திறப்பின் வாசல் ஜெபம்
💧 "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனோ ஒருக்காலும் தாகமடையான்; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள் நித்தியஜீவத்திற்குப் பொங்குகிற நீரூற்றாயிருக்கும்."
📖 யோவான் 4:14
🕊️ இயேசு கூறும் ஜீவத் தண்ணீர் என்பது பரிசுத்த ஆவியாரையே குறிக்கிறது. பரிசுத்த ஆவியார் நமக்குள் வாசம்பண்ணும்போது, நாம் நாளுக்கு நாள் மாம்ச இச்சைகளையும், பாவத்தையும் மேற்கொண்டு, பரிசுத்த வாழ்க்கையில் வளர்கிறோம். 🙏
❤️ பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட வாழ்க்கையே உண்மையான வெற்றியின் வாழ்க்கை. இன்று இயேசுவிடம் வாருங்கள்; அவர் தரும் ஜீவத் தண்ணீரைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
✨ கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக! 🙌 #jesus