை திரைப்படமாக்கப்பட்டது. கூட்டுப் புழுக்கள், ஒரு வீடு இரு வாசல், மலரின் பயணம் போன்ற இவர் கதைகள் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் படமாக்கப்பட்டன. இவருடைய பல கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெற்றி பெற்றிருக்கின்றன. சுபமங்களா, வளையோசை போன்ற பத்திரிகை களுக்கு ஆசிரியராக இருந்த அனுபவமும் இவருக்கு உண்டு. எழுத்துக்கான பல விருதுகளும் இவரைத் தேடிவந்தன. ஒன்பது ஆண்டுகள் தினமலரில் அன்புடன் அந்தரங்கம் என்னும் பத்தியின் மூலம் பலருக்குப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆலோசனை தந்தார். தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களைப் படித்தவர் தான் அனுராதா. ஆனால் அவர் தன் எழுத்துலகத்தை வேறுமாதிரி உருவாக்கிக்கொண்டார். அதற்குக் காரணம் தனி மனுஷியாக, தன் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, முழு நேர எழுத்தாளராக இருந்து இரு பெண்களை வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு அவருக்கு இருந்ததே. 2004இல் காஞ்சிமடத் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதியை முறைதவறி நடந்ததாகக் குற்றம் சாட்டியது அனுராதாவுக்குப் பல எதிரிகளையும் நண்பர்களையும் உருவாக்கியது. . பெண்களில் பலர் இவரைத் தங்களுக்கு உற்றவராகப் பார்த்தார்கள்; பலர் இவரைத் துரோகியாகவும் பார்க்க முற்பட்டனர். 2004இல் இவர் விடுத்த வெளிப்படையான குற்றச்சாட்டு மதவாதிகள் சிலரைப் பாதித்த விதம் இவரது இறப்புக்குப் பிறகுகூடத் தெரிந்தது. எதனாலும் பாதிக்கப்படாமல் அனுராதா தொடர்ந்து கதை எழுதிக்கொண்டும் தங்களுள் ஒருத்தியாக மற்றவர் கருதும்படி நகைச்சுவையுடனும் நயத்துடனும் நட்புடனும் கட்டுரைகள் எழுதிக்கொண்டும் தான் இருந்தார் 2004இல் அளித்த குறிப்பிட்ட பேட்டியில் சாகும்வரை எழுதிக்கொண்டும் வரைந்துகொண்டும் இருக்க வேண்டுமென அனுராதா கூறியிருக்கிறார். அப்படியேதான் இருந்தார். அமெரிக்காவில் வசிக்கும் அவருடைய பெண்கள் சுதாவும் சுபாவும் அவர் வெளியிட்டுள்ள வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர் எப்போதும் கிறுக்கும் சித்திரங்களையும் வெளியிட்டால் அது பெண்கள் வாழ்க்கையை விளக்கும் சரித்திரக் கண்ணியாக அமையும். இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார் மே 16, 2010 இல் மாரடைப்பால் சென்னையில் தனது 62ஆவது வயதில் காலமானார் அனுராதா ரமணன்.
🌎பொது அறிவு - ShareChat
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று.ஜூன்.29 தமிழின் சிறந்த மொழியியல் அறிஞரான வ.ஐ.சுப்ரமணியம் அவர்களின் நினைவு தினம் இன்று. இவர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நல்ல தகுதியுடைய, நீதி, நேர்மையோடு பணிசெய்த எவரையும் நாம் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அதனால் தானோ என்னவோ இன்று நீதி, நேர்மை செத்துப்போய் விட்டது. வ.ஐ.சுப்ரமணியம் தன் பதவிகாலத்தில் எந்த அரசியல்வாதிகளையும் பல்கலைக்கழக வளாகத்தில் மூக்குநுழைக்க அனுமதிக்க வில்லை. மேலும் அவர் பணியிலிருந்த காலத்தில் தன் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை தன் மேஜையின் மீது வைத்திருந்தவர். தன் மரணத்திற்கு பின் தன் அஸ்தியை பல்கலைகழக வளாகத்தில் தூவவேண்டும் என்று உயில் எழுதி வைத்தவர். அப்படியென்றால் தான் பணிசெய்த பல்கலை கழகத்தின் மீது எவ்வளவு பெரிய அன்பும் ஈடுபாடும் இருந்ததை எத்தனைபேர் அறிந்திருப்பார்கள்? கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் குப்பம் என்கிற பகுதியில் "திராவிடியன் யூனிவேர்சிட்டி" என்கிற பெயரில் பல்கலைகழகத்தை உருவாக்கி, பிற்பாடு கேரள அரசிடமே ஒப்படைத்து விட்டார். இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற மனிதரை நம்மில் எத்தனை பேருக்குத்தான் தெரியும்?
🌎பொது அறிவு - ShareChat