இன்று மதுரையை கலக்கும் இரண்டு பாடல்கள்:திருவிழா வந்துவிட்டாலே மதுரை நகரெங்கும் இந்த இரண்டு பாடல்கள்தான், ஒன்று பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி, இன்னொன்று வாராரு வாராரு அழகர் வாராரு என்ற இரண்டு பாடல்கள்தான். சில வருடங்களுக்கு முன்பு வந்த தேவராட்டம் படத்தில் மதுரை பளபளக்குது மல்லியப்பூ மணமணக்குது என்ற ஒரு பாடலும் வந்தது, இந்த பாடல் எந்த அளவு இந்த சித்திரை விழாக்களில் ஒலிக்க விடப்படுகிறது என தெரியாது, ஓரளவு ஓக்கே. ஆனால் பல வருடமாக மேலே முதலில் சொன்ன இந்த இரண்டு பாடல்களும் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு என எங்கு பார்த்தாலும் ஒலிக்க விடப்படும்.
அழகர் காலையில் பச்சை பட்டுடுத்தி இறங்கி விட்டாலும் அடிக்குற வெயில்ல கையில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தோல் சாதனம் ஒன்றை வைத்து கொண்டு எங்கு பார்த்தாலும் இளைஞர்கள், சிறுவர்கள் அதை வைத்து அடித்துகொண்டு ஆங்காங்கே குழாய்கள், ஸ்பீக்கர்களில் ஒலிக்க விடப்படும் இந்த பாடல்களுக்கு நின்று டான்ஸ் ஆடுவது , அந்த பாடலை உள்ளுக்குள் ரசிப்பது என இன்று முழுவதும் ஆட்டம் களைகட்டும். எங்கு பார்த்தாலும் இந்த இரண்டு பாடல்கள்தான் பெரும்பாலும் ஒலிக்க விடப்படும்.
பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி பாடல் கடந்த 1990ம் ஆண்டு வெளிவந்த பெரிய வீட்டு பண்ணக்காரன் படத்தில் இடம்பெற்றது. படத்தை தயாரித்த சங்கிலி முருகன் மதுரை பக்கத்தை சேர்ந்தவர் அவரின் படக்கம்பெனி பெயரே மீனாட்சி ஆர்ட்ஸ்தான், அந்த மீனாட்சி பெயரிலும் நாங்க மதுரைக்காரங்க என காட்டும் விதத்திலும் இந்த பாடல் அமையப்பெற்றிருக்கும். நாயகன் நாயகியை மீனாட்சியாய் நினைத்து பாடுவதுதான் இந்த பாடல். பாடலை எழுதியவர் கவிஞானி கங்கை அமரன் அவர்கள்.
அண்ணன் இளையராஜாவுக்கும் தம்பி கங்கை அமரனுக்கும் அம்மனை பற்றி எழுத சொன்னாலோ பாட சொன்னாலோ, இசையமைக்க சொன்னாலோ பட்டைய கிளப்பி விடுவார்கள், இவர்களிடம் இந்த பாடலை அதுவும் மதுரை வாழ் மீனாட்சியை பற்றி சொன்னால் விடுவார்களா ? இந்த பகுதியிலேயே அண்ணன் இளையராஜாவும், தம்பி கங்கை அமரனும் வளர்ந்தவர்கள் வேறு.
அண்ணன் இசையமைக்க, தம்பி பாடல் எழுத என இந்த பாடலை ரொம்ப உணர்வுப்பூர்வமான கிராமிய வாத்தியங்களுடன் இப்பாடலை கேட்கும் அனைவரும் சாமி வந்து ஆடும் நிலைக்கு இந்த பாடலுக்கு இசையமைத்திருப்பார் இளையராஜா.
வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூமாலை போடும் இது திருநாளு, ஒரு பூந்தேறி பூட்டிவரும் பெருநாளு, மாறாத அன்பு வச்ச மகராசி மறையாத எண்ணம் வச்ச மீனாட்சி என எழுதி இருக்கும் வரிகளை மதுரைக்காரய்ங்க யாரும் கேட்ட உடனே சிலிர்க்குற மாதிரி வார்த்தைகளை போட்டு எழுதி இருப்பார் கங்கை அமரன்.
இது போல் கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த கள்ளழகர் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வாராரு வாராரு அழகர் வாராரு என்ற பாடல், தேனிசை தென்றல் தேவா இசையமைத்த இந்த பாடலில் இன்னொரு குரலாக தேவாவுடன் சேர்ந்து எஸ்.ஏ ராஜ்குமாரும் பாடியிருப்பார்.
இரண்டு பேரின் குரல்களும் ஹைபிட்ச்ல பாடும் கனத்த குரல்கள்,இரண்டு பேரின் குரல்களும் இந்த பாட்டுக்கு பொருந்தி போவது மிக சிறப்பு. இந்த பாடலை எழுதியவரும் தெக்கத்தி பகுதியை சேர்ந்தவர்தான், ஆம் கவிஞர் வைரமுத்துதான் இந்த பாடலை எழுதி இருக்கிறார். தேவாவை பலர் காப்பி கேட் அது இதுன்னு பல வருடமாக விமர்சித்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் தேவா போட்ட இந்த பாட்டுதான் பதில் . ஆம் பல வருடமாக இந்த பாட்டு நிலைத்து நிற்கிறது மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய vibe ஆக இந்த பாடல் இருக்கிறது
ஆம் அந்த அளவு இந்த பாடலுக்கு உணர்ச்சி பொங்க இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் பாடவும் செய்திருப்பதை, நாம் உணர முடியும் இப்பாடலில் ஒரு மணிச்சத்தம் ஒன்று கேட்கும் கேட்ட உடனே தேவாவும், எஸ்,ஏ ராஜ்குமாரும் இணைந்து பாடுவார்கள் பாருங்க செம ப்ளாஸ்டா இருக்கும்.
தேவா இசையமைத்த இந்த பாடல் வந்து 27 வருடங்களாக சித்திரை திருவிழாக்காலங்களில் மதுரையின் தேசிய கீதமாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இன்னொரு பாடலான பல்லாக்கு குதிரையில பாடல் 36 வருடங்களாக மதுரை மக்களின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #மதுரை சித்திரை திருவிழா #சித்திரை #🙏கோவில் #🙏ஆன்மீகம்


