நான்....
கண்ணீர் விட்டு
அழும் போதெல்லாம்
உன் கைகள்
கண்ணீரை துடைக்க
வராதா என்று
ஏங்குவேன். !
அருகே நீ வர மாட்டாயா
என்றும் பார்ப்பேன்.
உலராமல் உன்
நினைவுகள்
என் நெஞ்சில்
இருக்கும்படி
பார்த்துக் கொள்வேன்.
சத்தம் போட்டு அழுதால்
நெஞ்சின் பாரம் குறையும்
என்பதால்.
யாரும் இல்லா இடத்தில்
போய் அழுவேன்.
என் நிலை பார்த்து
இந்த பனி இரவும்
நிலவும் கூட
என்னோடு அழும்
சாரல் மழையாக
அது எனக்கு ஆறுதலாக
இருக்கும் அப்போது.
ஒன்றில் மட்டும்
உறுதியாக இருக்கிறேன்
உன்னை மறப்பதில்லை
என்பதில். ! #💝இதயத்தின் துடிப்பு நீ
உன்
பார்வைகள்
ஆசை கடிதங்கள்
ஆயிரம் எழுத
எந்தன் நெஞ்சம்
வெகு தொலைவில்.
உன்
வார்த்தைகளின்
போக்கால்
உறுதி சொன்னது.
நான்
பத்திரப்படுத்திய
ரகசியங்கள்
வெட்ட வெளிச்சம்
போட்டு காட்டும்
உன்
நினைவுகள்.
நீ
சிந்திய சிரிப்பை
எல்லாம்
சேகரிக்க
பத்திர படுத்த
முடியாமல் வீணாய்
சருகாய்
உலர்ந்து போனேன்
என்பது உண்மையே !! #💖நீயே என் சந்தோசம்🥰
கிழிந்து போன இதயம்
ஒட்டுபோட முடியாது.
நைந்து போன வாழ்க்கை
மீண்டும் புதுமையாகாது.
நினைவில் வேண்டுமானால்
காலத்தை கடத்தலாம்.
கண்களை மூடி மறந்து போன
வாழ்க்கை நினைக்கலாம்.
இப்பொது பழையதை எண்ணி
பயனில்லை என்று ஒதுக்கலாம்.
அன்றாடக் கனவுகளில் இமைகள் மூடி கிடைக்கலாம்.
இதைவிட்டு வேறு என்னசெய்ய. #💝இதயத்தின் துடிப்பு நீ
நான் உன்னிடம்
தோற்றுத்தான் போகிறேன்.
மௌனம்,
தனிமை
ஓவ்வொரு சந்திப்பிலும்.
கனவுகள்,
கற்பனைகள்.
துல்லியமாக என்னை
தூது சொன்ன விழிகள்
உன்.....
பார்வைகள்,
பரிசங்கள்.
இதிகாசம் படைக்கும்
இதயம்.
எந்தஒரு ரணமும் இல்லாமல்
வலிக்கும்
நெஞ்சம்.
நினைவுகளை பிழிந்து
நிற்கும் கடந்த காலம்
இப்படி.....
எவ்வளவோ !!
ஆனால்.....
ஒன்று மட்டும் உணர
என்னால் முடிகிறது.
நான்....
தோற்று போனேன்
என்பது மட்டும். #💝இதயத்தின் துடிப்பு நீ
மூச்சுக் காற்றில் அனல் தெறிக்க,
முழுதும் என்னுள் நீயாக...
இதழ் நனைக்கும் தேன் துளியில்
இன்னும் கொஞ்சம் கரைந்து போவோம்!
அங்கம் நனையும் வேர்வையெல்லாம்
அமுதமாக மாறிப்போக...
வெட்கம் எரித்த தீயினிலே
விடியல் வரை நாம் தொலைவோம்!
அடங்க மறுக்கும் ஆசையோடு
அணு அணுவாய் உன்னைத் தின்ன...
இடைவெளி இல்லா அணைப்பினிலே
இரு உயிரும் ஒன்றாய் இணையட்டும்! #💝இதயத்தின் துடிப்பு நீ
பகல் முழுக்கக் காத்திருந்து
உன்னைப் பார்க்க வந்தேன்...
ஆனால், நீயோ பேசாமல் மௌனமாக
மேகக் கூட்டங்களுக்குள் ஒளிந்து கொள்கிறாய்!
உனக்குத் துணையாக நான் வரவில்லை என்றா?
உன் அவசர தேவைக்கு நான் உதவவில்லை என்றா?
வருத்தம் வேண்டாம் என்னுடைய இந்த நிலையும் மாறும், அன்று ஓடோடி வந்து நிற்பேன் உனக்கு உதவுபவனாக, அது வரை சினம் கொள்ளாதே,
முழு நிலவாய் சிரித்தவள் இன்று என்
முகம் பார்க்காமல் கோபமாய் இருப்பது ஏனோ?
உன் மௌனம் கலைத்து ஒருமுறை பேசு...
உன் குளிர்ச்சியில் என் கவலைகள் கரையட்டும்!
உன் கோபம் நியாயம் தான் என்றாலும்,
உன் தோழனின் பாசத்தைப் பார் என் நிலாவே!
நிலாவின் பதிலை எதிர்பார்த்து... #💖நீயே என் சந்தோசம்🥰
விழிகளின் வீச்சில் விதியினைத் தொலைத்து
வெட்கப் பூக்கள் மெல்ல உதிர...
இதழ்களின் இதத்தில் இதயம் நனைய
இன்பத் தீ இங்கே பற்றிடுமோ!
காற்றின் இடைவெளி கூடக் கசக்க
தோளோடு தோள் உரசி...
வியர்வைத் துளிகள் கவிதை வடிக்க
தேகம் இங்கே தேனாகக் கரையுமோ!
நிச்சலன இரவின் நிசப்தத்தில்
இரு சுவாசங்கள் ஒன்றாகி...
பெயரற்ற ஓர் பரவசத்தில் நம்
உயிர்கள் மெல்ல உருகிப் பிணையுமோ! #💖நீயே என் சந்தோசம்🥰
முடிவே இல்லாத துயரங்கள் வந்து
முன்னால் நின்றாலும் கலங்கமாட்டேனடி...
முற்றுப்புள்ளி வைக்கும் மரணம் வந்தாலும்
முதுகு காட்டி நான் ஓடமாட்டேன்!
கல்லறைத் தொட்டில் என்னை அழைத்தாலும்
கவலை கொள்ளாமல் கடந்து வருவேன்...
காலன் வீசும் பாசக்கயிற்றையும்
நூல் இழை என அறுத்து எறிவேன்!
இத்தனையும் செய்ய எனக்குத் துணிவேது?
இமயம் நிகர்த்த உன் தோள் இருக்கையில்...
உன் விரல் கோர்த்து நான் நிற்கையில்
நிச்சயம் மரணமும் தோற்றுப் போகுமடி!
உயிர் பிரியும் வலியைக் கூட
உன் அருகாமை மருந்தாய் மாற்றுமடி...
சாவு வந்து என் கதவைத் தட்டினாலும்
உனக்காக மீண்டு வருவேன் நான்! #💖நீயே என் சந்தோசம்🥰
இரவின் மடியில் உறங்கிய உலகம்,
கதிரவன் வரவால் விழித்தெழுந்தது!
நேற்று நடந்தவை கனவாய் கரைய,
இன்று மலர்ந்தது புதியதோர் வாய்ப்பு!
முன்னேறிச் செல்வோம் நம்பிக்கையுடன்,
முயற்சியால் வெல்வோம் இந்த நாளை!
மலர்ந்த முகத்தோடு தொடங்குங்கள்,
#💖நீயே என் சந்தோசம்🥰













