ShareChat
click to see wallet page
search
சர்ச்சைக்குரிய சங்கியான டி.கே. சிவகுமார் காங்கிரசின் முதல்வரா? இவர் காங்கிரசின் நற்பெயரை காப்பாற்றுவாரா? இல்லை எல்லாம் கைமீறிப் போகுமா? என்பது தற்போது பெரும் விவாதமாகியுள்ளது. குணாம்ச ரீதியில் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் நேர் எதிரானவர்கள். சித்தராமையா பொதுச் சமூகத்தின் பெரு மரியாதைக்குரியவர். அடிப்படையில் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதி. முற்போக்கு பார்வை கொண்ட சோசலிஸ்ட். சமூக நீதி, மதச் சார்பின்மை ஆகியவற்றில் அழுத்தமான பற்றுள்ளவர். அதே சமயம் கடவுளை நம்பிக்கையை இழிவாக பேசமாட்டார். சித்தாந்த ரீதியில் தெளிவான பார்வை கொண்டவர் சித்தராமையா. நிர்வாக ஆற்றலாலும், நேர்மையாலும் சகல தரப்பிலும் நன்மதிப்பு பெற்றவர்! டி.கே.சிவகுமார் இந்தியாவின் மிகப் பெரும் பணக்கார அரசியல்வாதி. மாணவப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ் முகாமில் வளர்ந்த வகையில் தற்போதும் மூட நம்பிக்கைகளில் ஊறித் திளைப்பவர். தப்பித் தவறி கூட மதச் சார்பின்மை, சமூகநீதி ஆகியவற்றை உச்சரிக்கமாட்டார். தன்னுடைய ஜோதிடரும், ராஜகுருவுமான துவாரகநாத் கட்டளையை எப்போதும் மீறாதவர். முதலமைச்சர் பதவி ஏற்புக்கு முன்பே வேள்வி, யாகங்கள் நடத்தி தயாராகிக் கொண்டார். அவர் உட்காரும் முதலமைச்சர் நாற்காலிக்கே சிறப்பு பூஜை செய்யப்பட்ட பிறகே அமர்ந்தார். முதலமைச்சர் பதவி ஏற்பு மேடையிலேயே தான் கும்பிடும் சாமியார் படத்தை வைத்ததோடு அவர் பெயரில் தான் உறுதிமொழி ஏற்றார். இவரது பதவி ஏற்பில் 30க்கு மேற்பட்ட மடாதிபதிகள் வந்திருந்து ஆசி வழங்கினார்கள். விதான் செளதாவிற்குள் நுழையும் போது சாஷ்டாங்கமாக தரையில் வீழ்ந்து வணங்கினார். மொத்தத்தில் ஒரு பாஜக முதல்வர் பதவி ஏற்பை போலவே சிவகுமாரின் பதவி ஏற்பும் நிகழ்ந்தது. இவர் முதல்வர் ஆவதற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் லாபியும் பலமாக இருந்தது என்பது புதிய செய்தியல்ல. கோவில் கோவில்களாக செல்வதாலும், மடாதிபதிகளை தேடிச் சென்று ஆசி பெறுகின்ற தீவிர பக்திமான் என்பதாலும் இவரை சாது என மதிப்பிட முடியாது. அதிரடி அரசியல்வாதி. குவாரி பிசினஸ்சில் கொடி கட்டி பறப்பவர். சட்ட அத்துமீறல்களுக்காக கைதாகி திகார் சிறையில் கைதியாக இருந்தவர். ஏற்கனவே ஒரு முறை அமைச்சராக இருந்த போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். குடிப் பழக்கம் உள்ளதை மறைக்காமல் பொதுவெளியிலேயே தள்ளாடி நடந்து வருவார். நிர்வாக அறிவில் நிகரற்றவர் அல்ல. ஆனால், அரசியல் டீலிங்கில் இவரை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. டி.கே.சிவகுமார் முதல்வராகி சித்தராமையா கட்டிக் காப்பாற்றிய மரியாதையை தக்க வைப்பாரா? நேர்மையான நிர்வாகத்தை தருவாரா? குறைந்தபட்சம் கெட்ட பெயர் உருவாகாத வண்ணமாவது நடந்து கொள்வாரா? என்பதற்கு இன்று வரை யாராலும் உத்திரவாதம் தர முடியாது. பிறகு ஏன் இவரை முதலமைச்சர் ஆக்கினார்கள்? என்பதை அறம் இணைய இதழில் எழுதியுள்ளேன். அதன் இணைப்பை கீழே பின்னூட்டம் பகுதியில் அறம் வாட்ஸ் அப் சேனலில் தந்துள்ளேன். இதில் இணையதவர்கள் உங்களை இணைத்துக் கொள்ளலாம். அறம் இணையத்தில் நான் எழுதுவதையும், முக்கிய ஆளுமைகள் எழுதுவதையும் நீங்கள் விருப்பப்படும் நேரங்களில் சென்று வாசிக்கலாம். பழைய கட்டுரைகளையும் பின்னோக்கிச் சென்று வாசிக்கலாம். கர்நாடக அரசியலில் நடந்தது அதிகார மாற்றமா? ஏமாற்றமா? சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - Nel Nel - ShareChat