இதயத்தின் ஆழத்தில் புதைந்திருக்கும் வலிகளை,
என் கண்ணீரால் நனைத்துத் துடைக்கிறேன்!
வலிகள் உன் இதயம் வரை ஊடுருவினாலும்,
என் உயிரால் உனக்குக் கவசம் அமைக்கிறேன்!
வெறும் வார்த்தைகளால் அல்ல,
என் மௌனத்தின் பிடியால் உன்னை அணைக்கிறேன்!
உலகம் உன்னைச் சிதைக்க நினைத்தாலும்,
என் காதலின் வேரில் உன்னை நிலைநிறுத்துகிறேன்!
வலி உன்னுடையது மட்டுமல்ல,
இனி அது நமக்கான சுமை!
உன் ஒவ்வொரு கண்ணீர்த்துளியும்...
என் இதயத்தின் வழியே வடியட்டும்!
வலி தீரும் வரை மட்டுமல்ல,
வலி மறக்கும் வரை உன்னோடு நான் இருப்பேன்!" #💖நீயே என் சந்தோசம்🥰


