#நல்லதே பேசு நல்லதே நினை சட்டக் கல்லூரி சேர்க்கை: மாணவருக்கு உதவிய முஸ்லிம் மக்கள் கழக சமூகப் போராளி நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன்
திருப்பதி,
இன்று (04.06.2026) வியாழக்கிழமை காலை 9 மணி அளவில், திருப்பதி ரேணுகுண்டாவில் அமைந்துள்ள அஞ்சு மேடு ஸ்ரீ ஈஸ்வர ரெட்டி சட்டக் கல்லூரிக்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூக போராளி நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் நேரில் வருகை தந்தார்.
திண்டிவனத்தைச் சேர்ந்த ஆ. அன்வர் பாஷா என்ற மாணவர் சட்டப் படிப்பில் சேர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர் கல்லூரிக்கு அழைத்து வந்தார். மாணவரின் கல்வி முன்னேற்றத்திற்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிய சமூகப் போராளி முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள், உயர்கல்வி மூலம் இளைஞர்கள் சமூகத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் திண்டிவனத்தைச் சேர்ந்த பா. அலாவுதீன் உடனிருந்தார். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வரும் முஸ்லிம் மக்கள் கழகத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.


