ShareChat
click to see wallet page
search
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ... செந்தில்பாலாஜி போன்ற மூத்த தலைவர்கள் "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என்று ஒரு மார்க்கமாகப் பேசி திமுகவை குளோஸ் செய்யாமல் விடமாட்டார்கள் போலத் தெரிகிறது. "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என்பது ஸ்டாலின் அடிக்கடி கூறும் ஒரு பிரபலமான பழமொழி. ஆதாரம் அல்லது உண்மை இல்லாமல், மனம் போன போக்கில் அல்லது பொறுப்பற்ற முறையில் எதையாவது பேசுவதை இது குறிக்கிறது. அதாவது செந்தில்பாலாஜி, "விஜய் நடத்தும் ஆட்சி மோசமாக இருக்கிறது" என்று மனம்போல விளாசியுள்ளார்! "இந்த ஆட்சி யாருக்கு மோசமாக இருக்கிறது?" என்பது மக்களின் கேள்வி! மதுபானக் கடைகளில் சட்டவிரோதமாக வசூலில் ஈடுபட்டு வந்த கும்பலுக்கா? அல்லது, ஆண்டாண்டு காலமாக தங்குதடையின்றி நடந்து வந்த குட்கா மற்றும் கஞ்சா வியாபாரம் சுமார் பத்து நாட்களாக கிட்டத்தட்ட சுத்தமாக நின்றுபோனதால், அந்த வியாபாரிகளுக்கா, யாருக்கு? செந்தில்பாலாஜி அத்துடன் நிற்கவில்லை. தமிழகத்தின் தற்போதைய சூழலில், ஆட்சி மோசமாக இருக்கிறது என்றும் சட்டம்-ஒழுங்கை முறையாகக் கையாளவில்லை என்றும் அரசின் நிர்வாகம் மிகவும் பின்தங்கி இருப்பதாகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 60 ஆண்டு காலம் சிறப்பாக இருந்த சட்டம்-ஒழுங்கு, விஜய் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் கெட்டுவிட்டதா? அதாவது, "பேஸ்மென்ட்" சரியில்லாமல் இருந்ததை தானாக முன்வந்து ஒப்புக்கொள்கிறார். பின்னே?திமுகவிற்கு அதற்காகத்தானே ஆப்படிக்கப்பட்டது? புதிய அரசு பதவியேற்றபின் முதல் கேபினட் மீட்டிங் நாளைதான், (5-6- 2026) நடக்கவிருக்கும் நிலையில் இவர் பேசுவதை வைத்து, ஆட்சிக்கு எதிராகச் திமுக திட்டமிட்டுச் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு வராதா? மேலும் அவர், தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், அரசின் மீதான தங்களின் நம்பிக்கை குறைந்துவிட்டதாக மக்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் திருவாய் மலர்தருளியுள்ளார்! ராசக்காபாளையத்துக்காரங்க இவரை லந்தடிக்க சொல்லி இருப்பாங்க. குறும்புக்காரங்க! சென்ற தேர்தலுக்குப்பின் (2021) பதவியேற்ற நாளிலேயே, தான் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் ஸ்டாலின் நிறைவேற்றினாரா? கடைசி வரை நிறைவேறாமல் போனது எத்தனை? மக்களுக்காக செந்தில்பாலாஜி பரிந்து பேசுவதைப் பார்த்தால் புல்லரிக்கிறது. இப்போது இவர் சொன்னதை வைத்து, யார் தற்குறிகள் என்று மக்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கியிருக்கும். இதில் ஹைலைட் என்வென்றால், தற்போதைய அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள மக்கள், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே விடிவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், தற்போதைய சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றால் திமுக 200 இடங்களை வெல்லும் என்றும் அவர் பேசியதுதான்! (ஒரு வேளை யாரையோ கிண்டல் செய்கிறோ?) "நுழலும் தன் வாயால் கெடும்" என்பது பழமொழி. பாவம், இப்போது அவர் திமுக பவர் சென்டர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டாரா? அதிமுக MLA க்கள் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்போது, திமுக அதை புறக்கணிக்க யோசித்து வருவதாக ஊடகங்களில் பேச்சு அடிபடுகிறதே! இவரும் ஆ. ராசாவும் பேசுவதை வைத்து, இருவரும் தேரை இழுத்து தெருவில் விடாமல் ஓயமாட்டார்கள் எனத்தெரிகிறது. இவர்கள் அதற்காகத்தான் அவசரப்பட்டு பேசுகிறார்கள் என்று கட்சி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. கொடிதிலும் கொடியது உட்பகை. தீ இன்னும் அணையவில்லை... கங்கு இல்லாமல் புகையுமா? #திமுக #ஸ்டாலின் #விஜய் #TVK #DMK #செந்தில்பாலாஜி #ராசா #உட்பகை #இடைத்தேர்தல் Have you subscribed to our channel? If not, please subscribe now. This is your channel! #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:05