Eswaran V
#இன்றைய சிந்தனை சிந்தனை"..*💐
31.07.20260
................................
''உடலே மூலதனம்''
................................
மனிதனாக பிறந்தவர்களின் உயர்ந்த நோக்கமே உடல், மனம், மூளை, ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கிச் செல்வதே நமது தலையாய நோக்கம் .,
ஆகவே தான், உடலை வைத்தே உலக வாழ்க்கை அமைந்து இருக்கிறது என்ற உண்மையை நம் முன்னோர்கள் சொல்லி சென்று உள்ளனர்..
அதனால்தான் நமது உடல் நமக்கு கிடைத்த பெரும் மூலதனம் என்று மகிழ்ந்த நம் முன்னோர்களின் ஒப்பற்ற அறிவை எண்ணிப் பாருங்கள்.
''மூலதனம்'' என்பது முதல்..
'முதல்'' என்பது பொருள்.
அந்தப் பொருளைத்தான் உடல் என்றனர்.
நமது உடலை அக்கறையுடன் பராமரிக்காவிடில் உறுப்புகள் பழுதாகி விடும். அல்லது உடல் தன் இயக்கத்தையே நிறுத்தி விடக் கூடும்.
எனவே, நம்மால் முடிந்தவரை,நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..
பசித்த பின் புசிப்பது, ஆரோக்கியத்திற்கு ஆகாத வற்றைப் புறந் தள்ளுவது, உடல் உழைப்பு, ஆழ்ந்த உறக்கம், பரபரப்பற்ற அமைதியான உள்ளம்ஆகியவை சீரான உடல் இயக்கத்திற்கு முக்கியம்.
ஒருநாள் காலை நேரம் சிந்தனையாளர் டால்ஸ்டாய் நடந்து போய்க் கொண்டு இருந்தார்.
எதிரே ஒரு இளைஞன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தான். உடனே அவர் சென்று அவனைத் தடுத்து நிறுத்தினார்.
"எதற்காக இப்படிச் செய்கிறாய்?'' என்று கேட்டார் டால்ஸ்டாய்.
"ஐயா... நான் ஏதாவது தொழில் செய்து பிழைக்கத்தான் ஆசைப்படுகிறேன்ஆனால் அதற்கு மூலதனமாக என்னிடம் எதுவும் இல்லையே? வறுமை வாட்டுகிறது
தற்கொலை செய்து கொள்வது தவிர எனக்கு வேறு வழி தெரிய வில்லை''என்றான் அந்த இளைஞன்.
உடனே டால்ஸ்டாய்,
"நான் உனக்கு நூறு ரூபிள் தருகிறேன். ('ரூபிள்', ரஷ்ய நாட்டுப் பணத்தின் பெயர்.) அதற்குப் பதிலாக உனது ஒரு விரலை மட்டும் தருவாயா?'' என்றார் டால்ஸ்டாய்.
"ஒரு விரலா! அது முடியாது.''
"சரி, நூறு ரூபிள் தருகிறேன்... ஒரு கண்ணைத் தருவாயா?''
"ஒரு கண்ணா! இதுவும் முடியாது.''
"அப்படியென்றால் ஆயிரம் ரூபிள் தருகிறேன். இரண்டு கால்களில் ஒன்றை மட்டுமாவது கொடு.''
இளைஞன் கோபத்தோடு சட்டென்று சொன்னான்,
"எதுவும் என்னால் கொடுக்கமுடியாதுஉங்களுக்குஎன்ன பைத்தியமா?'' என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தான்.
அப்போது டால்ஸ்டாய் சிரித்துக் கொண்டே,
"தம்பி... இங்கே வா. உன்னிடம் விலை மதிக்க முடியாத உடல் உறுப்புகள் இருக்கின்றன என்பதை இப்போது நீ புரிந்து கொண்டாயா?
இதுதான் மூலதனம்.இதை நன்றாகப் பராமரித்துப் பயன்படுத்து. நீ விரைவிலேயே செல்வந்தனாவாய்'' என்றார்.
அப்பொழுதுதான் அந்த இளைஞன் தனது உடம்பின் மதிப்பை உணர்ந்தான்.
ஆம்.,நண்பர்களே..
ஆரோக்கியம் என்பது விலை கொடுத்து வாங்க முடியாதது. அதனை இழந்தபின்தான் பலரும் அதன் அருமையை உணர்கிறார்கள்.
இப்போதே உணர்ந்து அற்புதமான நமது உடலைப் போற்றுவோம்! ஆரோக்கியமாகவாழ்வோம்............
💐