ShareChat
click to see wallet page
search
ஒருமுறை பகவான் சந்நிதியில் நாயனாவும், இன்னும் சில பண்டிதர்களும் பகவானிடம் சமஸ்கிருதத்திலேயே சாஸ்திர சம்பாஷணை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது சாது நடனானந்தாவும் உடன் இருந்தார். சதஸ் போன்று இருந்தது. மிக உன்னதமான விஷயங்கள் சிலாகிக்கப்பட்டு பேசப்பட்டது. சாது நடனானந்தர் தன்னால் ஒரு வார்த்தை கூடப் புரிந்து கொள்ள இயலாததை எண்ணி மனம் வருந்தினார். அவருக்கு சாதனையில் இருந்த மலைப்பு, தன்னுடைய இயலாமை எல்லாம் சேர்ந்து ஆத்ம ஞானத்திற்கு தான் தகுதியுடையவன் இல்லை என மனம் வெதும்பி அயர்ச்சியுற்றார். அமைதியாகக் கண்களை மூடிக்கொண்டார். கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியது. துடைக்கவும் மனம் இல்லை. விரக்தியால் கண்ணை மூடியபடியே இருந்தார். நேரம் கழிந்தது. கண்களைத் திறந்தபோது பகவான் மட்டுமே அமர்ந்திருந்தார். அனைவரும் விடைபெற்றுச் சென்றிருந்தனர். பகவான் சாது நடனானந்தரைக் கருணையோடு பார்த்தார். "எதுக்கு விசனப்படனும்? நீ உண்மையிலேயே ஆத்ம ஞானத்திற்கு தகுதியா இல்லைன்னா இதுகிட்டே நீ வந்திருக்க முடியாது. "எது உன்னை இங்கே கூட்டிவச்சதோ அதே ஆத்ம ஞானமடைய வைக்கும். “இன்னைக்கு இல்லேன்னா நாளைக்கு. "அதோட வேலையை அது தவறாம பாக்கும்” என்றார். 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பகவான் ரமணர் - ShareChat