Murugan
22. கேரளத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் காணாமல் போயுள்ளதாக முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். கேரளத்தின் பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு, கோட்டயம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்கள், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கேரள கன மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு #📺வைரல் தகவல்🤩 #🌀வானிலை தகவல்கள்🌨️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️ #🏕️மழைக்கால சுற்றுலா தளங்கள்☔