#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 5 -1766 -
உலகின் மிகப்பெரிய ஏலநிறுவனம் என்று குறிப்பிடப்படும் க்றிஸ்ட்டீ'ஸ் நிறுவனத்தின் முதல் ஏலம், அதன் உரிமையாளரான ஜேம்ஸ் க்றிஸ்ட்டியால் லண்டனில் நடத்தப்பட்ட நாள் டிசம்பர் 5.
'நான் அதிகமாக்குகிறேன்' என்ற பொருளுள்ள, லத்தீன் சொல்லான ஆக்டம் என்பதிலிருந்துதான், ஏலம் என்பதற்கான ஆங்கிலச் சொல்லான ஆக்ஷன் உருவானது. மிகப் பண்டைய காலத்திலேயே ஏலம் நடைமுறையிலிருந்திருக்கிறது. கி.மு.500களில் ஏலம் நடத்தப்பட்டதற்கான வரலாற்றுப் பதிவுகள் கிடைத்துள்ளன. பாபிலோனில், திருமணம் செய்துகொள்வதற்குப் பெண்களை ஏலம் விடுதல் நடைமுறையிலிருந்ததாக, ஹிரோடோட்டஸ் குறிப்பிட்டுள்ளார். மகளை ஏலமல்லாத முறையில் விற்பது(திருமணம் செய்து தருவதுதான்!), அங்கு சட்டவிரோதமாக இருந்துள்ளது. ரோமப் பேரரசில் போர் வெற்றிக்குப்பின் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம்விட்டு, போர்ச் செலவை ஈடு செய்திருக்கிறார்கள். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் சொத்துகளை ஏலம்விட்டு, கடனுக்கு ஈடு செய்வதும் அங்கு நடைமுறையிலிருந்திருக்கிறது. 17,18ஆம் ஆண்டுக்கால இங்கிலாந்தில் 'மெழுகுவர்த்தி ஏலம்' என்பது நடைமுறையிலிருந்திருக்கிறது. ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி எரிந்து முடிவது, ஏலத்திற்கான நேரமாகப் பின்பற்றப்பட்ட இதில், மெழுகுவர்த்தி முடிந்துவிட்டால் பொருள் கைநழுவிவிடும் என்பதால், அவசரமாக ஏலம் கேட்பார்களாம். நேரத்தை வரையறுக்க, நடைப் பந்தையம் உள்ளிட்ட வேறு முறைகளும்கூட பின்பற்றப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் கடற்படை, உபரிக் கப்பல்களை ஓர் அங்குல மெழுகுவர்த்தியில் ஏலம் விட்டதாக, நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பிஸ் 1660இல் பதிவுசெய்துள்ளார். கலைப் பொருட்களின் ஏலம் பெரும்பாலும் காஃபி நிலையங்கள், மது, உணவு கிடைக்குமிடமாகவும், தங்குமிடமாகவும் இருந்த சத்திரங்கள் ஆகியவற்றில் நடைபெற்றுள்ளது. 1674இல் ஸ்வீடனில் உருவான ஸ்டாக்ஹோம் ஏல நிறுவனம்தான், உலகின் முதல் ஏல நிறுவனமாகும். அதைத் தொடர்ந்து உருவாகிய பல ஏல நிறுவனங்களில் சில இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. க்றிஸ்ட்டீஸ் நிறுவனத்தின் இணையத்தளம், 1766 டிசம்பர் 5இல் முதல் ஏலத்தை நடத்தியதாகக் குறிப்பிட்டாலும், 1759இலேயே அந்நிறுவனத்தின் விற்பனை குறித்து செய்தித்தாள்களில் வெளியான விளம்பரங்களும் கிடைத்துள்ளன. ஹாமில்ட்டன் அரண்மனையில் சேகரிக்கப்பட்டிருந்த பொருட்களை 1882இலேயே 3.32 லட்சம் பவுண்டுகளுக்கு(தற்போது சுமார் ரூ.400 கோடி!) ஏலத்தில் விற்ற இந்நிறுவனம், 2015வரை ஏலத்தில் விற்ற பொருட்களின் மதிப்பு 480 கோடி பவுண்டுகளாம்(ரூ.53,300 கோடி)! இணையத்தின் வரவு, இத்தகைய ஏல விற்பனைகளில் அதிக மக்கள் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கி, வளர்ச்சிக்கே இட்டுச் சென்றுள்ளது!
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 5
1952 - 5 நாட்களுக்கு நீடித்து, சுமார் ஆறாயிரம் பேர்வரை பலிகொண்ட, லண்டன் பெரும் பனிப்புகைமூட்டம் ஏற்பட்ட நாள் டிசம்பர் 5.
ஒரு லட்சத்திற்கும் அதிகமோனோருக்கு மூச்சுக்குழல் தொடர்புடைய உடல்நலக்குறைவுகளும் ஏற்பட்டன. முந்தைய நாளில் ஏற்பட்ட எதிர் புயலின் காரணமாக, வீசும் காற்று இல்லாத நிலையை ஏற்படுத்தியதுடன், வெப்பக் கவிழ்ப்பையும் ஏற்படுத்தி, குளிர்ந்த காற்றை, அடிவளிமண்டலத்திற்குக்கீழே தேங்கச் செய்தது. தாழ்வழுத்த மண்டலம் என்பது புயல். அதற்கு மாறாக நிலவும், உயர்ந்த காற்றழுத்தம் எதிர் புயல் என்றழைக்கப்படுகிறது. வெப்பநிலை தலைகீழாக மாறுதல், நிலையான, உலர்ந்த குளிர் காற்று, இவற்றால் பனிமூட்டம் முதலானவை இதனால் உருவாகும். இந்தக் குளிரை எதிர்கொள்ள லண்டன் மக்கள் நிறைய நிலக்கரியை எரித்தனர். இரண்டாம் உலகப்போருக்குப்பின், தரமான நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டதால், வீடுகளில் கனப்புக்குப் பயன்படுத்த கந்தகம் அதிகமாகக்கொண்ட, தரம் குறைந்த நிலக்கரியே பயன்படுத்தப்பட்டது. நிலக்கரியால் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்கள் ஏராளமாக இருந்ததுடன், பழங்கால வாகனம் என்று, மின்சார ட்ராம் வண்டிகள் நிறுத்தப்பட்டு, டீசல் பேருந்துகள் புழக்கத்துக்கு வந்ததும் மாசுபாட்டை அதிகரித்திருந்தது. 1000 டன் புகைத்துகள்கள், 140 டன் ஹைட்ரோகுளோரிக் அமிலம், 14 டன் ஃபுளோரின் சேர்மங்கள், 800 டன் கந்தக அமிலத்தை உருவாக்கவல்ல 370 டன் கந்தக டைஆக்சைட் ஆகியவை அக்காலத்து லண்டனில் ஒவ்வொரு நாளும் வெளியானதாக வளிமண்டல ஆய்வகம் பதிவு செய்துள்ளது. காற்றிலிருந்த எண்ணைப்பிசுக்குடன்கூடிய கரித்துகள்களால் மஞ்சள் கலந்த கருமை நிறத்தில் ஏற்பட்ட புகையும், பனியும் கலந்த மூட்டம், சில அடி தூரத்துக்குமேல் பார்க்க இயலாமல் செய்ததால், சமிக்ஞைகளைப் பார்க்க முடியாத நிலையில், சிறிய குண்டுகளை வெடித்து ரயில்களுக்கு சமிக்ஞைகள் செய்யப்பட்டது. 13ஆம் நூற்றாண்டிலிருந்தே காற்று மாசு நிறைந்த நகராக லண்டன் இருந்திருந்தாலும், இவ்வளவு மோசமான நிலையைச் சந்தித்தில்லை. உடனடியாக '1952இன் தூய காற்றுச்சட்டம்' இயற்றப்பட்டு, மாசுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று.டிசம்பர். 5
இசை மேதை மொசார்ட்
நினைவு தினம் இன்று.
மொசார்ட்
(ஜனவரி 27, 1756 - டிசம்பர் 5, 1791)
ஒரு புகழ்பெற்ற சிறந்த ஐரோப்பிய இசையமைப்பாளர் ஆவார். இசை வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற பல ஒத்திசைகள், ஆப்பெராக்கள் போன்ற பல இசையாக்கங்களைச் செய்தவர்.
மொசார்ட் இளம் வயதிலிருந்தே தமது திறமையை காட்டி வந்துள்ளார். கிளபத்திலும் வயலினிலும் தேர்ந்த மொசார்ட் ஐந்தாம் வயதிலேயே இசைத் தொகுக்கத் தொடங்கி ஐரோப்பிய அரச குடும்பங்களில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
17ஆவது வயதில் சால்சுபர்கு அரச இசைக்கலைஞராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அமைதியுறாது பல இசையாக்கங்களை தொகுத்தவாறு மேலும் உயர்நிலைக்காக தேடி அலைந்தார். இவ்வாறு 1781இல் வியன்னா சென்றபோது, சால்சுபெர்கில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இருப்பினும் எவ்வித நிதி ஆதாரமுமின்றி தலைநகரில் வாழ்ந்திருந்த மொசார்ட்டின் புகழ் பரவலாயிற்று. வியன்னாவில் அவரிருந்த கடைசி நாட்களில் அவருடைய பல புகழ்பெற்ற ஒத்திசைகள், ஆப்பெராக்கள், கான்செர்டோக்களை எழுதினார்.
இளம் அகவையிலேயே ஏற்பட்ட அவரது மரணம் குறித்து பல கருத்துக்கள் வெளிவந்துள்ளன. அவர் இறக்கும்போது கான்சுடான்சு என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருந்தனர்.
600க்கும் மேற்பட்ட இசைவாக்கங்களை அவர் தொகுத்துள்ளார்; இவற்றில் பல ஒத்திசை, இசைக்கச்சேரி, அரங்கவிசை, ஆப்பெரா, குழுவிசை வகைகளில் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
பன்னெடுங்காலமாக போற்றப்படும் செவ்விசை இசைத்தொகுப்பாளர்களில் ஒருவராக உள்ளார். பிற்காலத்திய மேற்கத்திய இசையில் இவரது தாக்கம் அளவிடற்கரியது. தமது துவக்க கால இசைவாக்கங்களை பேத்தோவன் மொசார்ட்டின் பாணியிலேயே இயற்றினார்.
"இத்தகைய திறமையை இன்னமும் நூறு ஆண்டுகளுக்குக் காணவியலாது" என சமகால இசையமைப்பாளர் ஜோசப் ஹேடன் எழுதினார்
மொசார்ட் ஜனவரி 27. 1756 அன்று ஆஸ்திரியாவில் சால்சுபர்கு சமத்தானத்தில் பிறந்தார் .
இவரின் தந்தை பெயர் லியோபோல்ட் மொசார்ட். இவரின் தாயார் பெயர் அன்னா. இந்த இணையருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் இவரே மிக இளையவராவார்.
இவரின் அக்கா பெயர் மரியா அன்னா வால்பர்கா இக்னேசியா. மொசர்டின் அக்காவை செல்லமாக "நானெல்" என அழைப்பார். மற்ற ஐந்து குழந்தைகளும் இளம் வயதிலேயே அம்மைநோயினால் இறந்தனர்.
மொசார்ட்டுக்கும் பதினைந்தாம் வயதில் அம்மைநோய் ஏற்பட்டு ஒரு வருடத்தில் குணமடைந்தார்.
1787 இல் ஆஸ்திரிய-துருக்கி யுத்தம் நடைபெற்றதால் மொசர்டும் மற்றும் பல இசைக்கலைஞர்களும் கச்சேரிகள் நடத்துவதை விட்டுவிட்டனர். இக்காலகட்டத்தில் மொசார்ட் மிகச்சிறந்த சிம்பொனிகளை உருவாக்கினார்.
சிம்பொனி எனும் கிரேக்கச் சொல்லுக்குப் பொருள் இசைசேர்க்கை என்று பொருள். 1791 இல் மொசர்டின் உடல் நிலை மோசமானது.
1791 டிசம்பர் 5ஆம் தேதி அவர் காலமானார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர்.5
இந்தியாவின் புகழ்பெற்ற பெண் ஓவியர் அம்ரிதா சேர்கில் நினைவு தினம் இன்று.
அம்ரிதா சேர்கில் (Amrita Sher-Gil, 30, சனவரி 1913--5, திசம்பர் 1941) என்பவர் இந்தியாவின் பெண் ஓவியர். இந்தியாவின் பிரிடா காலோ எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.
அம்ரிதா சேர்கில் புடாபெசுடு நகரில் பிறந்தார். 1921 முதல் சிம்லா நகரில் வாழ்ந்து வந்தார். இளம் அகவையிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது.
ஓவியக்கலையில் மேலும் பயிற்சி பெற 1929 இல் பாரீசு நகருக்குப் போனார்.
கவின் கலையில் இளங்கலைப் பட்டமும் பெற்று மேலை நாட்டு ஓவிய வகைகளையும் கற்றுக்கொண்டார்.
இளம்பெண்கள் என்ற பெயரில் அம்ரிதா சேர்கில் வரைந்த ஓவியம் மேலை நாட்டுப் பாணியில் அமைந்திருந்தது.
1934 இல் இந்தியாவுக்குத் திரும்பிய இவர் இந்தியாவின் தொன்மைக் கலைகளிலும் இசுலாமிய ஓவியங்களிலும் ஆர்வம் காட்டினார்.
1937 இல் தென்னிந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மணப் பெண்ணின் அறை, பிரம்மச்சாரிகள், தென்னிந்திய கிராமிய வாழ்க்கை என்ற ஓவியப் படைப்புகள் புகழ் பெற்றன.
அஜந்தா குகை ஓவியங்களும், இந்திய மக்களின் எளிய வாழ்க்கை நிலைகளும், பெண்களின் நலிந்த வாழ்வும் அம்ரிதாவின் ஓவியங்களில் பதிவாகின.
1938 இல் கொரக்பூரில் வாழ்ந்தபோது இரவிந்திரனாத் தாகூர், ஜமினி ராய் ஆகியோரின் ஓவியங்களைக் கண்டார். அதன் விளைவாக வங்காளத்தில் நிகழ்ந்த கலைப்புரட்சியில் தாமும் இணைந்து கொண்டார்.
காந்தியக் கொள்கைகளிலும் அம்ரிதா நாட்டம் கொண்டார். 1941இல் லாகூரில் வாழ்ந்து வந்த அம்ரிதா ஒரு ஓவியக் கூடத்தை அமைத்தார். அங்கு ஓவியக் கண்காட்சியை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த நிலையில் 5 டிசம்பர் 1941 இல் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 5
உலகப் புகழ்பெற்ற ஓவியர்
ஆஸ்கர் கிளாடு மோனட்
இறந்த தினம் இன்று.
(14 நவம்பர் 1840 – 5 டிசம்பர் 1926 ) ஒரு பிரெஞ்சு ஓவியர் இம்ப்ரெஷனிச ஓவியத்தின் நிறுவனர் நவீனத்துவத்தின் முக்கிய முன்னோடியாகக் கருதப்படுகிறார் , குறிப்பாக இயற்கையை அவர் உணர்ந்ததைப் போல வரைவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளில். அவரது நீண்ட வாழ்க்கையில், அவர் இயற்கைக்கு முன் ஒருவரின் உணர்வை வெளிப்படுத்தும் இம்ப்ரெஷனிசத்தின் தத்துவத்தின் மிகவும் நிலையான மற்றும் செழிப்பான பயிற்சியாளராக இருந்தார், குறிப்பாக ப்ளீன் ஏர் (வெளிப்புற) இயற்கை ஓவியத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. [2] "இம்ப்ரெஷனிசம்" என்ற வார்த்தையானது, சலூனுக்கு மாற்றாக மோனெட் மற்றும் அவரது கூட்டாளிகளால் தொடங்கப்பட்ட 1874 இல் ("நிராகரிப்பவர்களின் கண்காட்சி") காட்சிப்படுத்தப்பட்ட அவரது ஓவியமான இம்ப்ரெஷன், சோலைல் லெவண்ட் என்ற தலைப்பில் இருந்து பெறப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் (1840) பிறந்தார். புத்திசாலி மாணவன்தான். ஆனாலும், வகுப்பறைக்குள் அடைந்துகிடப்பது கசந்தது. சுதந்திரப் பறவையாக இருக்கவே விரும்பினார். சிறு வயதிலேயே ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
வியாபாரியான தந்தை, மகனையும் அதில் ஈடுபடுத்த விரும்பினார். ஓவியம்தான் தன் வாழ்க்கை என்பதில் இவர் தீவிரமாக இருந்தார். ஆசிரியர்களை கிண்டல் செய்து நோட்டு, பாடப் புத்தகங்களில் கேலிச்சித்திரம் வரைவார். இவரது ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்திவந்த தாய் 1857-ல் மறைந்தார். ஓவியத்தில் நாட்டம் செலுத்தி, அந்த சோகத்தில் இருந்து மீண்டார்.
பொதுமக்களைப் பற்றி இவர் வரையும் சித்திரங்கள் மிகவும் பிரபலமடைந்தன. கரிக்கோலால் பல ஓவியங்களை வரைந்து விற்றார். யூஜின் புதின் என்ற ஓவியரை சந்தித்த பிறகு இவரது ஓவிய பாணியில் மாற்றம் ஏற்பட்டது. ஆயில் பெயின்ட், இயற்கை ஓவியங்கள் வரையும் நுட்பங்களை புதின் இவருக்கு கற்றுத்தந்தார்.
ராணுவப் பணியாற்ற அல்ஜீரியாவுக்கு சென்றார். நோய்வாய்ப் பட்டதால், இரண்டே ஆண்டுகளில் பிரான்ஸ் திரும்பினார்.
பிரபல ஓவியர்களின் பாணியைப் பின்பற்றி வரைவதில் இவருக்கு உடன்பாடு கிடையாது. இவர் தன் விழிவாசலில் பிரவேசித்து மனதில் உயிர்பெறும் வடிவங்களை வரைவதிலேயே ஆர்வம் காட்டினார்.
ஓவியத் திறனை மேம்படுத்திக்கொள்ள 1862-ல் சார்லஸ் கிளேயர் என்பவரின் ஓவியக் கூடத்தில் சேர்ந்தார். அங்கு இவருக்கு பியர் அகஸ்ட் ரென்வர், பிரெட்ரிக் பஸில், ஆர்பிரெட் சிஸ்லே போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் நட்பு கிடைத்தது. இவர்கள் இணைந்து ஓவியத்தில் புதிய பாணியைக் கடைபிடித்தனர்.
இவரது ஓவியக் கண்காட்சியை பார்க்க வந்த ஒரு விமர்சகர் இவரது ஓவிய பாணியை ‘இம்ப்ரெஷன்’ என்று குறிப்பிட்டார். இதுவே இவரது ஓவிய பாணியைக் குறிப்பிடும் பதமாக நிலைத்துவிட்டது. பின்னாளில் ‘இம்ப்ரெஷனிஸம்’ என்ற ஓவிய இயக்கமாகவே இது உருவெடுத்தது.
மனைவி கேமீலை வைத்து 1866-ல் இவர் வரைந்த ‘தி வுமன் இன் க்ரீன் டிரெஸ்’ ஓவியம் இவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. கேமீலை மாடலாகக் கொண்டு பல ஓவியங்களை வரைந்தார். 1879-ல் கேமீல் இறந்தார்.
பேரும் புகழும் கிடைத்ததே தவிர, இவரால் பொருளாதார ரீதியாக எதுவும் சாதிக்க முடியவில்லை. உடல்நலமும் அவ்வப்போது வாட்டியது. வறுமை, உடல்நல பாதிப்புகளிலேயே வாழ்வின் பெரும்பகுதி கழிந்தது. இதனால் மன அழுத்தத்துக்கு ஆளானார். தூரிகைதான் அவருக்கு இருந்த ஒரே ஆறுதல். ஓவியம் வரைவதை நிறுத்தவே இல்லை. இவரது பொருளாதார நிலை 1890-களில் மாறியது. புகழோடு, பணமும் சேர்ந்தது.
‘இம்ப்ரெஷனிஸம்’ ஓவிய பாணியை கலை உலகுக்கு தந்த முன்னணி ஓவியர் கிளாட் மோனட் 86-வது வயதில் (1926) மறைந்தார். காலத்தால் அழியாப் புகழ்பெற்ற இவரது ஓவியங்கள் இன்றும் உலகின் பல அருங்காட்சியகங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🤔தெரிந்து கொள்வோம் #🤔 Unknown Facts
🫡🫡🫡The gigantic Airbus A380 vs. the legendary Boeing 747-400!
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 5
கார்ல் பெர்டினான்டு கோரி பிறந்த தினம்
(Carl Ferdinand Cori) பிரித்தானிய இராச சமூகத்தின் வெளிநாட்டு அறிஞர் (ForMemRS),
(டிசம்பர் 5, 1896 – அக்டோபர் 20, 1984) செக் நாட்டின் பிராகாவில் (அப்போது ஆஸ்திரியா-அங்கேரி, தற்போது செக் குடியரசு) பிறந்த உயிர்வேதியியலாளரும் மருந்தியல் வல்லுநருமாவார்.
தமது மனைவி கெர்டி கோரியுடனும் அர்கெந்தீனாவின் மருத்துவர் பெர்னார்டோ ஊசேயுடனும் இணைந்து 1947இல் நோபல் பரிசு பெற்றார். கிளைக்கோசன் (விலங்கு மாச்சத்து) – குளுக்கோசின் ஓர் வழிப்பொருள்– உடலில் எவ்வாறு உடைக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது என்றும் பின்னர் ஆற்றல் வழங்க எவ்வாறு மீளிணைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது என்றும் கண்டறிந்தமைக்காக மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கார்போவைதரேட்டு வளர்சிதை மாற்றத்தை தெளிவாக்கியப் பணிக்காக 2004இல் இணையர் இருவருமே தேசிய வேதியியல் வரலாற்று அடையாளங்களாக தகவேற்பு பெற்றனர்.
#அறியப்படுவது
கிளைக்கோசன்
#விருதுகள்
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1947)
வில்லர்டு கிப்சு விருது (1948)
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் - 05.
செல்வி ஜெ ஜெயலலிதா அம்மா அவர்களின் நினைவு நாள்
உலகத்தில் சிறந்த ஆளுமைகளின் அடையாளம்-ஜெ.ஜெயலலிதா அவர்களைப் பற்றிய நினைவு நாளில் சிறப்பு கட்டுரை..
டிசம்பர் - 05. உலகத்தில் சிறந்த ஆளுமைகளின் அடையாளம்-ஜெ.ஜெயலலிதா அவர்களைப் பற்றிய நினைவு நாளில் சிறப்பு கட்டுரை..
தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இவர் மட்டுமே. சினிமா, அரசியல்வாதி, கட்சியின் பொதுச் செயலாளர், முதல்வர் இப்படி பல முகங்கள் கொண்ட ஜெயலலிதாவின் ஆளுமை முகம் சிறப்பு வாய்ந்தது. ஒரு மேலாண்மை பாடத்தில் ஒரு தலைவனுக்குரிய ஆளுமைகளாக என்ன கூறப்பட்டுள்ளதோ அத்தனையும் அவரின் இயல்பான குணங்களாகவே இருந்துள்ளன.
ஒற்றை ராணுவ மங்கை
ஒரே மூச்சில் 20 மேடைகளில் பேசி 1990-க்குப் பிறகு, குறுகிய வட்டம், சிலரோடு மட்டுமே நெருக்கமான பழக்கம் என பெரும்பாலும் தனியாகவே இருந்திருக்கிறார். ’ஒரு தலைவன் எந்த அளவுக்கு தனது பர்சனல் பக்கத்தைத் தனிமைப்படுத்திக் கொள்கிறானோ... அவனால் பொதுவெளியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்’ என்பது மேலாண்மை விதி. இது, ஜெயலலிதாவின் 25 வருட அனுபவம். ஜெயலலிதாவின் மேடைப்பேச்சுகளோ... கட்சி பொதுக்கூட்டங்களோ அவர், பேசும்போது குறுக்குப் பேச்சுக்கு இடமிருக்காது... சரியோ, தவறோ? ஜெயலலிதாவின் சில தீர்க்கமான முடிவுகள்.யார் என்ன சொன்னாலும் இறுதி வடிவம் ஜெயலலிதா என்ற தனி ஒரு நபரால் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில், ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான்.
யாருக்கும் முக்கியத்துவம் இல்லை!
ஒரு தலைவன் எப்போதுமே ஒருதலைபட்சமான முடிவுகளை எடுக்கக் கூடாது. குறிப்பிட்ட நபருக்கு மட்டும் சாதகமாக இருக்கக் கூடாது. இதனை தனது அமைச்சரவை மாற்றங்களிலும், கட்சிப் பதவிகளிலும் அசாதாரணமாக செய்து காட்டியுள்ளார் ஜெயலலிதா. தவறு என்று வந்துவிட்டால், நம்பிக்கையான அமைச்சர் எனப் பெயர்பெற்றவருக்குக்கூட அடிப்படை உறுப்பினர் பதவிகூடக் கொடுக்காமல் ஒதுக்கிவைப்பதிலும் சரி, திறமையான ஒருவர் கீழ் நிலையில் இருந்தால்... அவரை உரிய இடத்துக்குத் தூக்கிவிடுவதிலும் ஜெயலலிதாவின் செயல்களில் இயல்பாகவே உள்ள குணம். பிடிக்காது என்றால் பிடிக்காதுதான். இந்த அசாதாரண மனோபாவம்தான் ஜெயலலிதாவின் அடையாளம்.
துணிச்சல்!
‘‘ஒரு விஷயத்தைத் தவறாகச் செய்தால் ஒப்புக்கொள்ளுங்கள், அதனை அடுத்த முறை நடக்காமலும், சென்ற முறையைவிடச் சிறப்பாகவும் செய்துகாட்டுங்கள்’’ என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் வரிகள். ஜெயலலிதாவைப் பார்த்து நீங்கள் தவறான முடிவெடுத்துவிட்டீர்களா என்ற கரண தப்பாரின் பேட்டியாக இருக்கட்டும், வழக்குகள் நிரூபிக்கப்பட்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்த கர்ஜனையாகட்டும், துணிச்சல் இல்லாவிட்டால் ஜெயலலிதா என்றைக்கோ அரசியலைவிட்டு வெளியேற்றப்பட்டிருப்பார். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் கர்ஜனை மிகுந்த வார்த்தைகள் அவ்வளவு பெரிய அரங்கில் அனைவரையும் ஒரே பக்கமாக இழுக்கும் ஆளுமை நிறைந்தவை. கருணாநிதியை எழுத்திலும், பேச்சிலும் வெல்வது கடினம் என்றால், அதற்கு சற்றும் சளைக்காதவர் ஜெயலலிதா. இந்தத் துணிச்சல்தான் 110 விதியில் அத்தனை அறிவிப்புகளையும் யார் விமர்சித்தும் கேட்காமல் அரங்கேற்றியது. இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதாவின் நிழல்கூடப் பிடிவாதமாகத்தான் இருக்கும். அதுதான் ஜெயலலிதா. தன் தவறுகளில் இருந்து சட்டென்று மீண்டு வெற்றிபெறும் குணம் கொண்டவர் ஜெயலலிதா.
நான், எனது - தலைமை + ஆளுமை:
அனைத்துத் தலைவர்களின் உரையும், நாம், நமது என்ற போக்கிலேயே இருக்கும். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் ஜெயலலிதா. ‘எனது ஆட்சியில் நடந்த சாதனைகள்’, ‘மக்களுக்காக நான்... மக்களால் நான்’ எனும் தனிமனித விஷயத்தை முன்னிறுத்துவதில் ஜெயலலிதா கில்லாடி. ‘வீழ்வதைவிட விரைந்து எழுவதே மேல்’ என்ற வாசகம் ஜெயலலிதாவுக்குத்தான் பொருந்தும். இவர், வீழ்ந்தபோதெல்லாம் எவ்வளவு சீக்கிரம் திரும்ப வரவேண்டும் என்று ஆக்ரோஷமாக யோசிக்கும் மனோபாவத்தை இவரிடம் பார்க்க முடியும். ஜெ.வுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர்களும் சரி, ஜெயலலிதாவுக்கு பின் அரசியலுக்கு வந்தவர்களும் சரி... கட்சியில் ஜெயலலிதாதான் எல்லாம் என்று நினைக்கவைத்தது அவரது ஆளுமைதான். அதுதான் அனைவரையும் இவரைப் பார்த்து இரும்பு மனுஷி எனச் சொல்ல வைத்துள்ளது.
ஜெ.ஜெயலலிதா எனும் ரோல்மாடல்!
தமிழ்நாட்டில் கட்சி, அரசியல் ஆர்வம் இல்லாத பல பெண்களிடம் சென்று... ‘உங்கள் ரோல்மாடல் யார்’ என்றால், ‘ஜெயலலிதா’ என்ற பதில் சற்றும் தாமதமில்லாமல் வரும். இந்திரா காந்திக்கு நிகரான பிரச்னையைச் சந்தித்தவர், சொந்தக் கட்சியாலேயே சில காலம் ஓரங்கட்டப்பட்டவர். வழக்காக இருந்தாலும் சரி, பர்சனல் சறுக்கல்களாக இருந்தாலும் சரி... அதிலிருந்து மீண்டுவர மிகவும் கடுமையாகப் போராடிக்கொண்டே இருந்திருக்கிறார் ஜெ. கடைசியாக அவரது உடல்நிலையோடும்கூட அவர் போராடிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்.
‘‘உங்களை யாரோடும்ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள். அது, உங்களையே அவமானப்படுத்திக் கொள்வதற்குச் சமம்’’ என்பது ஹிட்லரின் வரிகள். ஜெயலலிதா தன்னை யாரோடும் ஒப்பிடாத தலைவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் மறைந்தாலும் இவரின் புகழ்கள் மக்களின் மனதில் என்றும் மறையாத வையாகும்..
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 5
விடுதலைப் போராட்டவீரர் பாகாஜதீன் பிறந்த தினம் இன்று,
விடுதலை வீரர்களைப் போற்றுவோம்!
உண்மையான வங்கப்புலி!
மறைநிலை வீரர் / பின்னணிச் செயல்வீரர் !! [ UNSUNG HERO]
வங்காள வரிப்புலிதான் ‘பாகாஜதீன்’ என்றழைக்கப்பட்ட ஜதீந்திரநாத் முக்கோபாத்யாயா.
வங்க மாநிலம் நாடியா மாவட்டத்திலுள்ளது கோயா கிராமம். இதை ஒட்டி கோடுய் என்ற நதி ஓடுகிறது. அந்த நதிக்கரையில் புதர்மறைவிலிருந்து வந்த ஒரு பெரிய புலி, ஜதீன் என்ற வாலிபன் மேல் பாய்ந்தது.
இடுப்பிலிருந்து சிறு கத்தியின் துணையுடன் அப்புலியுடன் போராடத் துவங்கினான் ஜதீன். ஏறத்தாழ இருபது நிமிடங்கள் நடந்த அந்தப் போராட்டத்தில் ஜதீன், புலி இருவருக்குமே ரத்தம் வடிந்தது. இறுதியில் புலியை வென்றான் ஜதீன். ஒன்பதடி நீள வங்காள "ராயல் டைகர்" செத்து விழுந்தது.
பலத்த காயங்களுடன் ரத்தம் வழிய எழுந்த ஜதீனை மக்கள் பாராட்டி அவனுக்கு '‘புலியைக் கொன்றவன்’' என்று பொருள்படும் ‘பாகாஜதீன்’ எனப் பெயரிட்டனர்.
பாகாஜதீன் கொல்கொத்தா கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். சிகிச்சையளித்த மருத்துவர் சுரேக்ஷ் சர்வாதிகாரி, புலி கடித்த காயம், காலில் ஆழமாக இருந்ததால் காலை வெட்டி எடுத்தால்தான் பிழைப்பான் என்றார். ஆனால் ஜதீன் காலை வெட்டி எடுக்க ஒப்புக் கொள்ளவில்லை. தன் மனோபலத்தால் காலை எடுக்காமலேயே குணமடைந்தான் பாகாஜதீன்.
05-12-1879 ஆம் தேதி பிறந்தவர் பாகாஜதீன்.
இளமைக்காலத்திலேயே பெற்றோரை இழந்தார். ஜதீனின் விதவைச் சகோதரி வினோத் பாலாதான் பெற்றோர் இல்லாத குறையைத் தீர்த்து வளர்த்தார். மல்யுத்தம், சிலம்பம், வாட்போர் போன்ற வீரவிளையாட்டுகளில் தேர்ந்து விளங்கினார் பாகாஜதீன்.
ஜதீனை ஈர்த்தவை!
பாகாஜதீன் துடிப்புமிக்கவராக இருந்ததினால் அவர் கண்முன் நடந்த சில சம்பவங்கள், ஆங்கிலேயர்களின் மீது அளவற்ற வெறுப்பு ஏற்படக் காரணங்களாக அமைந்தன. இத்தோடு ராக்ஷ்பிகாரி போஸ் போன்ற தலைவர்களின் உணர்ச்சி மிக்க பேச்சுகளும், கதர்க்கட்சி வீரர்களின் சுதந்திரப் போராட்டங்களும் ஜதீனை வெகுவாக ஈர்த்து, சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட வைத்தன.
விவேகானந்தரின் கொள்கை முழக்கங்களால் புத்துணர்வு பெற்ற ஜதீன், அரவிந்தரோடு சேர்ந்து தேசிய இயக்கங்களிலும் பங்கு கொள்ளத் துவங்கி, பிற்காலத்தில் அரவிந்தரின் வலது கரமாகவே விளங்கினார்.
இந்தா வாங்கிக்கோ!
கொல்கொத்தாவில் உள்ள கோராபஜாரின் ஒரு பக்கம். கையில் ஒரு பிரம்புடன் நின்று கொண்டிருந்தார் ஒரு ஆங்கிலக் கனவான். அந்த வழியாகப் போகும் இந்தியர் ஒவ்வொருவரையும் அவர்கள் வயோதிகரா, பெண்களா, வாலிபர்களா என்று பாரபட்சமில்லாமல் ஒவ்வொருவர் தலையிலும் பிரம்பினால் ஒரு அடி அடித்து “வாங்கிக்கோ, முப்பத்தைந்து” என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
அப்போது மாணவனாக இருந்த ஜதீன் சற்றுநேரம் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஆங்கிலேயனின் இந்தச் செயல் ஜதீனுக்கு எரிச்சலூட்டியது. விரைந்து சென்று அந்த ஆங்கிலேயரின் கையில் இருந்த பிரம்பைப் பிடுங்கி, அவர் தலையில் ஒரு அடி கொடுத்து “இந்தா! வாங்கிக்கோ! முப்பத்தெட்டு” என்றார்.
அந்த ஆங்கிலேயர் ஜதீனை எதிர்க்க முற்பட்டபோது, ஜதீன் அந்தப் பிரம்பாலேயே அவரை விளாசத் துவங்கியதும் அந்த ஆங்கிலேயர் ஓட்டமெடுத்தார்.
புரட்சி இயக்கத் தலைவரானார்!
அலிப்பூர் சதிவழக்கில் யுகாந்தர் புரட்சி இயக்கத் தலைவர்களான அரவிந்த கோக்ஷ், அவரது சகோதரரான பரீந்திரநாத் கோக்ஷ் முதலானோர் கைதானதை அடுத்து, வங்காளப் புரட்சி இயக்கம், சரியான தலைவர் இல்லாத நெருக்கடிக்கு உள்ளானபோது ‘அனுசீலன் சமிதி’ என்ற புரட்சி இயக்கத்திற்குப் பாகாஜதீன் தலைவரானார்.
அலிப்பூர் சதிவழக்கில் பொய்சாட்சியங்கள் அளிக்க வைத்ததோடு, சில புரட்சி வீரர்களைச் சித்திரவதையும் செய்து வெறுப்பைத் தேடிக் கொண்ட சம்சுல் ஆலம் என்பவரை வீரேந்திரநாத் சுட்டுக் கொன்றார்.
அதே வழக்கில் அரவிந்தருக்கு எதிராக வாதாடிய வங்காள வழக்கறிஞர் அசுதோக்ஷ் பிஸ்வாசை சாருசந்திரபோஸ் சுட்டுக் கொலை செய்தார்.
இதற்கிடையே சார்லஸ் டெகார்ட் என்ற ஆங்கிலேய அதிகாரியின் சூழ்ச்சியால், சாரு சந்திரபோஸ் கொடுத்த வாக்குமூலத்தைப் பாகாஜதீனுக்கு எதிராக திருப்பி கொலை செய்யத் தூண்டியதாக இவ்விரு வழக்கிலும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
20-02-1910 அன்று கொல்கொத்தா மத்திய சிறைச்சாலையின் மைதானத்திலேயே ஜதீனின் வழக்கு விசாரணை துவங்கியது. வழக்கை விசாரித்த நீதிபதி, போதுமான சாட்சியங்கள் இல்லாததாலும், சாருசந்திரபோஸ் சிறையில் கொடுத்த வாக்குமூலம் செல்லாது என்று கருதியதாலும் ஜதீனை விடுதலை செய்தார்.
ஆனால் வழக்கு நடந்த ஓராண்டில் சிறை வாழ்க்கையையும், சித்திரவதைகளையும் அனுபவித்த பாகாஜதீன் 21-02-1911ஆம் தேதி விடுதலையாகி வெளியே வந்தார்.
ராணுவ அதிகாரிகளும் பாகாஜதீனும்:
நண்பர் ஒருவரைச் சந்திக்க பாகாஜதீன் டார்ஜிலிங்கிற்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அவர் இருந்த பெட்டியில் நான்கு ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் ஏறினார்கள்.
ரயில் ஒவ்வொரு ஸ்டேசனில் நிற்கும்போதும், இந்த நால்வரும் ப்ளாட்பாரத்தில் இறங்கி, போவோர் வருவோரைக் கிண்டலும் கேலியும் செய்வதுமாக கூத்தடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஜதீன் இருந்த பெட்டியில் இருந்த ஒரு முதியவர் குடிநீருக்காக தவித்துக் கொண்டிருந்தார். அவருக்காக தண்ணீர் கொண்டு வர ஜதீன் சென்று விட்டு திரும்பும்போது அங்குமிங்கும் கூத்தடித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர் ஒருவர் மீது சிறிது தண்ணீர் பட்டது. அந்த ஆங்கிலேயர் ஜதீனைத் தன் கைபிரம்பால் அடித்தார். ஜதீன் வேறொன்றும் பேசாமல் பெட்டியில் ஏறி முதியவரின் தாகம் தீர்த்து விட்டு மீண்டும் இறங்கினார்.
தன்னைப் பிடித்த அந்த ராணுவ அதிகாரியின் கையைப் பிடித்து ஒரு முறுக்கு முறுக்கினார் ஜதீன். அந்த அதிகாரி அலறினார். அதைக் கண்ட மற்ற மூவரும் அந்த அதிகாரியின் உதவிக்கு ஓடி வந்தனர்.
அவ்வளவுதான்! அந்த நான்கு ராணுவ அதிகாரிகளையும் ஜதீன் புரட்டி எடுத்து விட்டார். எழுந்திருக்கக் கூட வலுவற்று, அந்த நான்கு ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளும் ப்ளாட்பாரத்தில் துவண்டு கிட
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*













