அங்காளி
பார்த்து கொள்ளவாள்
பார்த்துக்கொண்டே உள்ளார்
#சிவசிவ.
#திருநாவுக்கரசு #சுவாமிகள் #தேவாரம்.
#திருப்பந்தனைநல்லூர்.
ஆறாம் திருமுறை பதிகம்
#பாடல்
கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
காரோணங் காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலை யின்மே லிருந்து
வாளரக்கர் கோன்தலையை மாளச் செற்றுப்
பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
#பொழிப்புரை
ஞானத்தை அடியார்க்கு வழங்குபவராய்த் தாமே ஞானவடிவாகி , நான்மறையும் ஆறு அங்கமும் எப்பொழுதும் ஓதும் நாவினை உடையவராய் , நாகை , குடந்தைக் காரோணங்களையும் நல்லூரையும் உகந்தருளியிருப்பவர் பந்தணைநல்லூர்ப் பெருமான் . அவர் கற்கள் நிறைந்த மதில்கள் மூன்றையும் அம்பு எய்து அழித்தவர் . வலிமை மிகுந்த அழகிய கயிலாய மலைமேலிருந்து கொடிய அரக்கர் மன்னனாகிய இராவணன் தலைகள் சிதறுமாறு கோபித்த அப் பெருமான் பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்தவர் . அவர் பைங்கண் ஏறு இவர்ந்து பணி ஏற்றவர் .
#திருச்சிற்றம்பலம்
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும்
#அர்ச்சனை #திருமுறை #விளக்கம்
மனிதர்களுக்குப் பல குறைகள் உண்டு. பல குறிக்கோள்களும் உண்டு. இவற்றையெல்லாம் அடைவதற்க்கு இறைவனின் திருவருள் வேண்டும்.
ஆகவே, இறைவனிடம் அந்த எண்ணங்களைச் சொல்லி அதை நிறைவேற்றுமாறு விண்ணப்பம் செய்து கொள்வதே அர்ச்சனையாகும்.
தமிழில் அர்ச்சனை செய்யலாம். முறையாக பார்த்தால், நமக்கு நாமே தான் அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஆனால், அதற்கும் ஒரு ஆள் வைத்து செய்கிறோம், அது பின்னாளில் வந்தது. நாமே செய்வது சிறப்பு.
அர்ச்சனை என்பது பாட்டேயாகும் என்பதை #சுந்தரர்பெருமான் வரலாற்றில் உணர்த்துவதாக #சேக்கிழார் மொழிகிறார்.
இறைவனைப் போற்றிப் பாடிவிட்டு நம் விண்ணப்பங்களையும் அதோடு சேர்த்து சொல்லுகிறோம். இதுவே அர்ச்சனையாகும்.
குறைகளும் குறிக்கோளும் உள்ள நாம் இறைவனிடம் விண்ணப்பம் செய்து அர்ச்சனை செய்கிறோம்.
இறைவன் தனக்கு என்று எந்த தேவையும் இல்லாதவன். அவனும் யாரிடமும் போய் எதையும் கேட்கும் அவசியமும் இல்லை. அப்படி என்றால், இறைவன் பெயருக்கு அர்ச்சனை செய்வது என்பது அர்த்தமற்றதாகும்.
நம்முடைய பெயைரை இறைவன் திருமுன் சொல்லி அவனைப் போற்றி, நம்முடைய விண்ணப்பங்களையும் அவனிடம் வைப்பதே அர்ச்சனையாகும். ஆகவே, அர்ச்சனை நம் பெயரைச் சொல்லியே செய்ய வேண்டும்.
இறைவனிடம் நமக்கு வேண்டியதைக் கேட்கும் போது நமக்கு சரி என்று தோன்றுவதைக் கேட்கிறோம். நம் ஆசைகளைச் சொல்கிறோம்.
ஆனால், நிஜ உலகில், அதுவே நமக்கு வேறு பிரச்சனைகளைக் கொண்டு வந்து தந்துவிடும். ஆகவே, நமக்கு என்ன சரியாக வேண்டும் என்பது பெரும்பாலும் நமக்கே தெரிவதில்லை.
நம்மைப் பற்றி நமக்குத் தெரிவதை விட முக்காலமும் முழுவதும் அறிந்த இறைவனுக்கு நமக்கு என்ன வேண்டும் என்பதும், நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும், நன்றாகவே தெரியும்.
ஆகவே, எனக்கு வேண்டியதை நீயே அறிவாய், அதை எனக்கு கொடுக்க விருப்பம் இருந்தால் அதைக் கொடுப்பா என்று இறைவனிடம் புத்திசாலிகள் வேண்டுவர்.
இதுவே #திருவாசகத்தில்
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!
#விளக்கம்
இறைவா, எனக்கு என்ன கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை நீயே அறிவாய். அப்படி நீ எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால், உன் விருப்பப்படியே அதை கொடுப்பா என்று கேட்பது மிகவும் சிறந்தது
#திருச்சிற்றம்பலம்
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் உனது ரத்தத்தை வைத்ததே உனக்காக தண்டனை தருவார் கடவுள் எத்தனை பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும்
அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும்
🙏ஓம் நமசிவாய
🙏ஐந்தெழுத்தின் மேன்மை
🙏திருமுறை.8 பதிகம் 26 அதிசயபத்து பாடல் 🙏
எண்ணி லேன்திரு நாம அஞ் செழுத்தும்
என்ஏழைமை யதனாலே
நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடு
நல்வினை நயவாதே
மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற்
கொருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற்கூட்டிய
அதிசயங் கண்டாமே.
இறைவனது திருநாமமாகிய ஐந்தெழுத்தை என் அறியாமையால் நினைக்கவில்லை அடியார்களோடு சேர்ந்திருக்கவில்லை நற்கருமங்களை விரும்பாமல் இம்மண்ணில் பிறந்து இறந்து மண்ணாவதற்கு இசைகின்ற அடியேனை, பெரியோனாகிய சிவபெருமான் ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.
திருச்சிற்றம்பலம்🙏
வாழ்க்கை பயணத்தில்,
சற்று திரும்பி,
பார்க்கும்போது தான்,
புரிகின்றது தெளிவாக,
மெல்லவும் முடியாமல்,
விழுங்கவும் முடியாமல்,
நம்மை கொன்ற,
நினைவுகள் எல்லாம்,
கானல்நீராய் கரைந்து,
போகுமென்பதை..
பாவங்களை மனிதருக்குச் செய்து விட்டு...
மன்னிப்பை மட்டும் கடவுளிடம் கேட்கும் அதிசயப் பிறவி நம் மனிதப் பிறவி தான்...
பிறருக்காக நம்மை மாற்றிக்கொள்ள .....
வேண்டிய
அவசியமில்லை...
இருப்பினும் நமது இயல்புகளுக்கே .......
இடையூறு ஏற்படும்
நிலையில்........
சிறிதளவு மாற்றிக்கொள்வது தவறில்லை.......
💚🌻💚🌻💚🌻💚🌻
வெளியே காட்டிய கோபம் #மன்னிப்புக்கு வழி தேடும்.....
உள்ளே அடக்கிய கோபம் #பழிக்கு வழி தேடும்.....
இல்லாதவர்களுக்குக்
#கொடுக்க ஆசை
இருக்கின்றவர்களுக்கு
இன்னும் #எடுக்க ஆசை.
#பணத்தைப் பார்த்துக் கொடு
#உணவைப் பார்க்காமல் கொடு
ஏனெனில் அடுத்தவனின் பசியைஉன்னால் #பார்க்கவோ #அறியவோ முடியாது.
🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #ஓம் நமசிவாய



