காலை சிவசிந்தனை
=====================
நித்யமான சிவம்
================
யதா³(அ)தமஸ்தான்ன தி³வா ந ராத்ரிர்ன ஸன்ன சாஸச்ஶிவ ஏவ கேவல꞉ |
தத³க்ஷரம் தத்ஸவிதுர்வரேண்யம் ப்ரஜ்ஞா ச தஸ்மாத்ப்ரஸ்ருதா புராணீ ||
- ஶ்வேதாஶ்வதரோபநிஷத்
"எப்போது இருள் உளதாய்ப் பகலுமின்றி இரவுமின்றிச்
சத்துமின்றி அசத்துமின்றி இருந்ததோ, அப்போது சிவன் ஒருவரே இருந்தார்; அந்தச் (சிவ) சூரியனுடைய அந்த அழியாத
முக்கியப்பொருளாகிய பிரஞ்ஞை எனப்படும் பராசத்தி
உதித்தார்'' என்று சுவேதாசுவதரமும் கூறுமாற்றால், இருக்கு
வேதத்திலே ஏகம் எனக் கூறப்பட்டது சிவபெருமான் என்றும்,
அவரினின்று பின்னர்த் தோன்றியவர் பராசத்தி என்றும் பெறப்படுகின்றது. (அஃதாவது சந்திர சூரியரொளியெல்லாம் ஒழித்து,
பகலிது இரவிது எனப் பகுத்தலில்லாத சூனியமாய், நாமரூப
விசேஷமின்றி, ஸ்தூல சூக்கும சேதநாசேதனமாகிய (சத்து)
பசு, (அசத்தின்) பாசத்தின் வியக்திநிலையற்று, ஈதெல்லாம்
இருண்மயமாயிருந்த அந்தக் காலத்திலே அந்தச் சிவபிரானார்
அத்துவிதீயராய், கேவலராய், சிவப்பிரகாசராய்த் தம்மினின்று
பகுக்கப்படாத வியல்படைந்த சேதனாசேதனச் சத்தியோடுளராயினர் என்பதாம்.)
"இருநில னதுபுன லிடைமடி தரவெரி புகவெரி யதுமிகு
பெருவெளி யினிலவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவ னினமலர்
மருவிய வறுபத மிசைமுரன் மறைவன மமர்தரு பரமனே"
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருமறைக்காட்டு தேவாரம்.
"பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே."
திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #சிவன் பக்தி #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள்



