#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️
வெளிப்படுதற்குரிய காலம் வருந்துணையும் ஒடுங்கியிருக்கும் நோய் இனிவரும் பிறப்புகள், துன்பங்கள் ஆகியனவாய இவைகளை உடைய இவ்வாழ்க்கை நீங்கத்தவம் புரிதற்குரிய இடத்தை விரும்பி நிற்கும் நீவிர் எல்லீரும் அகழும் மதிலும் சூழ்ந்து எல்லா இடங்களிலும் உள்ள வீடுகள் தோறும் வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானின் அடிநிழலின்கீழ் அவருக்கு ஆளாகுமாறு அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக.
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்.
திருமுறை : தேவாரம், முதல் திருமுறை.
பண் : பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்.
நாடு : நடு நாட்டுத் திருத்தலம்.
தலம் : திருத்தூங்கானைமாடம்.
சுவாமி : சுடர்க்கொழுந்தீசர், பிரளயகாலேசுவரர்.
அம்பாள் : ஆமோதனம்பாள், கடந்தைநாயகி, அழகிய காதலி.


