எத்தனை காலங்கள் காத்திருப்பது?
விழி ஓரம் தேங்கிய கண்ணீர் துளிகள்
உன் பிம்பம் காணாமல் தவிக்கிறதே!
காலைப் பனியில் உன் முகம் தேடினேன், மாலை அந்தியில் உன் நிழல் தேடினேன்... கானல் நீராய் நீ விலகிச் சென்றால்
என் தாகம் எப்படித் தணியும்?
மூடிய இமைகளுக்குள் நீ இருக்கிறாய்,
ஆனால் திறந்த விழிகளுக்கு நீ எப்போது
விருந்தாவாய்?
உன் ஒற்றைப் பார்வையில் என்
யுகங்களின் தாகம் அடங்கும்...
உன் புன்னகை பூக்கும் அந்த நொடிக்காகவே
என் சுவாசக் காற்றும் காத்திருக்கிறது! #💖நீயே என் சந்தோசம்🥰


