#✡️ஜோதிட பரிகாரங்கள் #📅பஞ்சாங்கம்✨ #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #✡️தோஷ பரிகாரங்கள் #🧿வாஸ்து குறிப்புகள்🔯 மேரு தரிசனம்
ஸ்ரீ சக்கரத்தின் முப்பரிமாண வடிவம் மாமேரு ஆகும்.
திருச்சி திருவானைக்கோயில் பஞ்சபிரகாரத்தில் திகழும் மாமேரு சித்தர்களால் ஸ்ரீபஞ்சமுக பைரவ மாமேரு என்று அழைக்கப்படுகிறது.
பஞ்சமுக விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் மூர்த்திகளைப் பற்றி நாம் அறிவோம். பஞ்சமுக பைரவ மூர்த்தியின் தரிசனத்தை திருவானைக்கோயில் பஞ்சபிரகாரத்தில் பெறலாம்
திருச்சி அருகில் பெருங்குடி திருத்தலத்தில் திகழும் விருத்த சீர மாமேரு ஸ்ரீஅடிப்பேணு பெருந்துறை மாமேரு என்று அழைக்கப்படுகிறது.
இந்த மாமேருவை அடி பிரதட்சணமாக வலம் வந்து, பெருங்குடி சிவத்தலத்தை சுற்றி வந்து, மீண்டும் மாமேருவை வலம் வந்து வணங்குவது சிவ பதவியைப் பெற்றுத் தரும்
முப்பரிமாண ஸ்ரீசக்கர மேருவை நாம் திருவிடைமருதூர் திருத்தலத்தில் மூகாம்பிகை சன்னதியில் தரிசனம் செய்யலாம். கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்: மூலவர் சன்னதிக்கு மேல் கூரையில் ஒரே கல்லால் செய்யப்பட்ட ஸ்ரீ சக்கர மகா மேரு பொறிக்கப்பட்டுள்ளது
காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வடசென்னை காளிகாம்பாள் கோயில், குற்றாலம் ஸ்ரீ சங்கர மடம், ஆவுடையார் கோவில் மூலஸ்தானம், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், சென்னை, மாடம்பாக்கத்தில் 'ஸ்ரீ சக்ர மகாமேரு பதினெண் சித்தர்கள் சக்தி பீட பிருந்தாவனம்', கேரளா மாவேலிகரை கண்டியூர் மகாமேரு ராஜராஜேஸ்வரி கோயில் ஆகியன மகா மேரு இருக்கும் சில ஆலயங்களாகும்
ஏற்காடு லூப் சாலையில் உள்ள நாகலூர் கிராமத்தில், லலிதா திரிபுரசுந்தரி கோயிலில் உலகின் மிகப்பெரிய ஸ்ரீ சக்ர மகா மேரு உள்ளது. இது வெள்ளை பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.


