ShareChat
click to see wallet page
search
♦️இன்று 28.05.2026 🚩குறைகள் தீர்க்கும் குரு வார பிரதோஷம் கஷ்டமில்லாது பெற்றெடுத்த கஷ்டம் கொண்டு வாழ்கிறோம் கஷ்டப்பட்டு வாழும்போதும் துஷ்ட தனத்தில் ஆழ்கிறோம் இஷ்டக்கேடு நேரும்போது நஷ்டம் சொல்லி நடக்கிறோம் புஷ்டியோடு வாழ நாமும் இஷ்டங்கொண்டு மனதிலே நிஷ்டை செய்யும் கணத்திலே கஷ்டம் எல்லாம் மாற்றி நம்மை இஷ்ட தெய்வம் காக்குமே -இதை கஷ்டப்பட்டு உணர்பவர்க்கு நஷ்டம் என்பதில்லையே..I குரு வாரம் என்று சொல்லப்படும் பிரதோஷம் வருகிறது. இந்தப் பிரதோஷ நன்னாளில், சிவபெருமானை ஆத்மார்த்தமாக வேண்டுங்கள். பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்குங்கள். நம் குறைகளையும் கவலைகளையும் தீர்த்தருள்வார் சிவனார். 🌹பாவம் தீர தினமும் தியானம் செய்யுங்க! மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும்<<, யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும். செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், போகங்களில் சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும் தினமும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே தியானத்தை பழகினால், மனம் பாவங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களை நாடும் நிலை உண்டாகும். இதுவரை அநாவசியமாக எவ்வளவோ காலத்தை நாம் வீணடித்திருக்கிறோம். அதனால், தியானம் செய்வதை அன்றாட வாழ்வின் அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டும். வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பலருக்கும் தீமை செய்திருக்கிறோம். அந்தப் பாவங்களை எல்லாம் அதே வாக்காலும், மனதாலும், கை, கால் முதலியன கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிடும் நல்லெண்ணத்தை தியானத்தால் மட்டுமே பெற முடியும். மனிதன் வாழ்க்கையில் சில கட்டுப்பாடுக ளை வைத்துக்கொண்டால் அவனுக்கு நல்லது, கூடவே எல்லாருக்கும் நன்மை தான். முதலில் மனத்தை தூய்மையாய் வைத்துக்கொள்ளவேண்டும். எந்த சூழ்நிலையிலும் பிறருக்கு கெடுதல் நினைக்கக் கூடாது. சிலர் கோபம் வந்தால் பிறரை கொலை செய்யக்கூட அஞ்சமாட்டார்கள். அந்த மாதிரியான எண்ணங்களுக்கு இடம் அளிக்கக்கூடாது. சிலபேர் பிறர் பணத்தை எப்படியாவது அபஹரணம் செய்யக் காத்துக் கொண்டேயிருப்பார்கள். அது ஒரு தப்பான எண்ணம்தான். அம்மாதிரியான எண்ணம் என்றும் வரக்கூடாது. சிலபேர் பொய் பேசியே காரியத்தை சாதிக்க நினைப்பார்கள். அது தவறு என்று சாஸ்திரம் கூறி ‘ஸத்யமே பேசு’ என்று உபதேசம் அளிக்கிறது. தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒரு நல்ல எண்ணம்தான். அந்த தானத்தை தன் சக்திக்கு ஏற்றவாறு, காலம், தகுதி ஆகியவை அறிந்தே செய்வதுதான் நல்லது. சிலபேர் மற்றவரின் விஷயங்களில் வீண் வம்பு பேசுவதை மிகவும் விரும்புவார்கள். இம்மாதிரி வீண்வம்புகளில் ஈடுபடாமல் இருப்பது ஒரு நல்ல குணமாகும். ஆசை என்பது கடல் அலைபோல்தான். வளர்ந்தால் ஒரு பொழுதும் முடிவு இருக்காது. அமைதியான மனத்துடன் இருக்க விரும்புபவன் தீராத ஆசைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. தன் குருவை எப்பொழுதும் சேவித்துக் கொண்டு அவருடைய உபதேசத்தை எப்பொழுதம் மனனம் செய்து கொண்டு, அனைத்து ஜீவராசிகளுடன் அன்புடனும், தயவுடனும் இருந்து வாழவேண்டும். இவ்வித வாழ்க்கையை நடத்தி, அனைவரும் சௌக்கியமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் பிரதோஷ காலம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்தக் காலத்தில் தான் பூஜைகள் நடைபெறும். பிரதோஷத்தன்று சிவபூஜையில் கலந்து கொண்டு தரிசிப்பதும் சிவநாமம் சொல்லி வழிபடுவதும் பாவங்களைப் போக்கி புண்ணியத்தைத் தந்தருளும் என்பது ஐதீகம். வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். குருவார வியாழக்கிழமையில், பிரதோஷநாளில், சிவனாரை நினைத்து வீட்டில் விளக்கேற்றுங்கள். சிவ ஸ்துதி பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் சொல்லி வழிபடுங்கள். பிரதோஷ நாளில், பசுவுக்கு உணவளிப்பதும் அகத்திக்கீரை வழங்குவதும் வீட்டு தரித்திரத்தை விலக்கும். கடன் முதலான பிரச்சினைகள் தீரும். நமசிவாயம் சொல்லி, சிவனாரை வணங்குங்கள். எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குறைகள் அனைத்தும் நீங்கப் பெறுவீர்கள். #ஓம்_சிவாய_நமஹ #சிவ_சிவாய_நமஹ .... #பிறவாமை_அருள்வாய் #பிரதோஷ_நாயகா.... #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
00:38