ShareChat
click to see wallet page
search
#innraya SINTHANAY சிந்தனை* 🌷02.05.2026🌷 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 மகிழ்ச்சி எங்கே? ஆனந்தம் எங்கே? என்று தேடுகின்ற நமக்கான பதிவு இது 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 ஆத்மார்த்த நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.... மனம் விட்டு பேசும் ஒரு நட்பு கிடைத்தால் மட்டுமே மனம் இளகும்.... மனம் இளகினால் வாழ்க்கைப் பிடிக்கும்... வாழ்க்கை பிடித்தாலே மகிழ்ச்சி தான்.... மகிழ்ச்சி என்றாலே பிறகு கொண்டாட்டம் தான்... கொண்டாட்டம் என்றாலே வாழ்வுதான்... என்ற உணர்வு நிலையில் வாழத் தொடங்கி விடுவோம்.... இந்த வாழ்வை நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம்.. பிறப்பெடுத்து இருக்கிறோம்... நாம் தான் அதைத் தொலைத்து விடுகிறோம்... அல்லது தேடிக் கொண்டிருக்கிறோம்.. 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 ஆசைப்பட்ட வாழ்க்கை என்பது......... அந்தந்த வயதுகளில் வாழ்ந்திருக்க வேண்டிய ஒன்று....... பால்யம் முதல் அந்திமக்காலம் வரை வாழவில்லை என்ற ஏக்கம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது... காலங்கள் கடந்த பின்பு அவைகள் கிடைப்பதில்லை அவைகளை வாழ்வின் எச்சங்களாக... தேங்கி விடுகின்றன. வாழ்க்கை என்பது ஒரு வித்தியாசமான புரிந்து கொள்ள முடியாத புதுவகையான தேர்வு...!!! அதில் ஓவ்வொருவருக்கும் தனித்தனி கேள்வித்தாள்!!! அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், அடுத்தவர்களைப் பார்த்து காப்பியடித்து தங்கள் வாழ்க்கையில் தோல்வியடைகிறார்கள்..!!! 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 உண்மையும் யதார்த்தமும் வேறு.. மகிழ்ச்சி.... நமக்கு அருகாமையில் தான் இருக்கிறது... தொட்டு விடும் தொலைவில் தான் உள்ளது... மனதோடு மனதாக ஒன்றிப் போய் உள்ளது.... உணர்ந்து கொள்ள வேண்டியது மட்டுமே நம் பொறுப்பு... இயற்கையுடன் இளைப்பாறி செயற்கை உலகிலிருந்து கொஞ்சம் விடுப்பு எடுத்து , அழுத்தம் நிறைந்த மனதில் இலகுவாக அமைதி நிலவ தேடித் தேடி வரும் துயரங்களைத் தூரம் தள்ளி வைத்து சிறிது நேரம் நமக்காக நம் வாழ்வின் அர்த்தத்தை உணர்வதற்காக... நிம்மதி எங்கும் இல்லை என்ற புலம்பலை மறந்து விட்டு வாழ்வு இங்கு தான் இருக்கின்றது என்று இந்தக் கணத்தில் வாழ்விலே நிம்மதி ஆனந்தம் கொண்டாட்டம்.... 😊😊😊
innraya SINTHANAY - bக கிறுக்கல்கள் தேன் ஊத்தி வளர்த்தாலும் பாகற்காய்  கசக்கா தான் செய்யு6் அது போல கிறுக்கல்கள்  ৩& தான மனதர்களுஃ. சல bக கிறுக்கல்கள் தேன் ஊத்தி வளர்த்தாலும் பாகற்காய்  கசக்கா தான் செய்யு6் அது போல கிறுக்கல்கள்  ৩& தான மனதர்களுஃ. சல - ShareChat