ShareChat
click to see wallet page
search
#nalaairam thiviya prabantham. திவ்ய பிரபந்தம்...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔵🟠🔴🟤🟣🟢🟡🔵🟠🔴🟤🟣🟢🟡🔵 *ஸ்ரீ:* *ஸ்ரீமதே ராமாநுஜாய நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 ❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡💛 *ஸ்ரீமத் வரவரமுநயே நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *பெரியாழ்வார் திருமொழி...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿 *பாசுரம்:151...!* வார்காது தாழப்பெருக் கியமைத்து மகரக் குழையிட வேண்டி சீரால் அசோதை திருமாலைச் சொன்னசொல் சிந்தையுள் நின்று திகழ பாரார் தொல்புக ழான்புது வைமன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன ஆராத அந்தாதி பன்னிரண் டும்வல்லார் அச்சுத னுக்குஅடி யாரே. *விளக்க உரை:* ***- வார் – உரிச்சொல். அந்தாதி- அந்தத்தை ஆதியாக உடையது, அன்மொழித்தொகை, வடமொழித்தொடர், தீர்க்கஸந்தி, அந்தாதியாவது – முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும அடியாயினும் அடுத்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது. சொற்றொடர் நிலைச்செய்யுள் பொருட்தொடர்நிலைச் செய்யுள் என்ற வகையில், இது சொற்றொடர்நிலை. “செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே” என்றார் தண்டியலங்காரத்தும். அச்யுதன் – (ஆச்ரிதரை) நழுவவிடாதவனென்றுமாம், (நிவ வயகி, நிவ வதெவெத வ த) திருநாமங்கள் பன்னிரண்டாதலால், பாசுரங்களும் பன்னிரண்டாயின பயனுரைத்த பாட்டு ஒன்று, அடிவரவு – போய் வண்ணம் வையம் வணம் சோத்தம் விண் முலை என் மெய் காரிகை கண்ணை வா வார் வெண்ணெயளைந்த, *🌹பாடல் என் :152 ஐ நாளை நாம் பார்க்கலாம்🌹* *🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏* *🙏ஓம் நமோ🙏* *🙏நாராயணா🙏* *தொடரும்...* 🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧
nalaairam thiviya prabantham. - srirangaminfo com srirangaminfo com - ShareChat