⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
சிவ சிவ
நமசிவாய வாழ்க
சிவத்தை யாரால் உணர முடிகின்றது??
==================================
மனித உடல் கொண்டு பூமியில் வாழும் இந்த வாழ்க்கையில், ஓருவர் எந்த நிலையில் இருந்தாலும் சரி…
எல்லாம் ஒருநாள் “சாம்பலே” என்ற நியதியை திடமாக மனதில் நிறுத்தி வாழ்வோருக்கே மாயத்திரை விலகும், இறைவனிடம் தங்கள் மனதையும், உடலையும் சமர்ப்பிக்கும் புண்ணிய வரமும் அருளப்படும்.
அவ்வாறு எண்ணம் கொண்டு வாழப்பெறும் ஆத்மாக்கள் தங்களை வெறும் சாம்பலாக ஆக்காமல்… கங்காளன் பூசும் “திருச்சாம்பலாக” தங்களை ஆக்கிக்கொள்ளும் வாய்ப்பும் நல்கப்படுகின்றது.
இந்த உன்னத நிலையை அடைவதற்க்கு, ஒருவருக்கு சிவகடாட்சமும், சிவத்தை உணர வேண்டியதும் அவசியம் ஆகின்றது. சரி சிவத்தை எல்லோராலும் உணர முடிகின்றதா என்றால்? இல்லை என்பதே பதில்!! அவரவர் ஆன்மாவின் இறைநிலை தகுதிக்கேற்ப்ப அமைகின்றது..
புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டுமே சிவத்தை தங்களுக்குள் உணரும் பேரு அருளப்படுகின்றது.
சிவத்தை தங்களுக்குள் உணர முற்படும் ஆத்மாக்களின் செயல் மிக முக்கியமானதாக அமைகின்றது. சிவத்தை உணர……
சிவ சுகத்தை அனுபவிக்க சில முக்கிய நிலைப்பாடுகள் கீழே பதிவிடப்பட்டுள்ளது..
********************************************
# சகலலோகங்களுக்கும் ஒரே ஒரு “கடவுள்” என்பதை மனதில் நிலை நிறுத்தம் செய்தல் வேண்டும். அந்த கடவுள் “சிவபெருமானே” என்ற மெய்யை புரிந்து கொள்ளக்கூடிய பக்குவ நிலையை எத்த முயற்சிக்க வேண்டும்.
********************************************
# இறைவனது நியதியானது, தம்மால் படைக்கப்பட்ட ஒரு ஆத்மா, தம்மை நோக்கி அன்பால் ஒரு அடி பாசாங்கில்லாத தன்மையுடன் எடுத்து வைத்தால் சிவபெருமான் ஆயிரம் அடிகள் அந்த ஆத்மாவை நோக்கி வந்துவிடுகிறார். இதனை பல அடியார் பெருமக்கள் உணரப்பட்டிருக்கின்றார்கள்.
********************************************
# எந்த வேண்டுதலோ/ கோரிக்கைகளோ இல்லாமல், பெருமான் குடி கொண்டுள்ள திருக்கோவிலுக்கு சென்று பெருமானின் அழகை கண்குளிர.. மனம்குளிர அனுபவித்து, பெருமானோடு மனதால் உரையாடுதல் வேண்டும். இது போன்ற எதிர்பார்ப்பில்லாத மனதுடன் செய்யப்படும் இந்த இறை சந்திப்பானது, மனதிற்க்கும், உடலுக்கும் அமைதியுடன் கூடிய உற்சாகம் கிடைக்கும். தொடரும் இந்த இறை சந்திப்பானது சிவத்தை உணர ஒரு அச்சாரமாக இருக்கும் என்பது சிவத்திண்ணம்.
********************************************
# என்னதான் ஒருவரது வினைப் பயனானது பெருமானின் நினைவு வராமல் தடுத்தாலும், அந்த ஆன்மா மனதில் கடுகளவேனும் சிவத்தை பற்றி எண்ணினாலே போதும், சிவபெருமான் தன்னை உணரும் தன்மையை(அழைப்பை) அந்த ஆன்மாவிற்க்கு வழங்கி விடுவார். அந்த சிவ அழைப்பானது ஒருவருக்கு அவரது குடும்பத்தினர் மூலமாகவும், அல்லது நண்பர்கள் மூலமாகவும், சிலசமயம் யாரென்றே தெறியாதவர் மூலமாகவும் வரும்…. அந்த அழைப்பை சிக்கென பிடுத்துக்கொண்டால் சிவபுரம் செல்லும் பாதை தெரியத் தொடங்கிவிடும்.
********************************************
# சில அஞ்ஞானிகள் சிவபெருமானை சோதனைக் கடவுள் என்று சித்தரித்து விட்டிருக்கின்றார்கள். ஆனால் நிஜத்தில் பெருமான் குழந்தை மனம் கொண்டவர். எல்லா உயிர்களையும் தம் உறவாகவே மதிப்பவர். கருணையே வடிவாகி அன்புக்கரம் நீட்டி அணைத்துக் கொள்ள காத்திருப்பவர். மங்கலங்களை அள்ளித்தரும் பெரும் வள்ளல்… மெய்யடியார் யாவரும் இதனை அனுபவித்து கொண்டிருப்பவரே…
********************************************
# மாயச் சக்கரத்தால், படைப்புகளை கடவுள் என்று எண்ணி வாழ்வோரும், சிவத்தை பிறதெய்வங்களோடு ஒப்பிட்டு வணங்குவோரும், நேரத்துக்கு ஒரு கடவுளை நினைப்போரின் எண்ண ஓட்டங்கள் சிதறியே கிடக்கின்றது. அந்த படைப்பை வணங்கினால் பணம் வரும்… இது நல்ல சக்திவாய்ந்த படைப்பு இதனை வணங்கினால் நினைத்தது நடக்கும்… இதற்க்கு இந்த பரிகாரம் செய்துவிடுங்கள்… இது போன்ற குறுகிய வட்டத்துக்குள் சுழன்று கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு மனநிம்மதி என்ற ஒன்றே உண்மையில் இருப்பதில்லை.
வேண்டும் என்றால் நிம்மதியா இருப்பதாக காட்டிக்கொள்ளலாம்… இவ்வரிகளில் குறிப்பிட்ட அத்துனை நிலைகளும் சிவ பெருமானை நினைக்க/உணர தடையாய் நிற்பவைகள்.
மனித உடல்கொண்டு இப்புவியில் வாழும் காலத்திலேயே சிவத்தை உணர்வோம்// உணர முயற்சிகள் செய்துகொண்டே இருப்போம்…
சிவபெருமானே எல்லாம் என்று எண்ணி வாழ்வோம்!!!
சிவத்தை அடைவோம் !!
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏🏼ஓம் நமசிவாய #🪷ஆடி செவ்வாய்🕯️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻