ShareChat
click to see wallet page
search
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை பதினொன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.06.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ------------ குழந்தை வைகுண்டர் குமாரப் பிராயமட்டும் கோலா கலனாய்க் குருவாய்ச் சமையுமட்டும் நாலாஞ் சொரூபம் நடத்தும்வரை தெச்சணமே பொல்லாதெல் லாமழிந்து பூவர்கொலு வாகுமட்டும் எல்லா வழக்கும் இருப்புந்தெச்ச ணாபதயே . விளக்கம் ----------------- ஆத்மீகக் குழந்தையாகப் பிறந்த வைகுண்டர் தம் ஆத்மா வளர்ந்து குமாரப் பிராயம் அடைந்து கோலாகலனாய்க் குருவாக உருவாகும்வரையும் தம்முள்ளே நாலுவகைப் பிறப்புச் சொரூபமாகிய சுபேச்சை விசாரணை, பொல்லாதவற்றை எல்லாம் அழித்து மக்களைப் பூரணமான நிலை அடையச் செய்வதுவரையும் உள்ள எல்லா வாழ்க்கையும் தெச்சணாபூமியிலே நடக்கும் என்றும் வியாகர முனிவன் ஈசுரரிடம் எடுத்துரைத்தார். . . அகிலம் -------------- ஆதியி லுதித்த வாறும் அரன்சிவன் பிறவி வாறும் ஓதிய யுகங்கள் வாறும் ஒவ்வொரு அசுரன் வாறும் நீதிய மனுக்கள் வாறும் நீதமாங் குண்டர் வாறும் தீதிலாத் தர்ம ஞாயச் சிறப்புட வாறுஞ் சொன்னான் . விளக்கம் --------------- ஆதியின் முதன்முதலில் தோன்றியவை பற்றிய வரலாறும், அரனும் சிவனும் பிறவி எடுத்த வழியும், ஆறு யுக விளக்கமும், அந்த யுகத்தில் தோன்றிய ஆறு அசுரர்களின் அழிவு பற்றியும் நீதி நெறியுடைய சான்றோர்களின் வழி முறைகள் பற்றியும் நீதிக்கு அரசனாகிய வைகுண்டர் தோன்றிய வரலாறு பற்றியும் எத்தகைய தீமையும் இல்லாத நீதி நியாயமான சிறந்த தரும யுகம் தோன்றும் முறை பற்றியும் ஆறு வழிமுறைகளை வியாகர முனிவன் எடுத்துரைத்தான். . அகிலம் ------------- தெச்சணாபூமி வளம் -------------------------------------- இவ்வாறு எல்லாம் எடுத்துமிக மாமுனிவன் அவ்வாறெல் லாமுரைத்து அகன்றனன்காண் மாமுனிவன் துதிகொடு தன்னால் சிவகோ வேங்கிரியில் பதியச் சிவமும் பதியென்றா ரன்போரே நந்தீ சுரரும் நாட்டினா ரவ்வுரையை . விளக்கம் ----------------- வைகுண்டரே, இவ்வாறு வியாகரமுனி ஈசரிடம் உரைத்து விட்டு, விடை பெற்றுச் சென்றான். ஈசர் தம்மைத் துதித்துக் கொண்டிருக்கின்ற நந்தீசுரரிடம் கயிலை மலையில் வியாகரமுனிவரின் மொழிகளைப் பொறிக்கச் சொன்னார். அப்படியே அவரும் அம்மொழிகளை அங்கே பொறித்தார். . அகிலம் --------------- இந்தப் பழமொழிபோல் இசைந்தப் புவிமகிமை தெச்சணா பூமி சிவபூமி நல்லதுதான் மிச்சம் வியாகர் முன்மொழிந்த துவுமிது ஆனதா லிப்பூமி ஆகுந் தவசிருக்க கோனாங் குமரி குடியிருக்கு மிந்நகரு சங்குத் துறைமுகத்து சதாகோடி யற்புதங்கள் . விளக்கம் ---------------- சுவாமி வியாகரர் கூறிய முந்தைய மொழியைப் போன்ற மகிமை பொருந்தியது இந்த சிவபூமி. மேலும், வியாகரமுனி ஏற்கெனவே, நீவிர் தவம் புரிவதற்குரிய பூமி பற்றிக் கூறிச் சென்ற இடமும் இதுவே. எனவே, தாங்கள் தவம் புரிவதற்குச் சிறந்த பூமி இதுவே ஆகும். இப்பூமியில் மக்களை அரசாட்சி புரியும் குமரிப் பகவதி வாழ்ந்து வருகின்றாள். இங்குள்ள சங்குத் துறை முகத்தில் பல போடி அற்புதக் காட்சிகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. . அகிலம் ------------- எங்கு மகிழ இயல்புபெற்ற திந்நகரு மங்கைப் பதிநகரு மணவைப் பதிநகரு கங்கைக் குலநகரு கண்ணாளர் தன்னகரு பஞ்சவர்க ளஞ்சு பார்மன்னர் தன்னகரு சஞ்சீவி தன்னகரு தவத்தோர்க் குருநகரு தெய்வகுல மன்னர் சிறந்தக் குருநகரு சைவ முனிமார் தவத்துக் கிதுநகரு மேலோகக் காட்சி விளங்கிருக்கு மிந்நகரு . விளக்கம் ---------------- எல்லா மக்களும் மகிழ்ந்து வாழுகின்றதும், கற்பு நிறைந்த பெண்கள் வாழ்ந்து வருகின்றதும், மணவைப்பதி அமைந்து இருப்பதுவும், கங்காதேவியின் குல மக்கள் வாழ்ந்து வருவதும், கண்ணனார் வாழ்ந்து வந்ததும், பஞ்ச பாண்டவர்க்ள ஐந்துபேரும் வாழ்ந்து வந்ததும், சஞ்சீவி மூலிகை வளருகின்றதும், தவம் புரிவோருக்கு மேன்மை பொருந்தியதும், தெய்வக் குல மன்னர்களாகிய சான்றோர்கள் சிறந்து வளருகின்றதும், சைவ முனிவர்களுக்குத் தவத்துக்குச் சிறந்ததும், வான லோகங்களில் உள்ள சிறப்பான காட்சிகளைக் கண்டு களிக்க விளங்கிக் கொண்டிருப்பதும் இந்தத் தெச்சணாபூமியே ஆகும். . . தொடரும்... அய்யா உண்டு.
அய்யா வைகுண்டர் - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா எளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே தாழக் கிடப்பாரைத் தற்காப்ப தேதருமம் மாளக் கிடப்பார் மதத்தோர்க ளென்மகனே னத்துக் கினங்கள் இருப்பேனான் சுவாமியென்று மனதில் வேறெனவே வையாதே யென்மகனே ! அய்யா ! DMuthu Prakash 09.06.2026 IguGsi | வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா எளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே தாழக் கிடப்பாரைத் தற்காப்ப தேதருமம் மாளக் கிடப்பார் மதத்தோர்க ளென்மகனே னத்துக் கினங்கள் இருப்பேனான் சுவாமியென்று மனதில் வேறெனவே வையாதே யென்மகனே ! அய்யா ! DMuthu Prakash 09.06.2026 IguGsi | வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி - ShareChat