꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
ShareChat
click to see wallet page
@kalaiselvan6196
kalaiselvan6196
꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
@kalaiselvan6196
கலைக்களஞ்சியம் ✍️
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று.செப்டம்பர். 30 இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு அறிவியல் அறிஞர் ஜான் பாட்டீஸ்ட் பெரன் (Jean Baptiste Perrin) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 30). சான் பத்தீட்டு பெரென் (Jean Baptiste Perrin, 30 செப்டெம்பர் 1870 – 17 ஏப்ரல் 1942) பிரெஞ்சு இயற்பியலாளர். *பிரான்ஸ் நாட்டின் லீல் நகரில் (1870) பிறந்தார். ராணுவத்தில் பணியாற்றிய தந்தை, போரில் இறந்தார். அதன் பிறகு, குழந்தைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்தார் தாய். உள்ளூரில் ஆரம்பக் கல்வி பயின்ற பெரன், பாரீஸில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். *கட்டாய ராணுவ சேவை திட்டத்தின் கீழ் ராணுவப் பயிற்சி பெற்றார். அப்போதுதான் இவருக்கு இயற்பியலில் ஆர்வம் பிறந்தது. பாரீஸில் உள்ள ஈகோவ் நார்மல் சுபீரியர் உயர்கல்வி மையத்தில் 1894 முதல் 1897 வரை ஆராய்ச்சி உதவியாளராக சேர்ந்தார். எதிர்மின் கதிர்கள், எக்ஸ் கதிர்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். *கேதோடு கதிர்கள் இயல்பிலேயே எதிர் மின்னூட்டம் கொண்டவை என்பதை நிரூபித்தார். வாயுக்களின் மின் கடத்தும் திறன்மீது எக்ஸ்ரே கதிர்களின் தாக்கம் குறித்து ஆராய்ந்து, இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஒளிர்வு, ரேடியத்தின் சிதைவு, ஒலி உமிழ்வு, ஒலி கடத்தல் குறித்தும் ஆராய்ந்தார். எதிர்மின் கதிர்கள் காந்தப்புலத்தில் விலகல் அடைவதைக் கண்டறிந்தார். *பிரவுனியன் இயக்கம், மூலக்கூறு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். துகள்களின் வெப்பநிலை, அளவு, இயக்கம் ஆகியவை குறித்த ஐன்ஸ்டீனின் கருத்துகளை ஆய்வுகள் மூலம் நிரூபித்தார். அணுக்கள், மூலக்கூறுகள் தொடர்பான ‘அவகேட்ரோ’ எண்ணுக்கான திடமான மதிப்பைக் கணக்கிட்டார். *ஐன்ஸ்டீனின் சமன்பாடுகளைப் பயன்படுத்தி, நீர் மூலக்கூறின் அளவைக் கண்டறிந்தார். பொருளின் அணுத்தன்மையை குறித்த அவரது விளக்கத்தையும் உறுதி செய்தார். இதற்காக 1926-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். *அணுக்கள் தொடர்பான ‘லெஸ் ஆடம்ஸ்’ என்ற நூலை எழுதி 1913-ல் வெளியிட்டார். இதில் இவரது ஆய்வு விளக்கங்கள் மட்டுமல்லாமல் கதிரியக்க வேதியியல், கரும்பொருள் கதிரியக்கம், மூலக்கூறுகளின் முழுத்தன்மை ஆகியவற்றையும் விளக்கும் தகவல்களும் இடம்பெற்றன. இந்த நூல் பல ஐரோப்பிய மொழிகளி லும் மொழிபெயர்க்கப்பட்டது. பல பதிப்புகள் வெளியிடப்பட்டு ஏராளமாக விற்பனையானது. *இதுதவிர, ஏராளமான கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ளார். பாரீஸ் பல்கலைக்கழகத்தின் இயல் வேதியியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் அத்துறையின் தலைவரானார். *‘பிளேஸ் ஆஃப் டிஸ்கவரி’ என்ற அறிவியல் அமைப்பை உருவாக் கினார். வானியல் நிபுணர்களுக்கான மிகப்பெரிய கண்காணிப்பு நிலையம் அமைப்பதில் பெரும் பங்காற்றினார். இவரது முனைப்பால் பல்வேறு அறிவியல் அமைப்புகள் உருவாகின. *ஜூல் பரிசு, மேத்யூகி பதக்கம் உட்பட பல பரிசுகள், விருதுகள், பதக்கங்களைப் பெற்றுள்ளார். கல்கத்தா, நியூயார்க், மான்செஸ்டர், ஆக்ஸ்ஃபோர்டு உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. பெல்ஜியம், ஸ்வீடன், ருமேனியா உள்ளிட்ட நாடுகளின் அறிவியல் அமைப்புகளின் உறுப்பினராகவும் செயல்பட்டார். *பிரான்ஸில் ஜெர்மனி 1940-ல் ஊடுருவிபோது, அமெரிக்கா தப்பிச் சென்றார். அங்கும் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஜான் பாட்டீஸ்ட் பெரன் 72ஆவது வயதில் (1942) காலமானார். இவரது நினைவைப் போற்றும் வகையில் பிரான்ஸில் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - ShareChat
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று செப்டம்பர் 30 பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day) ஆண்டுதோறும் விவிலிய மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு நாளான செப்டம்பர் 30ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும். ஜெரோம் மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார். 1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்புத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1991 ஆம் ஆண்டில் இவ்வமைப்பு பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது. 2017 ஆம் ஆண்டில் உறுப்பு நாடுகள் 71/288 தீர்மானத்தை நிறைவேற்றியபோது, ​​செப்டம்பர் 30 ஆம் தேதியை சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாகக் கொண்டாட ஐநா பொதுச் சபை முடிவு செய்தது. தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்துவோம் சர்வதேச மொழிபெயர்ப்பு தினமான இன்று. *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - INTERNATIONAL TRAISLATIOV DAY September 30 INTERNATIONAL TRAISLATIOV DAY September 30 - ShareChat
#🌎பொது அறிவு இந்தியாவின் முதல் பெண் ஆங்கில மருத்துவர். இந்தியா என்று அல்ல. இங்கலாந்தில் கூட. இந்த பெண்ணிற்கு முன் யாரும் மருத்துவ படிப்பு படிக்கவில்லை. அந்த பெண்மணி தான் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள். சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் இவர் மருத்துவ படிப்பை முடித்து. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனார். ஆண்கள் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்ட முதல் ஒரே பெண் மருத்துவர் இவர் தான். கல்லூரியில் இவரை தனியாக ஒரு இடத்தில் அமர வைப்பார்கள். இவரை யாரும் பார்க்க முடியாத படி ஒரு திரை இருக்கும். காரணம். வடிவேல் ஸ்லாங்ல சொல்லனம்னா. பஞ்சையும், நெருப்பையும் பக்கத்தில, பக்கத்தில் வைத்தால் என்ன? ஆகும். அதனால. இவங்களை தனியா ஓரம் கட்டினாங்களாமாம். இந்தியாவில் மருத்துவ படிப்பை முடித்து. மருத்துவ மேல் படிப்புக்கு இவர் இங்கிலாந்தில் உள்ள Royal London School of Medicine கல்லூரியில் விண்ணப்பித்தார். சிகப்பு கம்பளம் விரித்து. ராயல் லண்டன் முத்து லட்சுமி ரெட்டி அவர்களை வரவேற்றது. அங்கும் அதே கதை தான். ஆணாதிக்கத்தில் இந்தியா என்ன, இங்கிலாந்தென்ன எல்லாம் ஒன்னு தான். அந்த காலத்தில். தன்னுடைய மனதை அடக்க முடியாத சபல புத்தியுள்ள ஆன்கள். பெண்களை, பேய், பிசாசு என்று திட்டி ஒரு பாட்டு எழுதி விடுவார்கள். இன்றும் பெண்களை குறித்து. சினிமாவில் ஆரம்பித்து. சமூக வலை தளங்கள் வரை எவ்வளவு விமர்சனங்கள். கேலிகள், கிண்டல்கள், நக்கல்கள், நையாண்டிகள். பெண்ணிற்கு காதல் தோல்வி வந்தால்? அவள் தன் சோகத்தை மறப்பதற்கு கானா மெட்டில் பாடல் பாடியதில்லை ..... வேணாம் மச்சான் வேணாம் இந்த ஆம்பளைங்க காதல் என்று. ஓட்டு மொத்த ஆண்கள் வர்கமும் மோசம் என்று முகநூலில் பதிவுகள் போடுவதில்லை. பலதரப்பட்ட மக்கள் சந்திக்கும் இணயத்தில் நாகரீகத்தை மீறி என்றும் அநாகரீகமாக நடந்து கொண்டதில்லை. அவள் கவனிக்கத்தவறியதில்லை கேட்கக் கூசும் விமர்சனங்களை . சில பெண்களும் இன்று ஆண்களை போன்றே தவறுகள் செய்வது காலத்தின் கோலம். ஆனால்? இதற்க்கான விதையை முதலில் போட்டது நமது ஆண் வர்க்கம் தான். இங்கலாந்தில். திரு முத்து லட்சுமி ரெட்டி அவர்கள் படித்து கொண்டு இருந்த பொழுது. அவர் உடன் படித்த அனைவருமே ஆண்கள். அன்று. அந்த காலேஜை கூட்டி, பெருக்கும் வேலையையும் ஆண்களே செய்தார்கள். முத்து லட்சுமி ரெட்டியோடு படிக்கும் சக மாணவர்களின் பெற்றோர்கள். இந்த ஒரு பெண்ணால். இந்த கல்லூரியில் படிக்கும் அணைத்து ஆண்களின் மனதும் சலனப்படுகிறது. அதனால் இவளை இந்த கல்லூரியை விட்டு துரத்த வேண்டும் என்று. டீனிடம் முறையிட்டார்கள். அதற்கு அந்த டீன். பெற்றோர்களிடம் சொன்ன பதில் என்ன? தெரியுமா. அப்படியா. உங்கள் மகன்கள் யாரும் இங்கே வர வேண்டாம். வீட்டிலேயே இருக்கட்டும். இன்று. இந்த ஒரு பெண்ணை பார்த்தே உங்கள் மகன்களின் மனம் சலனபடுகிறது என்றால். நாளை உங்கள் மகன்கள் மருத்துவர் ஆனால். பல பெண்களின் நாடி பிடித்து மருத்துவம் பார்க்க வேண்டி இருக்கும். இத்தகைய சலன புத்தி உடைய ஆண்களுக்கு மருத்துவர் ஆகும் எந்த, வித தகுதியும் இல்லை. இவர் வெறும் மருத்துவர் மட்டும் அல்ல. சென்னையின் முதல் பெண் துணை மேயர். சட்ட சபைக்கு போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டவர். அடையார் கேன்சர் இன்ஸ்ட்டிடியூட் இவர் நிறுவியது தான். அடையாரில் உள்ள அவ்வை இல்லம். ஆயிரகணக்கான ஆதரவற்ற பெண்களுக்கு வாழ்வு அளித்து உள்ளது. அளித்து கொண்டு இருக்கிறது. தேவதாசி முறையை ஒழித்தவர் முத்து லட்சுமி அம்மையார் தான். தமிழ் மொழி, தமிழிசையின் வளர்ச்சியிலும் இவர் மிகப்பெரிய தொண்டு ஆற்றியுள்ளார். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - 1nn 1nn - ShareChat
#🌎பொது அறிவு *#ஆர்_எஸ்_மனோகர்* நாமக்கல்லில் (1925) பிறந்தவர். இயற்பெயர்: ஆர்.எஸ்.லஷ்மி நரசிம்ஹன். தந்தை சுப்பிரமணியன் அஞ்சல் துறையில் பணியாற்றியவர். அவரது பணிமாற்றம் காரணமாக குடும்பம் கர்நாடகாவின் பெல் லாரிக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தி வந்த இயக்குநரும், நடிகருமான ராகவாச்சாரியின் நடிப்பும், வசன உச்சரிப்பும்தான் இவருக்கு உத்வேக சக்தியாக இருந்தது. சென்னை பச்சையப்பா கல்லூரியில் பி.ஏ. சமஸ்கிருதம் படித்தார். அப்போது, 'மிருச்சகடிகா' என்ற சமஸ்கிருத நாடகத்தில் கதாநாயகனாக நடித்து, அனைவரையும் கவர்ந்தார். நாடகக் களத்தில் அடியெடுத்து வைத்தவர், சுகுண விலாஸ் சபாவின் 'தோட்டக்காரன்' நாடகத்தில் நடித்தார். 'நாடகத் தந்தை' பம்மல் சம்பந்த முதலியார் நாடகத்தைப் பார்த்து இவரைப் பாராட்டினார். பட்டம் பெற்று, அஞ்சல் துறையில் சேர்ந்தார். அக்காலத்தில் ஜே.ஆர்.ரங்கராஜு என்பவர் எழுதிய துப்பறியும் கதை "ராஜாம்பாள்". இதில் நடிக்கப் புது முகங்களைத் தேடினார்கள். அப்போது லஷ்மி நரசிம்ஹனைக் கேள்விப்பட்டு அவரை அழைத்து நடிக்கச் செய்தனர். ஏற்கனவே பள்ளிக் காலத்தில் "மனோகரா" என்ற நாடகத்தில் நடித்துப் புகழ் பெற்றிருந்ததால் மனோகர் எனப் பெயர் மாற்றம் செய்து நடிக்க ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில் வீணை எஸ்.பாலச்சந்தர் அவர்கள் வில்லன். மனோகர் கதாநாயகன். பி.கே.சரஸ்வதி கதாநாயகி. 1956 ஆம் ஆண்டு வெளிவந்த "நல்ல வீடு" திரைப்படத்தில் மனோகர் கதாநாயகன். நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு வில்லன் மற்றும் கதாநாயகன் வேடம். பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். "கானல் நீர்" என்ற படத்தில் பட்டதாரி இளைஞராக நடிக்க நிஜப் பட்டதாரியான இவரே நடித்தார். 1952 ஆம் ஆண்டு வெளியான "தாயுள்ளம்" திரைப்படத்தில் மனோகர் கதாநாயகன். ஜெமினி கணேசன் வில்லன். இப்படி இன்னும் பல படங்களில் கதாநாயகன் வேடங்களில் நடித்துப் புகழ் பெற இருந்த மனோகருக்கு 1959 ஆம் ஆண்டு "வண்ணக்கிளி" திரைப்படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்க சந்தர்ப்பம் வந்தது. வந்த வாய்ப்பை நழுவ விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் மனோகர் என்று தான் சொல்ல வேண்டும். ஆம்! அந்தப்படத்தில் வில்லனாக அசத்தியிருந்தார். ஏற்கனவே அவர் ஒரு நாடக நடிகர். எம்.ஆர்.ராதா அடிக்கடி இவ்வாறு சொல்லுவது வழக்கம். நாடகம் எனது உயிர் மூச்சு. சினிமா அதுக்குப் பிறகு தான் என்று. அது ஆர்.எஸ்.மனோகர் வாழ்க்கையிலும் நன்றாகப் பொருந்தியது. அதனால் வண்ணக்கிளி திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்ததில் ஒன்றும் தவறில்லை. அதன்பிறகு "கொஞ்சும் சலங்கை", "அம்மா எங்கே", "எதிரிகள் ஜாக்கிரதை", "கொஞ்சும் குமரி", "அனாதை ஆனந்தன்", "பறக்கும் பாவை", "சங்கிலி", "யாருக்குச் சொந்தம்", "நாலும் தெரிந்தவன்", "நீ", "நீதி", "நான்", "தாயே உனக்காக", "வல்லவனுக்கு வல்லவன்", "இரு வல்லவர்கள்", "பட்டணத்தில் பூதம்", "உலகம் சுற்றும் வாலிபன்" "அடிமைப் பெண்", "இதயக்கனி" என 200 க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார் மனோகர். மனோகர் நேரடியாக தமிழ் திரையுலகில் நடிக்க வரவில்லை. சர்க்கார் உத்தியோகம் என்று அக்காலத்தில் அழைக்கப்படும் அஞ்சல் துறையில் பணியாற்றிய காலத்தில் பல நாடகங்களை நடத்தியவர். தேசிய சிந்தனைகளும் கலை ஆர்வமும் கொண்டிருந்த மனோகர் மேடை நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். தனது கனவுகளைப் பின் தொடரத் தெரிந்த அக்கலைஞன் "இலங்கேஸ்வரன்" என்னும் நாடகத்தில் நடித்து அழியாப் புகழ் பெற்றான். நாடகத்தின் மீதான காதலால் 'நேஷனல் தியேட்டர்ஸ்' நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார். 'இன்ப நாள்', 'உலகம் சிரிக்கிறது' ஆகிய சமூக நாடகங்களை அரங்கேற்றினார். பின்னர் பிரம்மாண்ட இதிகாச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றினார். ராவணன், சூரபத்மன் உள்ளிட்ட எதிர்மறைக் கதாபாத்திரங்களின் மறுபக்கமான ஆக்கபூர்வ அம்சங்களை அற்புதமாகப் படம் பிடித்துக்காட்டும் வகையில் நாடகங்களைப் படைத்தார். சிறப்பான மேடை அமைப்பும், தந்திரக் காட்சிகளும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. பிரம்மாண்டமாக தயாராகியிருந்த 'இலங்கேஸ்வரன்' நாடகம், மக்களிடம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி நஷ்டமாகிவிடுமோ என்று பயந்த மனோகர், காஞ்சி பரமாச்சாரியாரை சந்தித்தார். அவர் ''கவலைப்படாதே'' என்று கூறி ஆசீர்வதித்து அனுப்பினார். விரைவிலேயே, இலங்கையில் இந்த நாடகத்தை தொடர்ந்து 21 நாட்கள் நடத்தும் வாய்ப்பு தேடி வந்தது. நாடகத்தைப் பார்த்து வியந்த மக்கள், இவருக்கு 'இலங்கேஸ்வரன்' என்ற பட்டத்தைக் கொடுத்து கவுரவித்தனர். இவரது நாடகங்களிலேயே அதிக முறை (1,800-க்கு தடவைக்கு மேல்) மேடையேறியதும் இந்த நாடகம்தான். 'சாணக்கிய சபதம்', 'சூரபத்மன்', 'சிசுபாலன்', 'இந்திரஜித்', 'நரகாசுரன்', 'சுக்ராச்சாரியார்' உள்ளிட்ட நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை. சொன்ன நேரத்துக்கு நாடகம் தொடங்கிவிட வேண்டும்; அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். ஒவ்வொரு நாடகத்துக்கும் 30 நாட்கள் ஒத்திகை பார்ப்பாராம். "இசைப் பேரறிஞர்", நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 81-வது வயதில் (2006) மறைந்தார். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - ShareChat
#🌎பொது அறிவு #🤔 Unknown Facts #🤔தெரிந்து கொள்வோம் *பூமியையே 9 நாட்கள் உலுக்கிய மெகா சுனாமி - கடந்த ஆண்டு 656 அடி உயர மெகா அலைகள் எங்கே எழுந்தன?* கிரீன்லாந்தில் டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் (Fjord) ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு, ஒன்பது நாட்களுக்கு பூமியையே உலுக்கும் அளவிற்கு ஒரு பேரலை உருவாக வழிவகுத்தது. இந்த நிகழ்வினால் ஏற்பட்ட நில அதிர்வு சிக்னல்கள், உலகம் முழுவதும் உள்ள சென்சார்களில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பதிவாயின. இந்த சிக்னல்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த நிலச்சரிவின் போது ஒரு பனிப்பாறை உருகி அதன்மேலிருந்த மலை சரிந்து விழுந்தால், 200 மீட்டர் அளவிற்கு பேரலை எழுந்தது. குறுகலாக உள்ள ஃப்யோர்டு பகுதியில் இந்த அலை சிக்கிக்கொண்டு, ஒன்பது நாட்களுக்கு முன்னும் பின்னுமாக நகர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தியது. காலநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்தில் உள்ள மலைகளை தாங்கிப் பிடிக்கும் பனிப்பாறைகள் உருகுகின்றன. இதனால் இது போன்ற நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். *மெகா சுனாமியின் தோற்றம்* சர்வதேச விஞ்ஞானிகள் குழு மற்றும் டேனிஷ் கடற்படை இணைந்து இந்த நிகழ்வைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டன. அந்த ஆராய்ச்சி முடிவுகள் "சயின்ஸ்" இதழில் வெளியிடப்பட்டன. "கடந்த ஆண்டு இந்த சிக்னல்களை எனது சக பணியாளர்கள் கண்டறிந்த போது, ​​​​அது பூகம்பம் போல் தெரியவில்லை. அந்த நேரத்தில், நாங்கள் அதை 'அடையாளம் தெரியாத நில அதிர்வு போல ஒன்று' என்று குறிப்பிட்டோம்", என்று இந்த விஞ்ஞானிகள் குழுவை சேர்ந்த ஒருவரும் லண்டன் பல்கலைக் கழக கல்லூரியை சேர்ந்தவருமான முனைவர் ஸ்டீபன் ஹிக்ஸ் நினைவு கூர்ந்தார். "ஒன்பது நாட்களுக்கு, ஒவ்வொரு 90 விநாடிகளுக்கு ஒருமுறை இது நிகழ்ந்தது". இந்த குழப்பமான சிக்னல் குறித்து விஞ்ஞானிகள் குழு இணைய தளத்தில் விவாதங்களை தொடங்கியது. "அதே நேரத்தில், கிரீன்லாந்தில் களப்பணி செய்து கொண்டிருக்கும் டென்மார்க்கை சேர்ந்த எனது சக பணியாளர்கள், ஃப்யோர்டு பகுதியில் தொலைதூரத்தில் சுனாமி ஏற்பட்டு இருப்பது குறித்த அறிக்கைகளை பெற்றனர். அதற்கு பிறகு தான் அவர்களுடன் நாங்களும் அப்பணியில் இணைந்தோம்", என்று முனைவர் ஹிக்ஸ் விளக்கினார். இந்த குழு நில அதிர்வு குறித்த தரவுகளை பயன்படுத்தி இந்த சிக்னல்கள் கிழக்கு கிரீன்லாந்தில் உள்ள டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் இருந்து தான் வருகின்றன என்று கண்டறிந்தனர். இந்த சிக்னல்கள் தோன்றுவதற்கு முன்பு டேனிஷ் கடற்படையால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் இந்த பகுதியின் செயற்கைக்கோள் படங்கள் போன்றவற்றை இந்த ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். ஃப்யோர்டு பகுதியில் உள்ள ஒரு ஓடைக்கு மேல் தூசியாலான மேகம் சூழ்ந்திருப்பதை செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று காட்டியது. இந்த நிகழ்விற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்ததில், ஒரு மலை சரிந்து பனிப்பாறையின் ஒரு பகுதி தண்ணீருக்குள் அடித்துச் சென்றது தெரியவந்தது. 25 எம்பயர் ஸ்டேட் கட்டடங்களுக்கு சமமான அளவிலான 25 மில்லியன் கன மீட்டர் பாறையானது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதனால் தான் 200 மீட்டர் உயரத்தில் "மெகா சுனாமி" ஏற்பட்டது. இந்த நிகழ்விற்கு பின் எடுக்கப்பட்ட இப்பகுதியின் புகைப்படங்களில், எவ்வளவு உயரத்திற்கு அலை மேல் நோக்கி எழுந்துள்ளது என்பது குறித்து பனிப்பாறையில் ஏற்பட்ட குறியீடு மூலம் அறியலாம். *"அலையால் அதன் ஆற்றலைச் சிதறடிக்க முடியவில்லை."* பொதுவாக நிலத்தடியில் ஏற்படும் நிலநடுக்கங்களால் பரந்த கடலில், அலை மேல் எழுந்து சுனாமி நிகழ்கின்றது. ஆனால் இப்பகுதி ஒரு குறுகிய நிலப்பரப்பு என்பதால் அந்த அலை சிக்கிக்கொண்டது. "இந்த நிலச்சரிவு பரந்த கடலில் இருந்து 200 கிலோமீட்டர் உள்ளே நடந்தது. மேலும் ஃப்யோர்டு நில அமைப்பு மிகவும் சிக்கலானது. எனவே அலையால் அதன் ஆற்றலைச் சிதறடிக்க முடியவில்லை", என்று முனைவர் ஹிக்ஸ் விளக்கினார். அலைகள் சிதறடிக்கப்படுவதற்கு பதிலாக, ஒன்பது நாட்களுக்கு முன்னும் பின்னுமாக நகர்ந்தது என்பதை விளக்க இந்த குழு ஒரு மாதிரியை உருவாக்கியது. "நீண்ட காலமாக, இவ்வளவு பெரிய அளவில் நீர் எழுவதை நாங்கள் பார்த்ததில்லை" என்று முனைவர் ஹிக்ஸ் கூறினார். கிரீன்லாந்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், மலையின் அடிவாரத்தில் உள்ள பனிப்பாறை உருகியதால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அந்த பனிப்பாறை தான் இந்த மலையைத் தாங்கிக் கொண்டிருந்தது. அது உருகி மெல்லியதாக மாறிய போது மலையை தாங்குவதை நிறுத்தியது. காலநிலை மாற்றம் இப்போது இந்த பகுதிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகின்றது", என்று முனைவர் ஹிக்ஸ் கூறினார். இந்த நிகழ்வு ஒரு தொலைதூர பகுதியில் நடந்தது. ஃப்யோர்டு பகுதியைக் காண சில ஆர்க்டிக் பயணக் கப்பல்கள் வருவதுண்டு. அதிர்ஷ்டவசமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்ட போது இந்த பகுதியில் யாரும் இல்லை. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் ஆர்க்டிக் பகுதியில் அதிகரித்து வருவதாக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்திற்கான தேசிய புவியியல் ஆய்வுகளின் (GEUS) முன்னணி ஆராய்ச்சியாளரான முனைவர் கிறிஸ்டியன் ஸ்வென்னெவிக் கூறினார். "ராட்சத, சுனாமியை உண்டாக்கும் நிலச்சரிவுகள், குறிப்பாக கிரீன்லாந்தில் அதிகரிப்பதை நாம் பார்க்க முடிகின்றது", என்று அவர் பிபிசி செய்திகளிடம் கூறினார். "இது போன்ற பாதிப்புகள் டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் மட்டும் நிகழவில்லை. இந்த நிகழ்வு இது போல முன் நடந்திடாத அளவில் ஏற்பட்டு இருப்பதால் இது குறித்து மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது", என்றார். உலகெங்கிலும் புவியின் மேலோட்டை, காலநிலை மாற்றம் எவ்வாறு பாதிக்கின்றது என்பதை உணர்த்தும் முதல் நிகழ்வாக இந்த டிக்சன் ஃப்யோர்டு பகுதியின் நிலச் சரிவு இருக்கும் என்று முனைவர் ஹிக்ஸ் குறிப்பிட்டார். நன்றி... *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - JEFF KERBY கிரீன்லாந்தில் உள்ள ஃப்யோர்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பூமியையே உலுக்கும் அளவிற்கு  ஓர் அலையை gITcoorIugl JEFF KERBY கிரீன்லாந்தில் உள்ள ஃப்யோர்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பூமியையே உலுக்கும் அளவிற்கு  ஓர் அலையை gITcoorIugl - ShareChat
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று.செப்டம்பர். 29 பாலிவுட்டின் சிறந்த நகைச்சுவை நடிகர், இயக்குநரான மெஹமூத் அலி (Mehmood Ali) பிறந்த தினம் இன்று. l பம்பாயில் (1932) பிறந்தவர். தந்தை புகழ்பெற்ற நாடக, திரைப்பட குணச்சித்திர நடிகர். சிறு வயதிலேயே தந்தையுடன் பல ஸ்டுடியோக்களுக்கு சென்றார். ‘கிஸ்மத்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக வேண்டாவெறுப்பாக நடித்தார். l டாக்ஸி ஓட்டுவது, முட்டை விற்பனை என பல வேலைகள் செய்தார். இயக்குநர் பி.எல்.சந்தோஷியிடம் கார் ஓட்டுநராக இருந்தார். பின்னாளில் அவரது மகன் ராஜ்குமார் சந்தோஷி, இவருக்கு ‘அந்தாஸ் அப்னா அப்னா’ திரைப்படத்தில் வாய்ப்பு அளித்தார். l நடிகராக சாதிக்க வேண்டும் என்று திருமணத்துக்குப் பிறகு முடிவு செய்து களம் இறங்கினார். முதலில் ‘சிஐடி’ என்ற படத்தில் நடித்தார். பிறகு ‘பியாசா’ உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். l சரியான வேடம் கிடைக்காததால், நடிகர் கிஷோர்குமாரிடம் வாய்ப்பு கேட்டார். அவரோ, ‘‘என் போட்டியாளருக்கு நானே எப்படி வாய்ப்பு கொடுப்பது?’’ என்றாராம், அதற்கு இவர், ‘‘நான் ஒருநாள் இயக்குநராகி, உங்களை என் படத்தில் நடிக்க வைக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். சொன்னபடியே, பின்னர் தான் தயாரித்த ‘படோசன்’ திரைப்படத்தில் கிஷோர்குமாரை நடிக்க வைத்தார். அது 1970-களின் மாபெரும் வெற்றிப் படம். l ‘பர்வரிஷ்’ திரைப்படத்தில் (1958) முன்னணி வேடத்தில் நடித்தார். குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகராக முத்திரை பதித்தார். கும்னாம், பியார் கியே ஜா, ஹை பியார் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். l ‘சசுரால்’ (1961) என்ற திரைப்படத்தில் நடிகை ஷோபா கோட்டேயுடன் ஜோடி சேர்ந்தார். இது சிறந்த காமெடி ஜோடியாக புகழ்பெற்றது. ‘லவ் இன் டோக்கியோ’, ‘ஜித்தி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர்கள் இணைந்து நடித்தனர். ஐ.எஸ்.ஜோஹர் என்ற நகைச்சுவை நடிகருடன் இணைந்தும் பல படங்களில் நடித்தார். இவர்களது காமெடியும் பிரபலமடைந்தது. l தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ‘பூத் பங்களா’ என்ற சஸ்பென்ஸ் காமெடி - த்ரில்லர் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என்ற அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தவர். தன் படங்களில் சில பாடல்களுக்கு இவரே இசையமைத்தார். சில பாடல்களைப் பாடியும் உள்ளார். l அமிதாப் பச்சன், இவரது சகோதரனின் நெருங்கிய நண்பர். இவரது வீட்டில் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது அவர் வளரும் நடிகர். தான் தயாரித்த ‘பாம்பே டு கோவா’ நகைச்சுவைத் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகன் வேடம் கொடுத்தார். l ஃபிலிம்ஃபேர் விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். தனக்கு முதன்முதலாக ஒரு நல்ல வேடம் அளித்த தயாரிப்பாளர், இயக்குநர் குரு தத் புகைப்படத்தை கடைசிவரை தன் படுக்கை அறையில் வைத்திருந்தார். l இந்தி திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தவர். 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். ‘பாய்ஜான்’ என்று திரையுலகினரால் அன்புடன் அழைக்கப்பட்டவர். ‘கிங் ஆஃப் காமெடி’ என்று போற்றப்படும் மெஹமூத் அலி 72ஆவது வயதில் (2004) காலமானார். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - ShareChat
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று. செப்டம்பர் 29 1967 - எஸ்டிஆர்(நாணயக் குறியீடு எக்ஸ்டிஆர்) என்றழைக்கப்படும், அந்நியச் செலாவணி கையிருப்பு நிர்ணயத் தளர்வு முறையை உருவாக்க, பன்னாட்டு நாணய நிதியத்தின்(ஐஎம்எஃப்) அவை முடிவெடுத்த நாள் பொதுவாக ஒரு நாட்டின் காகித நாணயத்திற்கு, அந்த நாட்டிற்குள்தான் மதிப்பிருக்கும். பண்டைய கால தங்க, வெள்ளி நாணயங்களில், அந்த உலோகத்திற்கே மதிப்பு இருக்கும். ஆனால், இந்த காகிதப் பணம், அதற்கு மாற்றாக அவ்வளவு தொகை வழங்கப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுவதால் ஃபியட்(உறுதிமொழி) கரன்சி என்றழைக்கப்படுகிறது. அப்படியான நிலையில், உதாரணமாக, இந்திய ரூபாயைக் கொண்டு மற்றொரு நாட்டில் எதையும் வாங்க முடியாது என்பதால், அந்நிய வணிகத்தில் தங்கம் போன்ற உலோகங்களே விலையாகப் பெறப்படும். தங்கத்தின் விலையோடு இணைக்கப்பட்ட பன்னாட்டு பரிவர்த்தனை முறை 1880ல் தோன்றியபோது, ஜெர்மெனி, ஸ்வீடன்-நோர்வே, ஃபின்லாந்து, டென்மார்க், ஆஸ்திரிய-ஹங்கேரி, கனடியக் கூட்டமைப்பு, பெல்ஜியம் ஆகியவையே மிகப்பெரிய அளவுக்குத் தங்கத்தைக் கையிருப்பாகக் கொண்டிருந்தன. இரண்டாம் உலகப்போரின் ஆயுத வியாபாரத்தில் பெரும்பகுதித் தங்கம் அமெரிக்காவிடம் சென்றுவிட, 35 டாலருக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் மாற்றித் தரப்படும் உறுதிமாழியுடன், டாலரையே பயன்படுத்தும் ப்ரட்டன் உட்ஸ் திட்டத்தை அமெரிக்கா திணித்தது. அதனால், ஒவ்வொரு நாடும் அச்சடிக்கும சொந்த நாணயத்திற்கு இணையான மதிப்பிற்கு, தங்கத்தைக் கையிருப்பு வைத்திருப்பதற்குப் பதிலாக டாலரை வைத்துக்கொண்டன. தங்கத்தின் மதிப்பைவிட ஏராளமான டாலர்களை அச்சடித்தபின், மாற்றித்தர இயலாது என்று 1973இல் அமெரிக்கா அறிவித்தது. டாலர் நெருக்கடியில் இருந்ததால் இதனை எதிர்பார்த்த ஐஎம்எஃப், 1967இலேயே முடிவெடுத்து, 1967இல் டாலருக்கு மாற்றாக இந்த ஸ்பெஷல் ட்ராயிங் ரைட்ஸ் என்பதை உருவாக்கியது. எளிமையாகச் சொன்னால், வங்கிகள் நமக்கு அளிக்கும் ஓவர்-ட்ராஃப்ட் வசதியைப் போன்றது இது. அதனால் பணமாக இன்றி, உத்தரவாதமாக வழங்கப்படும் இது, உலக வணிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் 16 நாடுகளின் நாணயங்களின் மதிப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அந்நியச் செலாவணி கையிருப்பைத்தாண்டி, இந்த வரம்புவரை வணிகத்தில் ஈடுபடுவதற்கான உத்தரவாதமான இது, ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாணயங்கள் யூரோ என்று ஒருங்கிணைந்தபின் நான்கு நாடுகளின் நாணயங்களை(டாலர், யூரோ, பவுண்ட், ஜப்பானிய யென்) அடிப்படையாகக் கொண்டிருந்த இது, சீன ரென்மின்பியின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, 2016இல் அதனையும் இணைத்துக்கொண்டு, ஐந்து நாணயங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. (அப்படியே...: உலகிலேயே மிக அதிக வணிகப் பற்றாக்குறை கொண்ட நாடாகவும், மிகக்குறைந்த அந்நியச் செலாவணி கையிருப்பு கொண்டுள்ள நாடுகளில் குறிப்பிடத்தக்கதாகவும் அமெரிக்கா இருக்கிறது. மிக அதிக வணிக உபரி கொண்ட நாடுகளில் முதலிடம் சீனாவுக்குத்தான்!) *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - The End of the Bretton Woods System Special President Drawing Rights Nixons Speech (1971) (1967) மrren மaois Person Erlumitin Ino puhrhing = Prentlo Hll '೦ Sanler The End of the Bretton Woods System Special President Drawing Rights Nixons Speech (1971) (1967) மrren மaois Person Erlumitin Ino puhrhing = Prentlo Hll '೦ Sanler - ShareChat
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று செப்டம்பர் 29 மாதங்கினி ஹஸ்ரா நினைவு தினம் (கி.பி.1870-1942) : இந்திய சரித்திரத்தில் எத்தனையோ பெண்களும் உயிர்தியாகங்கள் செய்துள்ளனர். தனது முதுமை பருவத்திலும் நாட்டு விடுதலைக்காக போராடிய இவர் ஆங்கிலேயரின் துப்பாக்கி சூட்டின் போது கொல்லப்பட்டார். இவர் காந்தி புரி என்றும் வங்காளத்தின் பெண் காந்தி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இவர் இன்றைய வங்காளத்திலுள்ள தும்லுக் அருகிலுள்ள ஹோக்லா என்னும் கிராமத்தில் கி.பி.1870 அக்டோபர் 19ம் தேதி பிறந்தார். ஏழை விவசாயிக்கு மகளாக பிறந்ததால் கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்லவில்லை. 12 வயதிலையே இவருக்கு திருமணம் முடிந்து 18 வயதிற்குள்ளேயே இவரது கணவர் மறைந்ததால் இளம் வயதிலையே விதவையானார். இவருக்கு மகன் மற்றும் மகள் என எந்த வாரிசுகளும் இல்லை. இதனால் இந்திய சுதந்திர போராட்ட களங்களில் தீவிரமாக பணிபுரிந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தின் போது கி.பி.1930ல் பங்கு கொண்டார். அது மட்டுமல்ல உப்பு சத்தியாகிரக போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றார். பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் "செளகிதார் வரி ஒழிப்பு" போராட்டத்திலும் கலந்து கொண்டார். இதில் ஆளுநரை எதிர்த்து பேரணியாக சென்றதற்காக பஹ்ரம்பூரில் 6 மாதம் சிறை தண்டனை பெற்றார். திரும்பவும் 6 மாதம் சிறை தண்டனை இவருக்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். காந்தியடிகளின் வாக்குப்படி கதர் நெய்தார். கி.பி.1933ல் சோரம்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு போலீஸாரின் தடியடியால் பயங்கரமாக தாக்கப்பட்டார். இதன் பிறகும் சமூக பணிகளிலும் ஈடுபட்டார். பெரியம்மை நோய் தாக்கிய பகுதிகளில் மீட்பு குழுக்களிலும் இணைந்து பணியாற்றினார். கி.பி.1942 செப்டம்பர் 29ல் வெள்ளையனே வெளியேறு திட்டத்தின் ஒரு பகுதியாக மேதினிபூர் மாவட்டத்தின் நிர்வாகத்தை கைப்பற்ற திட்டமிட்டு பேரணியாக தும்லுக் காவல் நிலையத்தை கைப்பற்ற 72 வயதான இவரின் தலைமையில் பேரணியாக சென்றனர். 144 தடையுத்தரவை மீறியும் சென்ற இவர்களை கலைந்து போக உத்தரவிட்டும் தேசியக்கொடியை ஏந்தி முன்னேறினார். இவரை நோக்கி சுட்டனர். காயம்பட்டாலும் கூட்டத்தை சுட வேண்டாம் என்று கேட்டு முன்னேறிய இவரை மீண்டும் 3 முறை சுட்டதில் நெற்றி தலை என்று காயம்பட்டு "வந்தே மாதரம். தாய்நாட்டுக்கு வாழ்த்துக்கள்" என்று கூறி உயிர் விட்டார். தொடர்ந்த போராட்டங்களால் ஆங்கில அரசுக்கு இணையாக தம்லுக் அரசாங்கம் நடந்தது. இவரின் உயிர்த்தியாகம் தந்த வீராஷேசம் எல்லார் மனதிலும் நிறைந்து இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் கொல்கத்தாவில் பல தெருக்களுக்கு பள்ளிக்கூடங்களுக்கு இவரது பெயர் வைக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் பெண்மணிக்காக முதன்முதலில் இவர் மறைந்த தும்லுக் நகரில் சிலை வைக்கப்பட்டது. 2002ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 60வது ஆண்டு விழாவின் போது இவரது நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது. தும்லுக் நகரில் மாதங்கினி ஹஸ்ரா அரசுக்கல்லூரி பெண்களுக்காக நிறுவப்பட்டது. தள்ளாடும் முதுமை பருவத்திலும் தனக்கென்று என்று இருக்காமல் நாட்டின் விடுதலைக்காக போராடி தனது இன்னுயிரை தியாகம் செய்த வீரப்பெண்மணியின் தியாகத்தை போற்றுவோம். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - விடுதலைப் போராட்ட வீராங்கனை மாதங்கினி ஹஸ்ரா நினைவு நாள் செப்டம்பர் 29 விடுதலைப் போராட்ட வீராங்கனை மாதங்கினி ஹஸ்ரா நினைவு நாள் செப்டம்பர் 29 - ShareChat
#🌎பொது அறிவு சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் சி. சு. செல்லப்பா பிறந்ததினம் தினம்... சி.சு.செல்லப்பா (C. S. Chellappa, செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா. பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாகக் கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர். தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்த சி.சு.செல்லப்பா, தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார். மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். "சுதந்திரச் சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது. "சரசாவின் பொம்மை" என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது. 1937ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார். சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கிடையே 1970 ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார். ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த "எழுத்து" காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119 இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது. இவரது சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. சி.சு.செல்லப்பா, 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மறைந்தார். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - ShareChat